” மொத ராத்திரி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைச்சுருக்கம் :-
கதைநாயகன் ரிஷிகாந்த் காதல் தோல்வியால் மனம் துவண்டு துபாய்க்கு போகிறார் வேலையைத் தேடி. துபாயில் தங்கி வேலை செய்து விட்டு ஐந்து வருடம் கழித்து ஊர் திரும்புகின்றார்.
ரிஷிகாந்த்துக்கு தெரியாமலே குடும்பத்தார் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். குடும்பத்தினரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதித்து கதாநாயகி அனிஷ்மா அனில்குமாரை கரம் பிடிக்கிறார்.
வழக்கம் போல திருமணம் முடிந்த கையோடு முதல் ராத்திரி நடத்துவது நம் நாட்டின் பண்பாடு , கலாச்சாரம். அதன்படி முதல் இரவுக்கு ஏற்பாடு செய்ய முதல் ராத்திரியில் மனம் விட்டு பேச முயற்சி செய்கிறார் ரிஷிகாந்த்.
மனத்தில் ஒருவனை சுமந்து கொண்டு இன்னொருவனிடம் எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்தக் காதல் படுத்தும் அவஸ்த்தை பெற்றோர்களை தலை குனிய வைக்கும் என்பதை எண்ணாமல் காதல் வலையில் சிக்கி வேதனை படுகின்றனர் இன்றைய காதலர்கள்.
முதல் இரவுக்கு காத்திருக்கும் வேளையில் கணவனை ஏமாற்றி விட்டு காதலனைத் தேடி அவனுடன் ஓட முயற்சி செய்கிறார் அனிஷ்மா அனில்குமார்.
இவர்களின் செயலைக் கண்ட ரிஷிகாந்த் என்ன முடிவு செய்கிறார். தன் மனைவியை காதலனோடு சேர்த்து வைக்கிறாரா ? மனம் திருந்தி கதைநாயகி கணவனோடு சேர்ந்து வாழ்கிறாளா ? என்பதனை கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்வியலின் தத்துவத்தை பார்வையாளர்களுக்கு புரியும் வண்ணம் நகைச்சுவை உணர்வோடு சொல்லுவதே மொத ராத்திரி .
இயக்குநரின் கைவண்ணம் :-
பொதுவாக திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் அங்கு சில யதார்த்த செயல்முறை களை எப்படி கையாளுகின்றனர் என்பதை கண்டறியலாம்.