
“சாவீ “திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
உதய தீப், ஆதேஷ் பாலா, யாசர், மாஸ்டர்
அஜய், கவிதா சுரேஷ், பிரேம் எஸ்.சேஷாத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – ஆண்டனி அஜித்.
மியூசிக்: சரண் ராகவன், வி.ஜே.ரகுராம்.
ஒளிப்பதிவு:-
பூபதி வெங்கடாசலம்.
படத்தொகுப்பு:-
சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின்.
தயாரிப்பாளர்கள்:-
ஆன்டனி அஜித் புரொடக்ஷன்ஸ்.
கதாநாயகன் உதய தீப், தனது தந்தையை தன்னுடைய இரண்டு மாமன்களை கொலை செய்ததாக
நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதே சமயம், மாமன்
மகளை காதலிக்க செய்கிறார். இதற்கிடையே, அவருடைய ஒரு மாமாவும் ஒரு
விபத்தில் இறக்க நேரிடுகிறது.அந்த வீட்டில் துக்கத்தில் அசதியில்
அனைவரும் தூங்கி விடுகிறார்கள் திடீரென்று பிணம் காணாமல்
போகின்றன. காணாமல் போன பிணத்தை
கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார்
விசாரணை மேற்கொள்ளும் நிலையில், கதாநாயகனின்
மற்றொரு மாமனும் திடீரென்று இறந்து விடுகிறார். இந்த தொடர் சாவில் மரணங்களின்
பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது.கிடைத்ததா? இல்லையா?
என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்வது தான் ‘சாவீ’.திரைப்படக்
கதைக்களம்.
சாவு வீடு என்ற தலைப்பை ’சாவீ’ என்று
மாற்றியிருக்கிறார். புதிய தலைப்புக்கும் கதைக்கும் எந்தவித
தொடர்பும் இல்லாதது போன்று தான், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்,
என்பதை ஆரம்பத்தில் இருந்து புரியாத புதிராக இருப்பினும், கடைசியில் ஒரு நல்ல கருத்தை, பார்வையாளர்
களை சிரிக்க வைக்கத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
கதாநாயகனாக நடித்திருக்கிறார். உதய தீப், வயதுக்கு ஏற்ப கதாபாத்திரத்தில், கஷ்டப்பட்டு இந்த
சூழ்நிலையில்
சர்வசாதாரணமாக இந்த பருவத்தை பக்குவமாக தெளிவாக கையாண்டு சிரிக்க வைக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார்
ஆதேஷ் பாலா, விசாரணை என்ற தலைப்பில் அடிக்கும்
அவர் காமெடி அனைத்தும் பியூட்டியாக இருக்கிறது.
யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே.சேஷாத்ரி என
மற்ற வேடங்களில் நடித்துள்ளனர் கதாபாத்திரங்கள் பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர்களில் சரண் ராகவன், மற்றும் விஜே ரகுராம் இருவரது பின்னணி இசையும் கேட்கும் அளவுக்கு
இருக்கின்றன.
ஒளிப்பதிவு பூபதி வெங்கடாச்சலம்
குறைந்த
லைட் வெளிச்சத்தில் பயன்படுத்தி காட்சிகளை
படமாக்கியிருப்பினும்காட்சிகளில், இயல்பாக படமாக்கி இந்த படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்புகள் சுந்தர்.எஸ் மற்றும் ராகேஷ் லெனின் இருவரது பணியில் குறையில்லை.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்டனி அஜித், ஒரு சிறிய சம்பவத்தை
வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில்
திரைக்கதையை காமெடியாக கொடுத்திருக்கிறார்.
காணாமல் போன பிணம் கிடைத்ததா ? இல்லையா ?
என்பதை ஒரே வார்த்தையில் வைத்துக் கொண்டு
இயக்குநர் ஆண்டனி அஜித், பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு,
தற்போது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை
கலாச்சாரம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி திரை மொழியில் சொல்லி
இளைஞர்களை கொஞ்சம் சிந்திக்கவும் செயல் ப்படவைத்திருக்
கிறார்.
படம் பார்த்தத்தில், ‘சாவீ’ சாவு வீடு மூலம் அதன் மூலம் அனைத்தும்
உயிர்களை காப்பாற்றும் கொண்டு போகும்
வகையில் . கொண்டு போகிறார்.
இயக்குனர் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…