கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன் நுகர்வோர்கள் தங்கள் டிஜிட்டல் ஐடிகள் மற்றும் ஆவணங்கள், போர்டிங் பாஸ், இரயில் டிக்கெட்டுகள் மற்றும் ஃபாஸ்டேக் கணக்கை ஒரே பாதுகாப்பான இடத்திலிருந்து அணுகலாம் – சாம்சங் வேலட்

Share the post

கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன் நுகர்வோர்கள் தங்கள் டிஜிட்டல் ஐடிகள் மற்றும் ஆவணங்கள், போர்டிங் பாஸ், இரயில் டிக்கெட்டுகள் மற்றும் ஃபாஸ்டேக் கணக்கை ஒரே பாதுகாப்பான இடத்திலிருந்து அணுகலாம் – சாம்சங் வேலட்

  • சாம்சங் வேலட் ஏற்கனவே உள்ள சாம்சங் பே மற்றும் சாம்சங் பாஸ் அம்சங்களை ஒன்றிணைத்து, நுகர்வோர்கள் ஒரு டேப் அண்டு பே கார்டுகளை, வைத்திருக்கவும், யுபிஐ பேமண்டுகள் மற்றும் பில் பேமண்டுகளை செலுத்துவதை அனுபவிக்கவும் இயலச் செய்கிறது.
  • சாம்சங் வேலட்டிலிருந்து ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், மற்றும் வாகன பதிவுச் சான்று போன்ற டிஜிட்டல்  ஐடிகளை அணுக பயனர்களை அனுமதிக்கிறது.
  • சாம்சங் வேலட் இப்போது தங்கள் ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யவும் நிர்வகிக்கவும், விமான போர்டிங் பாஸ்கள் சேமிக்கவும் மற்றும் இரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யவும் சேமிக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.

சென்னை – சாம்சங், இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர்கள் மின்னணு பிராண்டு, சாம்சங் வேலட்டின் ஒரு பகுதியாக கேலக்ஸி ஸ்மார்ட் ஃபோன் நுகர்வோர்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், மற்றும் வாகனப் பதிவு சான்று போன்ற தங்கள் அத்தியாவசிய டிஜிட்டல் ஐடிகள் அனைத்தையும் பயனர்கள் அணுகலாம் என்பதை அறிவித்துள்ளது. இது #PoweringDigitalIndi என்கிற அதன் நோக்கத்திற்கான இந்தியாவின் ஒரு வலிமையான பங்குதாரராக இருப்பதற்கான சாம்சங்கின் பொறுப்பினை மீண்டும் வலியுறுத்துகிறது. தங்கள் ஃபோன்களில் தங்கள் கோ-வின் தடுப்பூசி சான்றுகளை சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை சேமிக்கலாம்.

மேலும், சாம்சங் சாம்சங் வேலட்டில் முற்றியலும் புதிய பல்வேறு பயண மற்றும் மொபிலிட்டி அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அது கேலக்ஸி ஸ்மார்டஃபோன்களில் சாம்சங் பே மற்றும் சாம்சங் பாஸுக்கான நடப்பு அம்சங்களை இணைத்து மேம்பத்தியுள்ளது, இது நுகர்வோர்கள் ஒரு டேப் அண்டு பே கார்டுகளை வைத்திருக்கவும், யுபிஐ பேமண்டுகள் மற்றும் பில் பேமண்டுகளை செலுத்துவதை அனுபவிக்கவும் இயலச் செய்கிறது.

இந்த புதிய அம்சங்களுடன், மற்றவற்றோடு பயனர்கள் ஃபாஸ்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யவும் சரிபார்க்கவும் முடியும், ஒரு விரைவான மற்றும் வசதியான அணுகலுக்காக தங்கள் விமான போர்டிங் பாஸ்களை சேமிக்க முடியும் மற்றும் டிக்கெட்களை புக் செய்வது மற்றும் சேமிப்பது, இரயிலின் நிலையை சரிபார்ப்பது போன்ற இரயில் பயணச்சீட்டுகளுக்கான ஒரு முழுமையான தீர்வினை ஒருங்கிணைக்க முடியும்.  ஒரு QR குறியீடு அல்லது பார் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது படம் அல்லது பிடிஎஃப்பை சாம்சங் வேலட்டில் இறக்குமதி செய்வதன் மூலம் இரயில் பயணச் சீட்டுகளை அல்லது போர்டிங் பாஸ்களை பயனர்களால் சேர்க்க முடியம்.

பயனர்களுக்கு முற்றிலும் வசதியான தேர்வாக ஆக்கி, விமான நுழைவதற்குத் தேவையான அடையாளச் சான்று மற்றும் பயண ஆவணங்களை பயனர்களால் சாம்சங் வேலட்டிலிருந்து காட்ட முடியும்.

நான்கு டிஜிட்டல் ஐடிகள் – ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிம் மற்றும் வாகன பதிவு சான்று தவிர – பயனர்களால் 2,000க்கும் மேற்பட்ட பிற ஐடிகள் / ஆவணங்களை நேரடியாக சாம்சங் வாலட்டில் இருந்து அணுக முடியும். எனினும், சாம்சங் எந்தவொரு தகவலையும் சேமிக்காது மற்றும் விவரங்கள் சாம்சங் வேலட்டின் செயலியின் உள்ளிருக்கும் சாதனத்தில் மட்டுமே காட்சிப்படுத்தும்.

”சாம்சங் வேலட் பயன்படுத்துவதற்கு எளிதானது, ஒரு பயனரின் டிஜிட்டல் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு பாதுகாப்பான தளமாகும். மற்றவற்றோடு டோக்கனைஸ் செய்யப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், யுபிஐ, டிஜிட்டல் ஐடிகள், பயணச் சீட்டுகள், மற்றும் போர்டிங் பாஸ்கள், கோ-வின் தடுப்பூசி சான்றுகளை உள்ளடக்கி, உங்கள் அத்தியவசியப் பொருட்கள் அனைத்தையம் நீங்கள் அணுகலாம். சாம்சங் வேட்டிலிருந்து புதிய ஆச்சரியமான அம்சங்களுடன் சாம்சங் பே பற்றி நீங்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் அது உள்ளடக்குிறது. சாம்சங் வேலட்டுடன், மொபைல் சாதனஙகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பதிய அளவிலான சௌகரியத்தைக் கொண்டு வரும் வகையில், தங்களின் கார்டுகள், ஐடிகள் மற்றும் ஆவணங்களை அணுகுவதற்கான ஒரு முற்றிலும் பாதுகாப்பான மற்றும் பத்திரமான சூழலை நாங்கள் நுகர்வோர்களுக்கு வழங்குகிறோம். டிஜிட்டல் இந்தியாவுக்கு வலுசேர்ப்பதற்கான எங்களின் நோக்கத்துடன் இந்தியாவின் ஒரு வலுவான பங்குதாரராக இருப்பதற்கான எங்களின் பொறுப்பினையும் இது வலுப்படுத்துகிறது,” என்று சாம்சங் இந்தியாவின் சேவைகள் மற்றும் ஈடுபாட்டின் இயக்குனர் திருமதி ரேஷ்மா விர்மானி கூறினார்.

கொரியாவிற்கு வெளியே சாம்சங்கின் மிகப்பெரிய R&D மையமான பெங்களூரில் உள்ள சாம்சங் R&D இன்ஸ்டிட்யூட்டில் (SRI-B) பொறியாளர்கள், வடிவமைப்புகள் மற்றும் தயாரிப்பு மேலாளர்களின் பிரத்யேக குழு, சாம்சங் வேலட்டின் இந்த புதிய அம்சங்களை உருவாக்கியுள்ளது. இந்த அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்களுக்காக SRI-B ஆல் உருவாக்கப்பட்ட பல இந்தியா சார்ந்த அம்சங்களின் ஒரு பகுதியாகும்.

பயனர்கள் யுபிஐ, பில் செலுத்துதல்கள், டிஜிட்டல் ஐடிகள் மற்றும் மொபிலிட்டி ஆவணங்கள், ஃபாஸ்டேக், பரிசு அட்டைகள், கூப்பன்கள் இன்னும் பலவற்றை தங்கள் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன்களில் இருந்து ஆஃப் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன் மற்றும் ஹோம் ஸ்கிரினிலிரந்து சாம்சங் வேலட்டை திறப்பதற்காக வெறுமனே ஸ்வைப் செய்யலாம்.

சாம்சங் வேலட் அதற்கு மேலே அப்பால் சென்று உங்கள் தரவினை மால்வேர் மற்றும் பிற சாத்தியமுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும் ஒரு பாதுகாப்பான சூழலில் பாதுகாக்கிறது. பயனர்களின் தனிப்பட்ட மற்றும நிதிசார்ந்த தகவல்களை பாதுகாப்பதற்காக டோக்கனைசேஷன் போன்ற பல்வேறு சிறப்புப் பாதுகாப்பு முறைகளை இது பயன்படுத்துகிறது. இதற்கு மேலாக, பாதுகாப்புத்துறைத் தளமான சாம்சங் நாக்ஸ் மால்வேர்கள் மற்றும் பிற அசு்சுறுத்தல்களில் இருந்து பயனர்களின் மொபைல் சாதனத்தைத் தொடர்ந்து கண்காணித்து பாதுகாக்கிறது.

சாம்சங் பே-வைப் பயன்படுத்தி எளிதாக பணம் செலுத்துங்கள்

சாம்சங் பே, இப்போது சாம்சங் வேலட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது, இது பணம் செலுத்துவதற்கு எளிய மற்றும் பாதுகாப்பான வகையாகும். உங்கள் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி ஸ்வைப் செய்து அல்லது தட்டி ஒரு பேமண்டை நீங்கள் செலுத்தலாம் மற்றும் அதன் சிறப்பான வகையில் செளகரியத்தை அனுபவிக்கலாம்.

சாம்சங் பாஸை பயன்படுத்தி பாதுகாக்கப்படுவது

மேலும், சாம்சங் வேலட் சாம்சங் பாஸைக் கொண்டிருக்கிறது அது வாடிக்கையாளர்களுக்கு சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகள் மூலம் செயலிகள் மற்றும் சேவைகளுக்கான எளிதான அணுகலைத் தருகிறது. சாம்சங் பாஸ் ஐடென்டிட்டி மேனேஜ்மென்டை ஒரு சேவையாக வழங்குகிறது, அது பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் அணுகல் பாதுகாப்பாக இருப்பதை இயலச் செய்கிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் பயனர்கள் ஆப்கள் மற்றும் சேவைகளில் லாக் இன் செய்யலாம்.

அது எத்தனை எளிதானதோ அத்தனை பாதுகாப்பானது, சாம்சங் நாக்ஸால் பாதுகாக்கப்படுகிறது

சாம்சங் வேலட்டானது ஒரு பாதுகாப்புத்துறை தரத்திற்கான தளமான, சாம்சங் நாக்ஸால் பாதுகாக்கப்படுகிறது. பாதுகாப்பானது விரல் ரேகை அங்கீகாரம் மற்றும் என்கிரிப்ஷனை உள்ளடக்குகிறது, அது பயன்களின் சென்சிடிவ்வான தரவுகளை் பாதுகாக்க உதவுகிறது, எனவே சாதனத்தின் உரிமையாளர்கள் மட்டுமே தங்களின் முக்கியத் தகவல்களை அணுக முடியும். சாம்சங் நாக்ஸ் உடன், குறிப்பிட்ட கீ சென்சிட்டிவ் உருப்படிகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் சாம்சங் வேலட்டி ஸ்டோர் செய்யப்பட்டிருக்கும் – எம்பெட் செய்யப்பட்ட பாதுகாப்பான கூறு, டிஜிட்டல் மற்றும் ஃபிஸிக்கல் ஹாக்கிங்கிற்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது.

தங்கள் ஃபோன் தொலைந்துபோனாலும், சாம்சங் நாக்ஸ் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் தங்கள் சாம்சங் வேலட்டில் உள்ள அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை அறிவதன் மூலம் பயனர்கள் மன நிம்மதி கொள்ளலாம். ஸ்மார்ட் திங்க்ஸ் ஃபைன்ட் உடன், சாம்சங் வேலட் டை தொலைவிலிருந்தும் இயலாமல் செய்யலாம், மற்றும் பயனர்கள் தங்கள் சாதனத்தை தொலைவிலிருந்தும் ஒரு கூடுதல் அடுக்கு பாதுகாப்பிற்காக லாக் செய்து கொள்ளலாம்.

கிடைக்கும் தன்மை

கேலக்ஸி ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தற்போதைய சாம்சங் பே சேவையை கேலக்ஸி ஸ்டோர் மூலம் சாம்சங் வேலட்டுக்கு அப்டேட் செய்யலாம். ஆட்டோ மோடிலும் மற்றும் மேனுவல் மோடிலும் அப்டேட் கிடைக்கப் பெறுகிறது.

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கம். லிமிடெட் பற்றி

சாம்சங் உலகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்க கருத்துக்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள், ஸ்மார்ட்போன்கள், மடிகணினி சாதனங்கள், டேப்லட்கள், டிஜிட்டல் உபகரணங்கள், நெட்வொர்க் அமைப்புகள் மற்றும் நினைவகம், கணினி LSI, ஃபவுண்டரி மற்றும் LED தீர்வுகள் ஆகியவற்றின் உலகத்தை நிறுவனம் மறுவரையறை செய்கிறது. சாம்சங் இந்தியாவின் சமீபத்திய செய்திகளுக்கு, தயவுசெய்து சாம்சங் இந்தியா நியூஸ்ரூமுக்குச் செல்க. http://news.samsung.com/in இந்திக்கு, சாம்சங் நியூஸ்ரூம் பாரத்தில் புகுபதிகை செய்யவும் https://news.samsung.com/bharat நீங்கள் ட்விட்டரில் @SamsungNewsIN இல் எங்களைப் பின்தொடரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *