சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது !!

Share the post

சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது

மார்ச் 21, 2024, சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. இது, நோயாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனையின் திறன்களில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவர் குடும்பத்தில் வேறொரு தானம் கொடுப்பவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவர் முத்துக்குமார் P, மருத்துவர் கார்த்திகேயன் B, மருத்துவர் ராஜா R, மருத்துவர் பிரதீப்குமார் K, மற்றும் மருத்துவர் முத்து வீரமணி உள்ளிட்ட புகழ்பெற்ற மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும், நிபுணர்களும் கொண்ட குழு, இந்தச் செயல்முறையைச் செய்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி நன்றாகக் குணமடைந்தார் மற்றும் அவரது சிறுநீரக செயல்பாடு திறம்பட மீட்டெடுக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு, அவர் தன் அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமாகச் செய்யும் வலிமையைப் பெற்றிருக்கிறார். இனி அவருக்கு டயாலிசிஸ் தேவையில்லை.

மூத்த ஆலோசகரும், சிறுநீரக மருத்துவரும், மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் முத்துக்குமார் P, “இங்கு செய்யப்பட்ட எங்கள் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையின் முடிவைக் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இறந்த நன்கொடையாளரின் குடும்பத்தின் பெருந்தன்மைக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். தானம் செய்யப்பட்ட சிறுநீரகத்திற்கு நன்றி, அதனால் ஒரு நபருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. மருத்துவர்கள் குழுவின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் ஆதரவை நான் பாராட்ட விரும்புகிறேன். நோயாளி நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

“இது எங்களின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை. இறந்த நன்கொடையாளரின் சிறுநீரத்தை நோயாளிக்கு மாற்றும் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை, மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதிகளாலும், சிறந்த மருத்துவர்களின் குழுப்பணியாலும், திறம்பட சிக்கல்கள் இல்லாமல் செய்ய முடிந்தது” என்றார் சிறுநீரகவியலின் மூத்த ஆலோசகரான மருத்துவர் ராஜா R.

ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில் உள்ள ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிட்னி சயின்சஸ்’, அதிக சவால் மிக்க மாற்று அறுவைச்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *