’ஆலகாலம்’ திரை விமர்சனம் !!

Share the post

’ஆலகாலம்’ திரைவிமர்சனம் !!

ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் – ஜெயகிருஷ்ணா,தயாரித்து,
ஜெயகிருஷ்ணா,இயக்கி வெளிவந்திருக்கும் படம் ஆலகாலம் !

ஜெயகிருஷ்ணா, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா சங்கர், தங்கதுரை, கத்தரிக்கோல் மனோகர் மற்றும பலர் நடித்து உள்ளனர் !

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்!

தனது மகன் பெரிய கல்லூரியில், பெரிய படிப்பு படிப்பதால், அவரது படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும், என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்னாவின் தாய் ஈஸ்வரி ராவ்!

இதற்கிடையே, ஜெயகிருஷ்ணாவின் ஒழுக்கம், படிப்பு திறன் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் சக மாணவி சாந்தினிக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது !

சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக்கொள்கிறார்,ஆனால், இந்த காதலால் ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.!

இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை இப்படத்தின் கதை!

தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற மிக அவசியமான படம் இது,
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தங்களது வாழ்க்கையை எப்படி சீரழித்துக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் இந்த திரைப்படம் !

ஜெயகிருஷ்ணா அருமையா நடித்து உள்ளா,
கல்லூரி மாணவராக வெள்ளந்தியான சிரிப்போடு இயல்பான நடிப்பில் லும் அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்! 
 

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, கல்லூரி மாணவி மற்றும் மனைவி என இரண்டுவிதமான கதாபாத்திரம் ஏற்று சிறப்பகா நடித்து உள்ளர் !

இவர் நடிப்பு அனைவர்
ர மனதில் லும் இடம் பிடித்து இருக்கு !.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், “சாமியே கேட்டாலும் நான் மதுவை வைத்து படையல் போட மாட்டேன்” என்று பேசிவிட்டு, தனது மகனின் நிலையை பார்த்து அவருக்காக மதுக்கடையில் மது வாங்கும் காட்சி படம் பார்ப்பவர்களை நிச்சயம் கலங்க வைக்கும் !

தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் அனைவரும் கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்

கதாபாத்திரங்களின் உணர்வுத்து.ஒளிப்பதி செய்தது அருமை!

கதைக்கு ஏற்ற பாடல்கள்லும்  பின்னணி இசையையும் அருமை !

படத்தொகுப்பு காட்சியை விரிவாக சொல்ல வேண்டும் என்பதை மிக சிறப்பாக செய்து நாயகனின் நடிப்பும், அதன் மூலம் சொல்ல வேண்டிய விஷயத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்!

.

கதையின் நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என்று முதல் படத்திலேயே மூன்று பணிகளை மேற்கொண்டிருக்கும் ஜெயகிருஷ்ணா, மூன்றிலும் முத்திரை பதித்திருப்பதோடு, தனது முதல் படத்தின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.


மது பழக்கம் எப்படி எல்லாம் அடிமை ஆக்குகிறது
என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் !

இன்றைய
காலத்திக்கு ஏற்ற படம் !

மொத்தத்தில்

அனைவரும்  பார்க்க வேண்டுயா படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *