கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” ஜெயா தொலைக்காட்சியில் !!

Share the post

“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்”
ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று ஞாயிறு காலை 11.30 க்கு “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சியில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் நமது கேங்ஸ்டர் அணியாளர் கலந்து கொள்ளும் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தாளிக்கராக நடிகை வசுந்தரா மற்றும் நந்தா மாஸ்டர் இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து உள்ளனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் கேங்ஸ்டர் குழுவார் பாய்ஸ் vs கேல்ஸ் என்று பிரிந்து இரு குழுக்களாக மோதி கொள்ளும் நகைச்சுவை யுத்தம் மேலும் இந்நிகழ்ச்சியில் ஆட்டம்,பாட்டம் நகைச்சுவை கொண்டாட்டம் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன….
இந்நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் கமல் தொகுத்து வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார். மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு சிறப்பு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் தீபாவளி அன்று ஞாயிறு பகல் 11:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஜெயா டிவி யில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம் “
“வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்குப் பின்பா? ” , என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் நல்லாசிரியர் திரு. ரவிக்குமார் ,சொல்லேர் உழவர் திரு. நாராயண கோவிந்தன், நற்றமிழ் நம்பி திரு. காளிதாஸ் திருமணத்திற்கு முன்பே..! என்று வாதிடுகிறார்கள்…… மற்றும் இலக்கிய இளவல் திரு. தாமல் சரவணன், நற்றமிழ் நங்கை திருமதி. அட்சயா,இசைக்கலைமணி இராஜபாளையம் உமாசங்கர் திருமணத்திற்குப் பின்பே…! என வாதாடி தன் பேச்சால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் “சிறப்பு பட்டிமன்றம்” நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *