கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 26-ந் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு “தமிழோடு விளையாடு” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

Share the post

கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 26-ந் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு “தமிழோடு விளையாடு” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர். முழுக்க முழுக்க தமிழில், தமிழை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான சுற்றுகள், அறிவை வளர்க்கும் கேள்விகள் என உணர்ச்சிப்பூர்வமாக உருவாகியிருக்கிறது.
போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்கும் மாணவர்களின் திறமைகளையும், தமிழின் பெருமையையையும் காணத்தயாராகுங்கள். “தமிழோடு விளையாடு” ஞாயிறுதோறும் மாலை 6 :00 மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *