‘சத்யா’ நெடுந்தொடர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்களின் பேராதரவு பெற்ற ‘சத்யா’ நெடுந்தொடர் ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப சத்யாவும், பிரபுவுக்கும் இடையேயான காதலை அடுத்த கட்டத்திற்கு மிகவும் சுவாரசியமாக எடுத்து செல்லப்படுகிறது .


சத்யாவும் பிரபுவுக்கும் இடையே யான காதல் காட்சிகள் மிகவும் சுவாரசியமாக வரும் வாரத்தில் வர இருக்கிறது. சத்யா தான் கர்ப்பம் என பொய் சொல்லியதாக திவ்யா பிரபுவிடம் கூறுகிறார். இதனை உறுதி செய்ய பிரபு சத்யவிற்க்கு ஸ்கேன் செய்த டாக்டரிடம் உறுதி செய்கிறார் .ஆனால் தனக்கு குழந்தை செல்வம் வர இருக்கிறது என இருக்கும் சத்யாவிடம் இதை எப்படி சொல்வது என பிரபு தவிக்கிறான்….. ஆயிஷா மற்றும் விஷ்ணு விஜய் நடிக்கும் இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .