ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சியான ‘JITO FOOD AND WELLNESS STORY’-ஐ சென்னையில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2023 அன்று எக்மோரில் உள்ள ராணி மெய்யம்மையில் நடைபெறுகிறது!!

Share the post

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சியான ‘JITO FOOD AND WELLNESS STORY’-ஐ சென்னையில் நடத்த உள்ளது. இந்த நிகழ்வு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2023 அன்று எக்மோரில் உள்ள ராணி மெய்யம்மையில் நடைபெறுகிறது!

ஜிடோ சர்வதேச வர்த்தக அமைப்பு (JITO) முக்கியமான ஒரு உலகளாவிய சங்கமாக உள்ளது. இது 15,000 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஜெயின் வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் என பலதரப்பட்ட முக்கிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

ஜிடோவின் முக்கிய நோக்கங்கள் பொருளாதார வலுவூட்டலை வளர்ப்பது, அறிவைப் பரப்புதல் மற்றும் பொருளாதார முயற்சிகளை மேம்படுத்துதல் போன்றவை ஆகும்.

ஜிடோவுக்குள், ஜிடோ லேடீஸ் விங் ஒரு தன்னிறைவுப் பெற்ற பிரிவாக இயங்கி வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உலக அளவில் பெண் தொழில் முனைவோரை வளர்ப்பதில் ஆர்வத்துடன் உறுதி பூண்டுள்ளது. திறமையான ஜிடோ லேடீஸ் விங் குழு, புகழ்பெற்ற பிரைடல் ஸ்டோரி, பிசினஸ் நெட்வொர்க் கான்க்லேவ்ஸ் மற்றும் பிற முக்கிய எக்ஸ்போக்கள் உட்பட, வெற்றிகரமான வர்த்தக கண்காட்சிகளை ஒழுங்கமைப்பதில் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது.

‘ஃபுட் அண்ட் வெல்னஸ் ஸ்டோரி’ அவர்களின் சமீபத்திய முயற்சி. இது சென்னையின் முதன்மையான உணவு வர்த்தக கண்காட்சியாக நிச்சயம் மாறும். புதுமை, பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில், இந்த நிகழ்வு உணவுத் துறையின் ஒரு முக்கிய மையமாக செயல்படும். உணவு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தி, சந்தைப்படுத்துதல், விநியோகம் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இணையான துறைகளுடன் இணையற்ற தளத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம். இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ள உணவு தொடர்பான தொழில்நுட்பம், கேஜெட்டுகள் மற்றும் புதுமைகளின் அதிநவீனத்தைக் காண தயாராகுங்கள்.

இந்த நிகழ்வின் விருந்தினர்கள் பட்டியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், புகழ்பெற்ற பிரபலங்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், திறமையான பேச்சாளர்கள், தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மதிப்புள்ள நபர்கள், உயர்மட்ட சமையல் கலைஞர்கள் மற்றும் தேசம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற பிரபல மாஸ்டர் செஃப்களும் இங்கு வர உள்ளனர்.

ஒரு திறமையான குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், அவர்கள் 10,000 மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்க விரும்புகிறார்கள். பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்புத் துறைகளில் பரந்த ஊடகக் கவரேஜ் ஆகியவற்றுடன் இது சாத்தியமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தியானது B2B மற்றும் B2C வாடிக்கையாளர்களுக்கு உகந்த பிராண்ட் விசிபிளிட்டி (Brand Visibility) மற்றும் அவுட்ரீச் (Outreach) ஆகியவற்றை உறுதி செய்கிறது.

அவர்களின் முக்கிய நோக்கம் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த கண்காட்சியில் இருந்து கிடைக்கும் வருமானம் பெண் தொழில் முனைவோரின் திறன்களை மேம்படுத்துவதற்கும், வீட்டிலிருந்து தொழில் முனைவோர் அல்லது சிறிய அளவில் பிசினஸ் தொடங்கும் பெண்களுக்கு மூலதனத்தை வழங்குவதற்கும் ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *