சுதந்திரதினசிறப்புபட்டிமன்றம்

Share the post

சுதந்திரதினசிறப்புபட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் சுதந்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

 சுதந்திர இந்தியாவில் நமது வாழ்க்கை சங்கடமா, சந்தோஷமா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இன்றைய வாழ்க்கை சங்கடம்தான் என்ற அணியில் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், திருமதி.வேம்பு பாலா, திரு.நவஜோதி ஆகியோர் பங்கேற்று இன்றைய காலக்கட்டத்தில் நாம் அன்றாடபட்டுவரும் துன்பங்களை பட்டியலிட்டு தன் கருத்துக்களை முன்வைத்தனர்.

சிற்சில துன்பங்கள் இருந்தாலும் நம் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாகவே இருக்கிறது. அவற்றை கண்டுகொண்டு நாம் மனநிறைவு அடைய வேண்டும் என்ற கருத்தை ஆர்ஜே விஜய், செல்வி.ஐஸ்வர்யா, திரு.உமாசங்கர் ஆகியோர் வலியுறுத்தி பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய நடுவர் மணிகண்டன், இருதரப்பு வாதங்களையும் பகுத்தாய்ந்து நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பு என்ன என்பதை சுதந்திர தினத்தன்று கண்டுகளியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *