
பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் தனது புதிய மற்றும் துரிதமான வளர்ச்சிக் கட்டத்தைக் குறிக்கும் வகையில், திரு. மது நாயர் அவர்களைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது
சென்னை, ஆகஸ்ட் 13, 2026 – பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் இந்தியா, திரு. மது நாயர் அவர்களைத் தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்துள்ளது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில், விரிவான மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வலுவான சக்தியாக உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டு நிறுவனம் எடுத்துள்ள தீவிர முயற்சியை இந்த நடவடிக்கை குறிக்கிறது.
இந்த நியமனம் ஒரு முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது: இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சராசரி நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு (ஏஏயுஎம்)# 2026 ஜூலை முடிவில் ₹86.33 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஏஏயுஎம்* 31 ஜூலை 2026 நிலவரப்படி ₹57,000 கோடியைக் கடந்துள்ளது. இந்தத் தலைமை மாற்றத்தின் மூலம், நிறுவனம் இத்துறை வளர்ச்சியில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, அதை முன்னெடுத்துச் செல்லும் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
பாங்க் ஆஃப் பரோடாவில் இருந்து மாற்றுப்பணி முறையில் வந்து, நிறுவனத்தை ஒரு முக்கிய வளர்ச்சிப் பாதையில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. சஞ்சய் குமார் குரோவர் அவர்களுக்குப் பதிலாக திரு. மது நாயர் அவர்கள் பொறுப்பேற்கிறார்.
“பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் குழுவை திரு. நாயர் வழிநடத்த இருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரது தலைமையின் கீழ், நமது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நமது விரிவான வாடிக்கையாளர் தளத்தையும் பாரதத்தின் கடைக்கோடிச் சென்றடையும் வலிமையையும் சிறப்பாகப் பயன்படுத்தி, சந்தை சார்ந்த முதலீட்டுத் தீர்வுகளைப் பரந்த அளவிலான மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று பேங்க் ஆஃப் பரோடாவின் நிர்வாக இயக்குநரும், பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் (BBNPAM) வாரியத்தின் தலைவருமான திருமதி. பீனா வஹீத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் ஆசியா ஆகியவற்றின் இந்த கூட்டு நிறுவனம், இப்போது தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகிறது. பேங்க் ஆஃப் பரோடாவின் விரிவான உள்நாட்டு மற்றும் சர்வதேச பிணையத்துடன், பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் உலகளாவிய முதலீட்டு நிபுணத்துவம் மற்றும் ஆராய்ச்சித் திறன்களின் அடித்தளத்தில் இந்த வளர்ச்சி கட்டமைக்கப்படுகிறது.
“இந்தியச் சொத்து மேலாண்மை கூட்டு நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை விரைவுபடுத்த உதவக்கூடிய தலைமையும் ஆழமான துறைசார் அனுபவமும் கொண்ட திரு. மது அவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிகமான முதலீட்டாளர்கள் செல்வம் சேர்ப்பதற்காகச் சந்தை சார்ந்த முதலீட்டுத் தீர்வுகளை நோக்கி வரும் நிலையில், இந்தியச் சந்தை மகத்தான நீண்டகால சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய வாடிக்கையாளர்கள் தங்களது நிதி இலக்குகளை அடைய உதவும் வகையிலான தயாரிப்புகளை உருவாக்குவதில் பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டிற்கு ஆதரவளிப்பதில் பிஎன்பிபிஏஎம் (BNPPAM) பெருமிதம் கொள்கிறது,” என்று பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் மூலோபாய பங்களிப்புகள் மற்றும் கூட்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் இணை இயக்குநருமான திரு. வின்சென்ட் ட்ரூயார்ட் பெரோட் தெரிவித்துள்ளார்.
திரு. நாயர் சொத்து மேலாண்மைத் துறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மூத்த வல்லுநர் ஆவார். எச்பிஎஸ்சி, இன்வெஸ்கோ, கோடக் ஆகிய நிறுவனங்களில் உயர் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ள இவர், மிகச் சமீபத்தில் யூனியன் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவரான இவர், உலகளாவிய மூலோபாயப் பார்வையுடன், இந்தியாவின் விநியோக முறை மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் நடத்தை குறித்த ஆழமான கள அனுபவத்தையும் கொண்டுள்ளார். அதிவேக வளர்ச்சியை நோக்கித் தயாராகி வரும் ஒரு நிறுவனத்திற்கு இந்த இரட்டைத் தகுதி மிகச் பொருத்தமானதாகும்.
நிறுவனத்திற்கான இவரது தொலைநோக்குப் பார்வை தெளிவானதும் தொலைநோக்குடையதும் ஆகும். இந்திய குடும்பங்கள் இதுவரை அறிந்திராத வகையில் சந்தை சார்ந்த செல்வப் பெருக்கத்தை அடையும் வழிமுறையாக பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டின் தயாரிப்புகளையும் முதலீட்டு நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, இந்தியாவின் ‘அமிர்த கால’ வளர்ச்சிப் பயணத்தை ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திற்குமான நடைமுறைப் பயன்களாக மாற்றுவதே இவரது இலக்காகும்.
“பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் பங்குதாரர்கள் மற்றும் வாரியம் என் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அளித்த பொறுப்புக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், நமது முதலீட்டாளர்கள், கூட்டாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் ‘ஒன்றாக இணைந்து மேலும் உயர்வோம்’ (Together for More) என்ற நமது பிராண்ட் வாக்குறுதியை நிச்சயமாக உண்மையாக்குவோம் என்று நான் நம்புகிறேன். நிறுவனத்தை அதன் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதையும், நமது பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்குவதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என்று பரோடா பிஎன்பி பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மது நாயர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதிலும், நிலையான வளர்ச்சி என்பது குறிப்பிட்ட நோக்கம் கொண்ட அமைப்புகளை உருவாக்குவதில் இருந்தே வருகிறது என்ற நம்பிக்கையில் திரு. நாயர் உறுதியாக இருந்துள்ளார்; அதாவது, எந்தவொரு தனிப்பட்ட புராடக்ட் சுழற்சி அல்லது காலாண்டு இலக்குகளையும் தாண்டி ஒரு பெரிய இலட்சியத்திற்காகத் திறமையான குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் நிறுவனங்களை அவர் நம்புகிறார். நிறுவன அளவிலான மூலோபாயத்தையும், கலாச்சாரம் மற்றும் குழு உருவாக்கத்திற்கான உண்மையான அர்ப்பணிப்பையும் இணைக்கும் இந்தத் தத்துவமே, தற்போது பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்டில் அவர் ஏற்றுள்ள பொறுப்பின் மையக்கருத்தாக விளங்குவதாகும்.