எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டக் குழு திரை விமர்சனம்!!

Share the post

எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டக் குழு திரை விமர்சனம்!!

உத்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா, பிரீத்தி சங்கர், உஷா த உத்ரா எழுதி இயக்கி தில் வெளி வந்திருக்கும் படம் எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டக் குழு

இப்படத்தில் சரத், ஐரா, அருவி மதன் , கஞ்சா கருப்பு, நரேன் , எஸ். இளையராஜா, முத்து வீரா ஹரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கூலித் தொழிலாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பொழுது போக்காக ஆடி , ஒரு நிலையில் அதையும் மீறி மிகச் சிறப்பாகப் பரிமளிக்கிறார்கள். இதனைப் பார்க்கும் வாத்தியார் என்ற புனைப் பெயர் கொண்ட மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் அருவி மதன் அவர்களுக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து ‘எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டக் குழு’ என்ற அணியையே உருவாக்கி, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் ஆட வைத்து , அவர்களில் சிறப்பான சிலரை , தமிழ்நாடு கால்பந்து அணியில் இடம் பெற வைக்க, கால்பந்து கமிட்டிக்கு பரிந்துரை செய்கிறார் .

கர்ணா சரத் என்ற இளைஞன் உட்பட சிலர் அப்படி தேர்வாகின்றனர் . கர்ணா வுக்கு ஒரு காதலியும் ஐராஉண்டு

இப்போதுதான் பிரச்னை வருகிறது .

அங்கு மரம் அறுக்கும் தொழில் உட்பட பல தொழில்கள் , தவிர வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் இவை எல்லாம் செய்து வரும்- அரசியல் பலம், ஆதிக்க சாதி பலம், அடியாள் பலம் கொண்ட- தாதா ஒருவர் , அந்த இளைஞர்கள் மாநிலக் கால்பந்து அணியில் ஈடுபடுவதைத் தடுத்துக் கெடுக்கிறார்

அந்த கால்பந்து வீரர்கள் சிலர் உட்பட, அவர்களது நண்பர்கள் உறவினர்கள் பலர் அவரது தொழிற்கூடங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள்.

இந்த இளைஞர்கள் கால்பந்தில் புகழ் பெற்று அதைப் பார்த்து மற்றவர்களும் , கால்பந்து, மற்ற விளையாட்டுகள் , படிப்பு இவற்றின் பக்கம் பார்வையைத் திருப்பி விட்டால், வருங்காலத்தில் தனது தொழில்களுக்கு கூலி ஆட்களும் வட்டிக்கு கடன் வாங்கும் ஆட்களும் குறைந்து போவர்கள் என்பதே அதற்குக் காரணம் .

அவரது மிரட்டல் மற்றும் அவர் தரும் அழுத்தம் காரணமாக தகுதி இருந்தும் அந்த இளைஞர்கள் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கனவுகள் சிதறி அவர்கள் மனம் உடைய , பொங்கி எழும் ஆசிரியர் தாதாவிடம் மோதிச் சாக, அப்புறம் என்ன நடந்தது என்பதே இப்படத்தின்கதை.

விளையாட்டில் திறமை இருந்தும் பலர் புறக்கணிக்கப்பட , பிராந்திய , சாதி, மொழி , இன பேதங்கள் காரணம் என்று சொல்லியே கதைகள் வந்திருக்கும் நிலையில் வர்க்க பேதத்தை முன்னிறுத்தி ஒரு கதை யோசித்து இருக்கிறார்கள்.. பாராட்டப்பட வேண்டிய . அருமை.விசயம்.

முதல் காட்சியோடு ஆரம்பித்து படத்தைக் கமர்ஷியலாக கொண்டு போக முயல்கிறார் .

வினோத் ராஜாவின் ஒளிப்பதிவும் அலிமிர்சாக் இசையும் சில இடங்களில் பாராட்டுப் பெற்றிருக்கிறது.

மொத்தத்தில்

*கோல் போட* பலகீனமாக இருக்கிறது*.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *