சினிமாவில் இன்று பெரிய ஹீரோக்களுக்கும் பேய்களுக்கும் தான் மரியாதை!

Share the post

நன்றாகப் பேசிப் பழகினோம்.
தூரத்தில் உள்ள நெருங்கிய உறவினரை விட அருகில் பக்கத்தில் உள்ள எதிரியால்
நமக்கு ஆதாயம் உண்டு என்று சொல்வார்கள்.

அந்த வகையில் இப்போது நாம் தனிமைப்பட்டு கிடக்கிறோம் .ஒரு பத்திரிகைச்
செய்தி பார்த்தேன்.பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்க, தனிமையில்
வாழ்ந்த ஒரு பெண்மணி தனியே சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து
கொண்டிருந்தார். வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல்
இருந்திருக்கிறார்.நான்கு நாட்களாக வீடு திறக்கப்படாதது அறிந்து அக்கம்
பக்கத்தில் உள்ளவர்கள்  சந்தேகப்பட்டுப் போய்ப் பார்த்த போது துர்நாற்றம்
வீசி இருக்கிறது. போலீஸ் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது கட்டிலில்
உட்கார்ந்த நிலையிலே இறந்திருக்கிறார்.அந்த அளவிற்குத் தனிமையில்
மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படி மன நெருக்கடிக்கு ஆளாகும் டெலுஷனல்
டிஸ்ஆர்டர் (Delusional Disorder)எனப்படும் பிரச்சினை பற்றி இந்தப்
படத்தில் கூறி இருக்கிறேன்.

புதிதாக ஒரு பட முயற்சி என்று நான் இறங்கினாலும் படத்தில் அனைவரும்
ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்.ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும்
இப்படத்திற்காக உழைத்திருக்கிறார்கள்.

இரண்டு வீடுகளை வைத்துக்கொண்டு இந்த முழுப் படத்தை எடுத்திருக்கிறேன்.
ஆனால் ஒரு பெரிய படத்திற்கான அனைத்து நேர்த்தியுடனும் இப்படம் உருவாகி
இருக்கிறது”என்று கூறினார்.

விழாவில் நடிகர் அப்பு குட்டி பேசும்போது,

“இந்த ரீ படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு புதிய முயற்சிக்கு ஆதரவு தருவதற்கும் துணிச்சலாக முன்வர வேண்டும்
அப்படி இப்படத்திற்காகப் பலரும் முன்வந்து உழைத்து
இருக்கிறார்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இன்று மன அழுத்தத்தால் பல பிரச்சினைகள் வருகின்றன.அதன் விளைவுகள் மோசமாக
இருக்கின்றன.இதனால் பிள்ளைகள் ,மாணவர்கள் தவறான முடிவுகள்
எடுக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என்று இந்தப் படத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.படம் வெற்றி அடைய
வாழ்த்துக்கள்.

சிறு முதலீட்டுப் படங்களில் தான் நல்ல படங்கள், கருத்துள்ள படங்கள்
வருகின்றன. எனவே இதைப் பத்திரிகை நண்பர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர் 9 வி
ஸ்டுடியோ  ரமேஷ்  ,படத்தில் நடித்திருக்கும் பிரசாந்த் சீனிவாசன்,
பிரசாத்,திவ்யா, ஒளிப்பதிவாளர் தினேஷ் ஸ்ரீநிவாஸ், இசை அமைப்பாளர் ஹரிஜி,
நடன இயக்குநர் தேப்பூர் முரளி,பின்னணி இசை அமைத்துள்ள ஸ்பர்ஜன் பால்,படத்
தொகுப்பாளர் கே. சீனிவாஸ் ,பாடலாசிரியர் தோழன் உள்ளிட்ட படக்குழுவினர்
கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *