சாருமதியின் நினைவாக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்:

Share the post

சாருமதியின் நினைவாக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்:

சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி என்னும் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை
மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது:

அரிமா ரவிசந்திரன், வித்யா ரவிசந்திரன் அவர்களின் மகள் 4 மாத குழந்தையின் கண்கள் 1994ம் வருடம் தானமாக கொடுக்கப்பட்டது அதன் நினைவாக திருவான்மியூர் அரிமா சங்கம் மற்றும் சென்னை ஆற்காடு சாலை அரிமா சங்கமும் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை தலைமையில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு கண் சிகிச்சை
நினைவு முகாம் சென்னையில் 6வது முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த இலவச சிறப்பு முகாமை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.வி பிரபாகராஜா துவக்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அரிமா சங்க மாநில தலைவர் இளங்கோ மாணிக்கம், வட்டார தலைவர் என்.எஸ். பாலசுப்ரமணியம், ஆர்.ராஜ்குமார், செயலாளர் ஜி.ரவி, ஆர்.ரகுநந்தன்,
எம்.எஸ்.பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாருமதியின் பெற்றோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *