
“நூறுசாமி’
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்: –
விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன்,
லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பானி குமார் கருணாஸ் , பாலாஜி
சக்திவேல்,
அருள்தாஸ், முனீஷ் காந்த், ஜென்சன்
திவாகர், பக்ஸ், வினோதினி, ,
மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
சசி.
மியூசிக்:-
பாலாஜி ஸ்ரீராம்.
ஒளிப்பதிவு:-
எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷ்
படத்தொகுப்பு:-
ஹரிஷ் யுவராஜ்
கலை இயக்குனர் :-
வி.சசிகுமார்.
தயாரிப்பாளர்கள்:-
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.
விஜய் ஆண்டனி .
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றி பிறகு
இயக்குனர் சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள நூறு சாமி திரைப்படம் .
அந்த சிறிய கிராமத்தில் சின்ன 26-வயதில் ( செல்வி) கணவனை இழந்து விதவையான பிறகு இரண்டு மகன்கள நல்ல படிக்க வைத்து சிரம பார்க்காமல் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்
குடும்பத்து மொத்த சுமையை தனது தோலில் சுமந்துக் கொண்டு வாழ்கிறார்.
ஸ்வாசிகா, தனது மகன்கள் கல்லூரி முதலாம் ஆண்டு
படிக்கும் தருணத்தில், தாய்க்கு மறுதிருமணம்
செய்ய விருப்பம் படுகிறார்கள். தனது விருப்பத்தை மூத்த
மகன் அஜய் திஷானிடம் சொல்லுகிற போது
தாய் பெரிய எதிர்ப்பபை
தெரிவிக்கிறார். அவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறார்.
ஆறு ஆண்டுகள் போன போது தனது அம்மாவின் விருப்பத்திற்கு
மதிப்பு கொடுத்து அஜய் திஷான், தனது தாய்க்கு மறுதிருமணம்
செய்து வைக்கிற முடிவுக்கு வருகிறார். அவரது முடிவுக்கு
அவரது சகோதரரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
இரண்டு மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்காக
மறுதிருமணம் செய்து வைக்க முயற்சி
செய்கிறார்கள்.
ஆனால், தனது சொந்தங்கள், அந்த ஊர் மக்களுக்கு
இதற்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் வருகின்றன.
அவர்களது ஊர்மக்கள் எதிர்ப்புகளை தவிர்த்து தனது அம்மாவுக்கு
மறுதிருமணம் செய்து வைத்தார்களா?
இல்லையா? என்பதை படத்தின் திரைக்கதைக்
களத்தில் .
இப்போதைய காலக்கட்டத்தில் இருக்கிற அந்த ஊரு மக்கள்
எல்லா பெண்களின் நியாயமான விருப்பத்தை
நிறைவேற்றுவதற்காக பெரிய தடைகள் இருக்கின்றது. இந்த
சமூகத்தில் உள்ள சில கட்டமைப்புகளை தவிக்க தெரியும், ஆனால் இந்த படைப்பை
பொறுப்புடன் இயக்கியிருக்கிறார். இயக்குநர் சசி,
இந்த உண்மை சம்பவத்தை மையமாக பொருளாக கொண்டு வந்து
இன்றும் அறியாமை வாய்லாக மழுங்கிய மனநிலை இருக்கும் இந்த சமூகத்தின் மீது
ஒரு சாட்டையடியாக இந்த படைப்பை நமக்கு தந்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஸ்வாசிகா, செல்வி
என்கிற கதாபாத்திரத்தில், அவரது மன போராட்டங்களை
தனது நடிப்பில் மூலம் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி
நடித்திருக்கிறார்.
மறுதிருமணம் பத்திய தன்னுள் உள்ள விருப்பத்தை, அதற்கு எதிர்ப்பு
தெரிவித்த மகனின் செயலை கண்டு அதிர்ந்து வியந்து போனது, பிறகு
அந்த மகன்களை பிரிய வேண்டிய சூழ்நிலையை
நினைத்து பார்த்து கண்ணீர் விட்டு கூறுவதும் தனது
தனிமையை தனது மனதில் உள்ள ஆதங்கத்தை
வீட்டில் இருக்கிற மின் விசிறியை பார்த்து சொல்வதும் படம் முழுக்க தனது
நடிப்பின் மூலம் தாங்கிப் பிடித்து நடத்திருக்கிறார்.
இதுல சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய்
ஆண்டனியின் திரைப்பட இருப்பில் படத்திற்கு மிக பெரிய பலத்தையும்
அடையாளத்தையும் கொடுத்திருக்கிறார். பெரிய அளவுக்கு அவரது
கதாபாத்திரற்கான நீண்ட வாய்ப்புகள் குறைவு இருந்தாலும், இதுல சில வசனங்கள் மூலமாக அவரது
கதாபாத்திரத்தில் பெரிய கவனத்தை ஈர்க்க பெறுகிறார் கொஞ்சம் கூட
அல்டாமல் நிதத்துடன் பொறுப்புடன்.நடித்
திருக்கிறார்.
ஸ்வாசிகாவின் மகன்களாக நடித்திருக்கிறார். அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில்,
கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ்,
முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி
என அனைவரும் கொடுத்த வாய்ப்புகன
வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ்
கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை உண்மைக்கு
நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பாலாஜி ஸ்ரீராம் இசையின் பின்னணி இசை காட்சிகளுக்கு,
கதாபாத்திரங்களு
க்கு ஏற்ப உயிர் கொடுத்திருக்கிறார்.
ஹரிஷ் யுவராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு
மற்றும்
கலை இயக்குநர் வி.சசிகுமாரின் பணி
படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிற வகையில் பயணித்திருக்கிறார்.
உண்மை சம்பவத்தை மையப் பொருளாக
கதை இருந்தாலும், அதை சினிமா மாதிரி மிக சிறப்பாக
படைத்திருக்கிறார். இயக்குநர் சசி,
தனது பிள்ளைகள் பெரியவர்களான
வன பிறகு நடக்கிற
தாய் மறுதிருமணத்திற்குஎதிர்ப்பு
தெரிவிப்பவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி
திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்
கிறார்.இயக்குனர்
முதல் பாதி சோகமான கதையில் அதிகமான வசனங்கள். நிறைந்துள்ளது.
இருந்தாலும் கூட கதை நெடுந்தூரம் பயணிப்பதால் படத்தை கொஞ்சம்
சோர்வடைய செய்வது இருந்தாலும்,
இரண்டாம் பகுதியில் கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான
நடிப்பில் ஒட்டம் மற்றும் இறுதி காட்சிகளில் நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக
கொடுத்த விதம் ஆகியவை குறை இல்லாமல் படத்தை பாராட்ட வைக்கின்றன.
படம் பார்த்தத்தில், “நூறுசாமி” பெண்களின் மனதளவில்
ஆழத்தை கண்டு பிடிக்க முடியாது.என்பதை (உதாரணம்) கடல்
ஆழத்தை கண்டு பிடித்துள்ளனர் பெண்கள் அவர்கள் மனதில்
உள்ள ஆழத்தை கண்டு பிடிக்க
முடியாது.என்பதை இந்த படத்தின் கருத்தை
வலியுறுத்திருக்
கின்றன. இந்த நூறுசாமி படத்தின்
கதைக்களம்.
பெண்களை தெய்வமாக பார்க்காமல் ஒரு சாதாரண மனுஷ்ய
பாருங்கள். குடும்பம் பெண்ணை ஒரு தூணாக சொல்வது தான் நூறுசாமி
அனவரும்
குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.