Business

கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நெடுந்தொடர் ‘மீரா’, நடிகை குஷ்பூ நடிக்கும் மனதை நெகிழவைக்கும் முதிர்ச்சியான காதல் கதை

கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நெடுந்தொடர் ‘மீரா’, நடிகை குஷ்பூ நடிக்கும் மனதை நெகிழவைக்கும் முதிர்ச்சியான காதல் கதை ~மீரா கதாபத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்கும் இந்நெடுந்தொடர், மார்ச் 28 அன்று முதன்முறையாக கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பைத் தொடங்குகிறது ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு இது ஒளிபரப்பாகும். ~        சென்னை: 24 மார்ச், 2022: காதல் கதையைச் சொல்லும் காவியங்களுக்கு எப்போதும் அழிவில்லை.  மீராபாய்க்கும், கிருஷ்ணனுக்கும் இடையிலான காதல் கதையும், இத்தகைய அமரக் காவியங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.  கடவுள் கிருஷ்ணன் மீது மீரா கொண்ட பக்திக்கு வரம்புகளே இல்லை.  சமூக மற்றும் குடும்ப பழக்கவழக்கங்களை ஒதுக்கித் தள்ளிய மீராவின் தைரியமும், காதலும் தான் வரலாற்று நாயகிகளுள் ஒன்றாக அவரை ஆக்கியிருக்கிறது.  இசைப்பாடல்களை எழுதிப் பாடுவதில் புகழ்பெற்ற மீராவின் காதல் கதையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சியான மீரா நெடுந்தொடர், மார்ச் 28, இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது.  ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் மீராவாக பிரபல நடிகை குஷ்பூவும், கிருஷ்ணாவாக நடிகர் சுரேஷ் சந்திர மேனனும் நடிக்கின்றனர்.  காதல் மட்டுமின்றி, சோகமும், பிரிவும், கலந்த இந்நெடுந்தொடரைக் காண 2022 மார்ச் 28, திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் காணுங்கள்.  கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராமன் எஸ்.  இந்நிகழ்ச்சி தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “கலர்ஸ் தமிழ் அலைவரிசை தொடங்கப்பட்டதிலிருந்தே எமது பார்வையாளர்கள் மனதில் ஆழமான பதிவுகளை உருவாக்கும் அதே வேளையில், அவர்களின் மனங்களை ஒன்றவைக்கும் சிறப்பான கதைகளை உருவாக்கி நாங்கள் எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம்.  நமது சமூகத்தில் இன்றியமையாத அங்கமாகவும், நம் கலாச்சாரத்தில் அதிக மதிப்பிற்குரியவர்களாகவும் திகழும் பெண்களை நேர்மறையான பல்வேறு பரிமாணங்களில் சித்தரிக்க வேண்டுமென்ற எமது செயல்திட்டக் குறிக்கோளின்படி மீரா என்ற இந்நெடுந்தொடரை அறிமுகம் செய்வதில் கலர்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.  தைரியமும், செயல்திறனும் கொண்ட புதுமைப் பெண்களாக பெண்களது கதாபாத்திரங்களை உருவாக்குவதும் எமது நோக்கமாகும்.  விரைவில் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் மீரா நெடுந்தொடர், சமத்துவம், சுயமதிப்பு, தற்சார்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை “பெண்ணியம்” என்ற வார்த்தைக்கே புதிய பொருள் வரையறையை தரப்போவது நிச்சயம்.  இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண்கள் மட்டுமின்றி, அனைவரது மனங்களையும் மீரா தன்வசப்படுத்துவாள் என்பது நிச்சயம்.  அத்துடன், கடந்த காலத்தில் பெண்களைப் பற்றிய கண்ணோட்டங்களை இந்நெடுந்தொடர் உறுதியாக மாற்றும்” தேவி பாலாவின் திரைக்கதை மற்றும் ஜவஹர் இயக்கத்தில் நகர வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட மீரா நெடுந்தொடர், குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னுடைய சுயமதிப்பை கண்டுபிடிக்கின்ற ஒரு பெண்ணை நேர்த்தியாக சித்தரிக்கிறது.  16 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததற்குப் பிறகு தங்களது மகளின் திருமணத்தின்போது நேரில் சந்திக்கின்ற நடுத்தர வயது தம்பதியரான மீரா (நடிகை குஷ்பூ நடிப்பில்) மற்றும் கிருஷ்ணா (நடிகர் சுரேஷ் சந்திர மேனன் நடிப்பில்), ஆகியோரின் மறக்கப்பட்டுவிட்டு காதல் மற்றும் உறவு மீண்டும் துடிப்போடு மலர்வதைச் சுற்றி இக்கதை நகர்கிறது.  திருமணமான தம்பதியர், பிரிந்து வாழமுடியும் என்றபோதிலும், பெற்றோர்களால் அவ்வாறு இருக்க இயலாது என்ற ஒரு கருத்தை இக்கதை முன்வைக்கிறது.  தனது அம்மா மற்றும் மகளுடன் எளிய, ஆனால் அழகான வாழ்க்கையை நடத்தும் நடுத்தர வயதான ஒரு மகப்பேறு மருத்துவரான (Gynaecologist) மீரா மகளாக ஆதிரா (அக்ஷரா), ஒரு நேர்மையான நபர்.  ஆனால், தனது மனதிற்கு சரியென்று படும் விஷயங்களுக்காக தனது எண்ணங்களை ஒளிவுமறைவின்றி பேசவும்,  அவற்றிற்காக துணிவுடன்  செயல்படவும் ஒருபோதும் தயங்கியதில்லை.  தனது கொள்கைகள் மற்றும் நன்னெறிகள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட பெண்ணாக மீரா இருக்கையில், மனதளவில் தைரியமான நபராக இருந்தபோதிலும், எளிதில் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய தனது குணத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்காத ஒரு இதயவியல் (Cardiologist) மருத்துவராக அவளது கணவரான கிருஷ்ணா இருக்கிறார்.  மீராவை விட்டு நகர்ந்து தனது வாழ்க்கையை தனித்து நடத்துபவராக வெளியில் காட்டிக்கொண்டாலும் கூட, இன்னும் மீராவை நினைத்து அவளது அன்புக்காக ஏங்குபவராகவே அவர் இருக்கிறார்.  நடிகை  பூஜா லேகேஷ் (அஞ்சலி), நடிகை ஷாலினி (ஜோதி), நடிகை சாந்தி வில்லியம்ஸ் (ஜானகி – மீராவின் தாய்) மற்றும் நடிகை ‘பசி’ சத்யா (அன்னம் – தலைமை செவிலியர்) துணை கதாபாத்திரங்களாக ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதன் இயக்குனர் ஜவஹர் இதுதொடர்பாக கூறியதாவது: “குஷ்பூ போன்ற பிரபலமான, அற்புதமான நடிகை  கதாநாயகியாக இடம்பெற்றிருக்கும் மீரா நெடுந்தொடரை இயக்குவது உண்மையிலேயே பெருமகிழ்ச்சி தருகிறது.  இதில், நடித்திருக்கும் பிற நடிகர்களும், சிறப்பான திறமைசாலிகள்.  அதற்கும் மேலாக, குஷ்பூ அவர்களால் எழுதப்பட்ட கதையை  திரை விருந்தாக உருவாக்குவது ஆனந்தமான ஒரு விஷயம்.  மனஉறுதி கொண்ட, தைரியமான மற்றும் அனைத்திற்கும் மேலாக<          

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது! – சீமான் கண்டனம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது! நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும்…

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரம் மேளாளர்கள் சங்கம்

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரம் மேளாளர்கள் சங்கம் நமது சங்கம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்…

Olympia Movies S. அம்பேத் குமார் வழங்க, கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் “Production No.4” படத்தில், நடிகர்கள் K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள் !

Olympia Movies S. அம்பேத் குமார் வழங்க,கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் “Production No.4” படத்தில்,  நடிகர்கள் K…

“Olympia Movies Production No.4 Project starring Actor Kavin Direction by Ganesh K Babu”

Olympia Movies S. Ambeth Kumar presentsKavin-Aparna Das starrer “Production No.4” brings backactors K Bhagyaraj and Aishwarya…

Mahat Raghavendra- Devika Satheesh, Manasa Chowdary, starrer Web Series titled ‘EMOJI’

Mahat Raghavendra- Devika Satheesh, Manasa Chowdary, starrer Web Series titled ‘EMOJI’ The young talented actor Mahat…

மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” !

மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” ! தமிழ் சினிமாவின் இளம் திறமையாளரான மஹத்…

Samantha to perform Action Scenes under Hollywood Stunt Choreographer in Yashoda

Samantha to perform Action Scenes under Hollywood Stunt Choreographer in Yashoda Being an All-rounder, Samantha plays…

ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில், “யசோதா” படத்தில், ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா !

ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இயக்கத்தில், “யசோதா” படத்தில், ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா ! அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும்…

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்து’திரைப்படம் ஒளிபரப்பாகிறது

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்து’திரைப்படம் ஒளிபரப்பாகிறது நகைச்சுவையும், பழிவாங்கலும் இணைந்த கதைக்கருவைக் கொண்ட  இத்திரைப்படத்தை  மார்ச் 20 ஞாயிறன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம் சென்னை, மார்ச் 18, 2022 :   உள்குத்து திரைப்படத்தின் உலகத்தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 20ம் தேதி, ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு, ஒளிபரப்பாகிறது.  உள்ளூர் தாதா ஒருவரோடு, மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை இக்கதை சித்தரிக்கிறது. பழிவாங்கல், டிராமா மற்றும் நகைச்சுவை கலந்த இக்கதையைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.  கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து திரைப்படம், பொழுதுபோக்கு அம்சத்துடன், இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகின்ற உணர்வை விவரிக்கின்றது.  நடிகர் பால சரவணன் நகைச்சுவையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை சாயா சிங், சண்டைப்பயிற்சி இயக்குனரும், நடிகருமான திலீப் சுப்பராயன், நடிகர் சரத் லோஹித்அஷ்வா மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். அமைதியும், அழகும் ததும்பும் கடற்கரை நகரத்தைப் பின்புலமாக கொண்ட ‘உள்குத்து’, திரைப்படமானது, தனது சகோதரியின் மரணத்திற்கு பழிதீர்ப்பதற்காக மக்கள் பெரிதும் அஞ்சுகின்ற கந்துவட்டி தாதாக்களான காக்கா மணி (சரத் லோஹித்அஷ்வா நடிப்பில்) மற்றும் அவரது மகன் சரவணன் (திலீப் சுப்பராயன் நடிப்பில்) ஆகியோரை தேடி அலைகின்ற ராஜா என்ற இளைஞனைச் (நடிகர் தினேஷ் நடிப்பில்) இக்கதை சுற்றி நகர்கிறது.  இந்த தேடலின்போது மீன்பிடிப்பு கிராமத்தில் சுறா சங்கர் (பால சரவணன் நடிப்பில்) என்பவரோடு அவரின் நட்பு வளர்கிறது.  அவரது சகோதரியான கடலரசியை (நந்திதா சுவேதா நடிப்பில்) திருமணம் செய்து கொள்ளுமாறு சுறா சங்கர் விரும்புகின்ற நிலையில் திரைக்கதை அதிரடி திருப்பத்தை எதிர்கொள்கிறது.  சரவணனை தாக்கி, அவனை அவமானத்திற்கு ஆளாக்கும் நிலைக்கு ராஜா தள்ளப்படுகிறார்.  இந்த மோசமான தாதாக்களின் பிடியிலிருந்து ராஜாவால் விடுபட முடிந்ததா? தனது சகோதரியின் மரணத்திற்கு ராஜா பழிவாங்குவானா? முடிவு என்னவாகிறது என்று அறிய ‘உள்குத்து’ திரைப்படத்தை கண்டு ரசியுங்கள். உலகளவில் சின்னத்திரையில் முதன் முறையாக இத்திரைப்படம் ஒளிப்பரப்பாவது குறித்து இதன் இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: “இத்திரைப்பட உருவாக்கத்திற்காக நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகளை கருத்தில் கொள்ளும்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எனது திரைப்படம் இதன் மூலம் சென்றடைவது உறுதி.   பழிவாங்கல் மற்றும் நகைச்சுவை என்ற இரண்டு வெவ்வேறு அம்சங்களை இத்திரைப்படம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது.  இது எளிதானதாக இருக்கவில்லையென்றாலும், இப்புதிருக்கான அனைத்துப் பகுதிகளும் மிகச் சரியாகப் பொருந்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் தினேஷ் பேசுகையில், “எனது முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுகையில், இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் வேறுபட்டு தனித்துவமானதாக இருப்பதால், முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை இது எனக்குத் தந்தது.  ரகசியமான திட்டங்களையும், பல்வேறு மறைவான விஷயங்களையும் கொண்டிருக்கின்ற ஒரு மாஸ் ஹீரோவாக இத்திரைப்படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவுமே பிடித்திருந்தது.  கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ்நாட்டின் பிரபல சேனலில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுவதால், தங்களது குடும்பதோடு சேர்ந்து அமர்ந்து வாய்விட்டு சிரிப்பதோடு, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டு தங்களது இருக்கையின் முனைக்கே பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார். இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டு…