பா.இரஞ்சித் வழங்கும்“தலித் சுப்பையா – கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம் அகாடமிதிரையிடல் அறைக்கு தேர்வு !

Share the post

பா.இரஞ்சித் வழங்கும்
“தலித் சுப்பையா – கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம் அகாடமி
திரையிடல் அறைக்கு தேர்வு

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்
தயாரித்த “தலித் சுப்பையா கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம், ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறை
(Academy Screening Room)க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் IDSFFK 2025 விழாவில் சிறந்த நீள ஆவணப்படம்
விருதைப்பெற்றுள்ளது. தற்போது அகாடமி உறுப்பினர்கள் மற்றும்
சர்வதேச திரைப்பட வட்டாரங்களுக்கு நேரடியாகக் காணக்கூடிய
வகையில் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணப்படம் சுருக்கம் –
இந்த படம், தலித் சுப்பையாவின் கலைப்பயணம், சமூக அநீதிகளுக்கு
எதிரான உறுதியான எதிர்ப்பு ஆகியவற்றை நேர்காணல்கள், ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

வழங்குபவர் பா. ரஞ்சித்
இயக்கம்-
கிரிதரன் MKP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *