
“தலைவன் தலைவி” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :-
விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு ,
சரவணன்,செம்பன்
வினோத், தீபா சங்கர், ஆர்.கே.சுரேஷ்,
ரோஷினி, வினோத் சாகர் ஜானகி சுரேஷ், சென்றாயன், மைனா
நந்தினி, காளி வெங்கட்,
அருள்தாஸ். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் : – பாண்டிராஜ்.
மியூசிக் : – சந்தோஷ்
நாராயணன்.
படத்தொகுப்பு :-
பிரதீப் இ.ராகவ்
தயாரிப்பாளர்கள் :- சத்யஜோதி பிலிமஸ், டி.ஜி.தியாகராஜன் ப்ரசென்ட்ஸ் – செந்தில் தியாகராஜன் & அர்ஜுன் தியாகராஜன்.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் திருமணமாகி இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக
தொடங்கிறார்கள். சில மாதங்கள் பிறகு எப்போதும் குடும்பங்
களில் நடக்கிற வழக்கமாக ஏற்படுகிற
சின்ன சிறு சண்டை சச்சரவுகள் அதனால் நடக்கக்கூடிய விசயத்தில்
சம்பவங்களால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
மூன்று மாதங்களாக பிரிந்ததுள்ளவர்கள். தம்பதிகள் மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை இந்த கதைக்களம் சொல்லுகிறது.
சில குடும்பங்களில் தினமும் நடக்குற சின்ன சிறு வாய் சண்டை விண் வரம்புகள் சின்ன சிறு சலசலப்புகளின்
பின்னணியில், அதிக மான இயற்கை தனத்தை சேர்த்து
சொல்லியிருப்
பதே “தலைவன் தலைவி”.
ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
அதுல அன்பான கணவராகவும், அம்மா மீது அதிக அக்கறையுள்ள
பிள்ளையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அளவுக்கு
அதிகமாக இயற்கை யான நடிப்பில் அதிர்ச்சியளிக்கும் வகையில் தனது
தனித்துவமான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை
மெருகேற்றி நடிப்
பதில் திறமை கொண்ட வர் விஜய் சேதுபதி, இந்த படத்தில் அதை
கொஞ்சம் அதிகமாக இயற்கையாக செய்து பல இடங்களில் பார்வையாளர்களை
தன் பக்கம் திசை திருப்பி விடுகிறார். முதல் பாதி முழுவதும்
விஜய் சேதுபதியின் இயற்கையாக நடிப்பில்
மெய்சிலிர்க்க வகையில் நடித்தாலும்.
இரண்டாம் பாதியில் நடிப்பின் அளவை பார்வையாளர்கள் மனதில் பெரும் ஆறுதல் அளித்திருக்கின்றன.
நித்யா மேனன், விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டி நடித்தாலும், அவர்
அளவுக்கு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து கணவருடன் சண்டை
போட்டுக்கொண்டு அவரது பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர்
செய்துள்ளார், அவரது திறமையை முழுமையாக
வெளிப்படுத்தியது படத்தில் வரும் காட்சிகளில் என்பது கொஞ்சம் சோகம்.
சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு.வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு ஓலி
திரையரங்கில் கேட்கும் சிரிப்பு சத்தத்தால் சிதறடிக்கின்றன.
உருவ கேலி செய்வதை முழுமையாக தவிர்த்துள்ளார் யோகி பாபு,
அமைதியான முறையில் வசனம் பேசி சிரிக்க வைத்துள்ளார். அவரது தனி சிறப்பை பாராட்டவேண்டும்.
கதாநாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும்
சரவணன் – தீபா சங்கர், கதாநாயகியின் பெற்றோர்களாக
நடித்துள்ள செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி,
சென்றாயன் என
மற்ற வேடங்களில் நடித்துள்ளனர்
அனைத்து நட்சத்திரங்களின் தங்களது நடிப்பின் மூலம்
கதாபாத்திரத்திற்கு மிக பெரிய பலத்தை சேர்த்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்கள்
அனைத்தும் ஹிட்டான ரகங்கள். கமர்ஷியல் படம்
என்பதால் தனித்துவமான பின்னணி இசை
பார்வையாளர்களின் இசையின் கவனத்தை ஈர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியுள்ளார்.
குறுகிய தெருக்களில் நடக்கும் சண்டைக்காட்சி
களில் அவரது கேமரா மாயை செய்திருக்கின்றன.
திரைப்பட முழுவதும் நட்சத்திரங்களின் பட்டாளங்கள் படம் முழுவதும் வசனங்கள் என்று
காட்சிகள் நீளமாக இருப்பதால், படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்,
தாங்களால் முடிந்தவரையில் சுருக்கமாக சொல்லியிருக்கலாம்.
எழுதி இயக்கியுள்ளார் பாண்டிராஜ், இது
வழக்கமான குடும்பத்தில் நடக்கும் சின்ன சிறு குறைகளை சின்ன
தனது புத்தியால் , நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார், அழுத்தமாக
சொல்லாமல் படத்திற்கு ஏற்பே, அதை மறைத்து குறைந்த அளவில்
புரியும்படி பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய
செய்வது யோகி பாபுவின் காமெடி காட்சிகள் மட்டுமே.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் இடையே வரும் காதல், மோதல்
சம்மந்தம் உள்ள காட்சிகளில் மருமகள் மாமியார் இடையே நடக்கும் சண்டைகளில்
அதிக செயற்கைத்தனம் தெரிவதால் அவற்றை முழுமையாக ரசிக்க
முடியவில்லை. குறிப்பாக விஜய் சேதுபதியின்
கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள்,
இருவரும் மனம் விட்டு பேசினாலே போதும் அது தீர்ந்துவிடும், அப்படி
பேசாமல் ஈகோவில் என்ற போர்வையில் தம்பதிகள் கடைசியில் நீதிமன்ற வாசலில் நிற்க வேண்டிய நிலை
ஏற்படுகின்றன, என்ற நல்ல விஷயத்தை லேசாக சொல்லிவிட்டு, சண்டைகள்
அது எதற்கு வருகின்றன. என்பதை அழுத்தமாக
செய்யாமல், நகைச்சுவையாக சொல்கிறேன்.
என்ற பெயரில் இயக்குநர் பாண்டிராஜ், பல
இடங்களில் யோசிக்க வைத்திருக்கிறார்.
படம் பார்ப்பவர்களுக்கு இயக்குநர்
பாண்டிராஜ் சொல்லும் அறிவுரைகள் மனதில் நிற்கின்றன
கொஞ்சம் குடும்பத்தில் நடக்கிற
சண்டை சச்சரவு வர தான் செய்யும் நாம்
அனுசரித்து போவது நல்லது படத்தில் இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
படம்
பார்த்தத்தில், “தலைவன் தலைவி” அவர்கள் ஒன்று சேர
காரணமாக இருக்கின்றன குடும்பத்தில் உறவுகளின் ஒற்றுமையும்
அன்பும் தான் தொடர்கதையாக எல்லோர் கவனத்தை
ஈர்க்கும்.தலைவன் தலைவி குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.