உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு

Share the post

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு

————-

சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி மதியம் 12:30 மணி மற்றும் மீண்டும் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு

சென்னைஅக்.28,2021 : இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் ஒளிபரப்ப உள்ளது. திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள, ஸ்பெஷல் பார்ட்னர் கோல்டு வின்னர் எல்டியா பியூர் கோக்கனட் ஆயில் வழங்கும் இந்த அதிரடி திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந்தேதி ஞாயிறன்று சண்டே சினி ஜம்போவில் நண்பகல் 12.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. 

சாந்தகுமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகனாக ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மகிமா நம்பியார்இந்துஜா ரவிச்சந்திரன்காளி வெங்கட்ரோகினிஜெயபிரகாஷ்இளவரசு மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் இரண்டு சகோதரர்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ் (இரு வேடங்களிலும் ஆர்யா நடித்துள்ளார்) ஆகியோரை சுற்றி வருகிறது.

மகாதேவன் குற்றம் செய்வதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் அவன் அதிலிலிருந்து வெளியேறி தன் மீது பாசம் வைத்துள்ள தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்க கடினமாக உழைக்கிறான். அதேசமயம் முனிராஜ் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மீது  நம்பிக்கை வைத்துள்ளான். அதை அவன் சிறு குழந்தைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறான். முனிராஜின் உத்வேகத்துடன் அமைதி மற்றும் அகிம்சைக்கான மகாதேவனின் தேடலைச் சுற்றியே மீதமுள்ள கதைக்களம் அமைந்துள்ளது.

இது குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சியில் இப்படியொரு சுவாரசியமான கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பது உண்மையிலேயே சிறப்பானது. பார்வையாளர்கள் ஒரு சிறப்பான வார இறுதியை எதிர்பார்க்கலாம், மேலும் இது பார்க்க வேண்டிய பயனுள்ள படம் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

இது குறித்து இயக்குனர் சாந்தகுமார் கூறுகையில், எனது இரண்டாவது படமான இந்த திரைப்படம் கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல கதை அம்சம் கொண்டுள்ள இந்த படத்தில் அற்புதமான நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். பார்வையாளர்களுக்கு இந்த வார இறுதி பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

.இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இரண்டு சகோதரர்களின் மனதைக் கவரும் பயணத்தை மதியம் 12.30 மணிக்கும் மாலை 4 மணிக்கும் பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *