சத்தியம் தொலைக்காட்சியில் மக்களின் மனதில் உள்ள எதிர்பார்ப்பு, தேவைகள் என்று மக்களின் குரலாய் ஒலிக்கிறது ‘மக்கள் மனசு’.

Share the post

‘மக்கள் மனசு’

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் உரக்க சொல்லி வரும் சத்தியம் தொலைக்காட்சியில் மக்களின் மனதில் உள்ள எதிர்பார்ப்பு, தேவைகள் என்று மக்களின் குரலாய் ஒலிக்கிறது ‘மக்கள் மனசு’.

மக்கள் மனதில் எழும் கேள்விகளை பிரதிபலிக்கிறது இந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு நாளும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு துறை சார்ந்த நிபுணர்கள் அதற்கு தேவையான, ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். அத்துடன் மக்கள் மனசு நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3:00 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியை தொகுத்து நெறிபடுத்துகிறார் செய்தியாளர் கோபாலகிருஷ்ணன், மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக சுந்தர் செயல்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *