சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்!தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார் சென்னை, மார்ச் 29, 2022: சென்னை மாநகரில் சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி. ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில், இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல்நலப் பராமரிப்பு சேவைகளோடு, இல்லங்களிலேயே மருத்துவ சிகிச்சையையும் வழங்குகின்ற ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ செயல்திட்டமானது, முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய்நிகர் (Virtual Consultation) முறையில் மருத்துவர்களது ஆலோசனையையும், செயல்நடவடிக்கையையும் வழங்கும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய அதே அளவிலான உடல்நல பராமரிப்பு சேவையை, நோயாளிகள் அவர்களது வீடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டே பெறமுடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக இச்செயல்திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்ற போதிலும், 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தீவிர நோய்நிலைகளுக்கு வீடு தேடி வருகிற மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய ஒரு குழுவால் முறையாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் உரிய நேரத்திலும் சிகிச்சையளிக்கப்படும். மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு பின் தொடர் சிகிச்சையை வீட்டிலேயே வழங்குவதையும் தனது இலக்காக சிம்ஸ் மருத்துவமனை கொண்டிருக்கிறது. துல்லியமான சிகிச்சையையும், வழிகாட்டலையும் வழங்கும் ஒரு சீரிய முயற்சியாக பல்வேறு நோய்கள் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் மருத்துவர்களிடமிருந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சை ஆலோசனையைப் பெறவும் ஹலோ டாக்டர் சேவையைப் பயன்படுத்துமாறும் சென்னைவாழ் மக்களை சிம்ஸ் மருத்துவமனை ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தினை தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் கூறியதாவது: “நோயாளிகளுக்குத் தேவைப்படும் சிகிச்சை பராமரிப்பை உறுதிசெய்ய சமீபத்திய புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதில் சிம்ஸ் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹலோ டாக்டர் – 2001…
Tag: oktakechannel
Thiru Ma. Subramanian Minister for Health, Medical Education and Family Welfare, Govt. of Tamil Nadu Launches SIMS Hospital’s Hello Doctor – 2001 2001
Thiru Ma. Subramanian Minister for Health, Medical Education and Family Welfare, Govt. of Tamil Nadu Launches…
India’s leading fitness platform cult.fit opens new centre in Alwarpet, Chennai
India’s leading fitness platform cult.fitopens new centre in Alwarpet, ChennaiPopular Tamil celebrities to be in attendance…
29th Convergence India Expo 2022 ended with great success. Visitor and Investors shown their keen interest to invest in Bihar at the stall of DIT, Govt. of Bihar.
29th Convergence India Expo 2022 ended with great success. Visitor and Investors shown their keen interest…
ASICS’ Brand Athlete Joshna Chinappa unveils Lite-Show collection in Chennai
ASICS’ Brand Athlete Joshna Chinappa unveils Lite-Show collection in Chennai ~An eye-catching collection in bright colors…
கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நெடுந்தொடர் ‘மீரா’, நடிகை குஷ்பூ நடிக்கும் மனதை நெகிழவைக்கும் முதிர்ச்சியான காதல் கதை
கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நெடுந்தொடர் ‘மீரா’, நடிகை குஷ்பூ நடிக்கும் மனதை நெகிழவைக்கும் முதிர்ச்சியான காதல் கதை ~மீரா கதாபத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்கும் இந்நெடுந்தொடர், மார்ச் 28 அன்று முதன்முறையாக கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பைத் தொடங்குகிறது ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு இது ஒளிபரப்பாகும். ~ சென்னை: 24 மார்ச், 2022: காதல் கதையைச் சொல்லும் காவியங்களுக்கு எப்போதும் அழிவில்லை. மீராபாய்க்கும், கிருஷ்ணனுக்கும் இடையிலான காதல் கதையும், இத்தகைய அமரக் காவியங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. கடவுள் கிருஷ்ணன் மீது மீரா கொண்ட பக்திக்கு வரம்புகளே இல்லை. சமூக மற்றும் குடும்ப பழக்கவழக்கங்களை ஒதுக்கித் தள்ளிய மீராவின் தைரியமும், காதலும் தான் வரலாற்று நாயகிகளுள் ஒன்றாக அவரை ஆக்கியிருக்கிறது. இசைப்பாடல்களை எழுதிப் பாடுவதில் புகழ்பெற்ற மீராவின் காதல் கதையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சியான மீரா நெடுந்தொடர், மார்ச் 28, இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் மீராவாக பிரபல நடிகை குஷ்பூவும், கிருஷ்ணாவாக நடிகர் சுரேஷ் சந்திர மேனனும் நடிக்கின்றனர். காதல் மட்டுமின்றி, சோகமும், பிரிவும், கலந்த இந்நெடுந்தொடரைக் காண 2022 மார்ச் 28, திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் காணுங்கள். கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராமன் எஸ். இந்நிகழ்ச்சி தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “கலர்ஸ் தமிழ் அலைவரிசை தொடங்கப்பட்டதிலிருந்தே எமது பார்வையாளர்கள் மனதில் ஆழமான பதிவுகளை உருவாக்கும் அதே வேளையில், அவர்களின் மனங்களை ஒன்றவைக்கும் சிறப்பான கதைகளை உருவாக்கி நாங்கள் எப்போதும் வழங்கி வந்திருக்கிறோம். நமது சமூகத்தில் இன்றியமையாத அங்கமாகவும், நம் கலாச்சாரத்தில் அதிக மதிப்பிற்குரியவர்களாகவும் திகழும் பெண்களை நேர்மறையான பல்வேறு பரிமாணங்களில் சித்தரிக்க வேண்டுமென்ற எமது செயல்திட்டக் குறிக்கோளின்படி மீரா என்ற இந்நெடுந்தொடரை அறிமுகம் செய்வதில் கலர்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது. தைரியமும், செயல்திறனும் கொண்ட புதுமைப் பெண்களாக பெண்களது கதாபாத்திரங்களை உருவாக்குவதும் எமது நோக்கமாகும். விரைவில் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் மீரா நெடுந்தொடர், சமத்துவம், சுயமதிப்பு, தற்சார்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை “பெண்ணியம்” என்ற வார்த்தைக்கே புதிய பொருள் வரையறையை தரப்போவது நிச்சயம். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண்கள் மட்டுமின்றி, அனைவரது மனங்களையும் மீரா தன்வசப்படுத்துவாள் என்பது நிச்சயம். அத்துடன், கடந்த காலத்தில் பெண்களைப் பற்றிய கண்ணோட்டங்களை இந்நெடுந்தொடர் உறுதியாக மாற்றும்” தேவி பாலாவின் திரைக்கதை மற்றும் ஜவஹர் இயக்கத்தில் நகர வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட மீரா நெடுந்தொடர், குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னுடைய சுயமதிப்பை கண்டுபிடிக்கின்ற ஒரு பெண்ணை நேர்த்தியாக சித்தரிக்கிறது. 16 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததற்குப் பிறகு தங்களது மகளின் திருமணத்தின்போது நேரில் சந்திக்கின்ற நடுத்தர வயது தம்பதியரான மீரா (நடிகை குஷ்பூ நடிப்பில்) மற்றும் கிருஷ்ணா (நடிகர் சுரேஷ் சந்திர மேனன் நடிப்பில்), ஆகியோரின் மறக்கப்பட்டுவிட்டு காதல் மற்றும் உறவு மீண்டும் துடிப்போடு மலர்வதைச் சுற்றி இக்கதை நகர்கிறது. திருமணமான தம்பதியர், பிரிந்து வாழமுடியும் என்றபோதிலும், பெற்றோர்களால் அவ்வாறு இருக்க இயலாது என்ற ஒரு கருத்தை இக்கதை முன்வைக்கிறது. தனது அம்மா மற்றும் மகளுடன் எளிய, ஆனால் அழகான வாழ்க்கையை நடத்தும் நடுத்தர வயதான ஒரு மகப்பேறு மருத்துவரான (Gynaecologist) மீரா மகளாக ஆதிரா (அக்ஷரா), ஒரு நேர்மையான நபர். ஆனால், தனது மனதிற்கு சரியென்று படும் விஷயங்களுக்காக தனது எண்ணங்களை ஒளிவுமறைவின்றி பேசவும், அவற்றிற்காக துணிவுடன் செயல்படவும் ஒருபோதும் தயங்கியதில்லை. தனது கொள்கைகள் மற்றும் நன்னெறிகள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட பெண்ணாக மீரா இருக்கையில், மனதளவில் தைரியமான நபராக இருந்தபோதிலும், எளிதில் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய தனது குணத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்காத ஒரு இதயவியல் (Cardiologist) மருத்துவராக அவளது கணவரான கிருஷ்ணா இருக்கிறார். மீராவை விட்டு நகர்ந்து தனது வாழ்க்கையை தனித்து நடத்துபவராக வெளியில் காட்டிக்கொண்டாலும் கூட, இன்னும் மீராவை நினைத்து அவளது அன்புக்காக ஏங்குபவராகவே அவர் இருக்கிறார். நடிகை பூஜா லேகேஷ் (அஞ்சலி), நடிகை ஷாலினி (ஜோதி), நடிகை சாந்தி வில்லியம்ஸ் (ஜானகி – மீராவின் தாய்) மற்றும் நடிகை ‘பசி’ சத்யா (அன்னம் – தலைமை செவிலியர்) துணை கதாபாத்திரங்களாக ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதன் இயக்குனர் ஜவஹர் இதுதொடர்பாக கூறியதாவது: “குஷ்பூ போன்ற பிரபலமான, அற்புதமான நடிகை கதாநாயகியாக இடம்பெற்றிருக்கும் மீரா நெடுந்தொடரை இயக்குவது உண்மையிலேயே பெருமகிழ்ச்சி தருகிறது. இதில், நடித்திருக்கும் பிற நடிகர்களும், சிறப்பான திறமைசாலிகள். அதற்கும் மேலாக, குஷ்பூ அவர்களால் எழுதப்பட்ட கதையை திரை விருந்தாக உருவாக்குவது ஆனந்தமான ஒரு விஷயம். மனஉறுதி கொண்ட, தைரியமான மற்றும் அனைத்திற்கும் மேலாக<
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது! – சீமான் கண்டனம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது! நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும்…
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரம் மேளாளர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரம் மேளாளர்கள் சங்கம் நமது சங்கம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்…
Mahat Raghavendra- Devika Satheesh, Manasa Chowdary, starrer Web Series titled ‘EMOJI’
Mahat Raghavendra- Devika Satheesh, Manasa Chowdary, starrer Web Series titled ‘EMOJI’ The young talented actor Mahat…
மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” !
மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” ! தமிழ் சினிமாவின் இளம் திறமையாளரான மஹத்…