
ரேகை” இணையத் தொடர் விமர்சனம்
நடித்தவர்கள் : பாலாஹாசன், பவித்ராஜனனி,
சந்தியா, வினோதினி வைத்தியநாதன், அஞ்சலிராவ், இந்திரஜித் ,
எம்.ஸ்ரீ ராம் , பூபாலன் பிரகோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
டைரக்டர் :
எம். தினகரன்.
ராஜேஷ்குமார்.(கதை).
மியூசிக் :-
ஆர்.எஸ்.ராஜ் பிரதாப்.
ஒளிப்பதிவு:-
மகேந்திரா எம் ஹெண்ட்ரி.
படத்தொகுப்பு:-
துரை பிரகாஷ்
தயாரிப்பாளர் :-
எஸ்.சிங்கார வேலன்.
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் ஒட்டிப் பிறந்த இரட்டை
குழந்தைகளாக ஒன்றாக இருந்தாலும் அவர்களது கைவிரல்
ரேகைகள் ஒவ்வொரு குழந்தைகளின் வேவ்வேறாக இருக்கும். அப்படி,தான் ஒரே
கைவிரல் ரேகை நான்கு பேருக்கு பொறுந்தி இருக்கிறது. அப்படி இருக்க
வாய்ப்பில்லை, என்ற சந்தேகத்தில் அந்த ரேகை தொடர்பாக போலீஸ் சப்
இன்ஸ்பெக்டரான நாயகன் பாலா ஹாசன், விசாரணை மேற்கொள்கிறார். அதில் சம்மந்தப்பட்ட நான்கு பேரும் இறந்த
தகவல் கிடைக்கிறது. நான்கு பேரும் விபத்தில் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது பாலா ஹாசன் அதன்
பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது, என்பதை உணர்ந்து
விசாரணையை தீவிரம் காட்டும் போது, நான்கு பேரும் கொலை
செய்யப்பட்டிருக்
கிறார்கள் உண்மை தெரிய வருகிறது.
எல்லா வித
தடயங்களும் இல்லாமல், குறிப்பாக பிரேத பரிசோதனையில் கூட எந்தவித
சந்தேகமும் ஏற்படாத வகையில் கொலை செய்யப்பட்டுள்ள இந்த நான்கு பேர் யார் ?, அவர்களை கொன்றது யார்? எதற்காக ?,என்பதை
இவர்களின் கைவிரல் ரேகை ஒரே மாதிரியாக இருப்பது எப்படி ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை
விறுவிறுப்பான திரைக்கதைக்
களத்தை மற்றும் அதிர்ச்சியூட்டும் பின்னணியுடன் சொல்வது தான்
’’ரேகை ’’.இணைய தொடர் கதைக்களம்
’’விடுதலை‘’. திரைப்படத்தில் கடைநிலை காவலராக நடித்து
கவனம் ஈர்த்த பாலா ஹாசன், இதுல கதையின்
நாயகனாக இதுல
சப் இன்ஸ்பெக்டராக வேடத்தில் நடிப்பில் அசத்தியுள்ளார். பொறுமையான
நடிப்பு, நேர்மையான பார்வை, கம்பீரமான உடல் மொழி, தெளிவான செயல்திறன் என சேர்ந்த ஒரு
புலனாய்வு அதிகாரிக்கு தேவையான அனைத்து தகுதிகளுடனும் வலம் வந்து தனது
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடிப்பில் மெருகேற்றி நடித்திருக்கிறார்
போலீஸ்
கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவித்ரா ஜனனி தனது வேலையை குறையில்லாமல் செய்திள்ளார் .
இவருக்கும், பாலாவுக்கும் இடையிலான காதல் கட்டாயத்தில் வைக்கப்பட்டது போல் இருக்கிறது.
வினோதினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். பரப்
பரிச்சயம் பல முகங்கள் தொடரில் நடித்துள்ள அனைவரும் காட்சிகளுக்கும்,
திரைக்கதைக்கும் உயிரூட்டும் வகையில் பயணிக்கிறார்கள் .
இசையமைப்பு ஆர்.எஸ்.ராஜ் பிரதாபின் பின்னணி இசை புலனாய்வு மற்றும்
அதிர்ச்சியூட்டும் இசை காட்சிகளுக்கு ஏற்ப கூடுதல் பலம்
சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவு மகேந்திரா எம்.ஹெண்ட்ரி,
காட்சிகளை பல கோணத்தில் காட்சிப்படுத்திய லான் லீனர் என்பதை மறந்து பார்வையாளர்களை
தன் வசம் தொடருடன் ஒன்றிவிட செய்கின்றன .
படத்தொகுப்பு துரை பிரகாஷ், ஒவ்வொரு தொடரிலும் பல மர்ம முடிச்சுகளை போட்டு,
அடுத்த தொடரையை எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கிறது காட்சியை
தொகுத்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த
தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் . எம்.தினகரன், பெரிய திருப்பங்களுடன் அதிர்ச்சியான
சம்பவங்கள் மூலம் பார்வையாளர்
களுக்கு புதியமாதிரியான புலனாய்வு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
6- தொடர்களையும் பார்த்தாலாம் , நேரம் போனதே தெரியாதவில்லை ஒவ்வொரு தொடரிலும் ஒரு
சம்பவம், அதுல போடப்படும் மர்ம முடிச்சுயை , அதை அவிழ்க்கும் நாயகனின் விசாரணை என்று
தொடரை சிறப்பாக எடுத்துச் செல்லும் இயக்குநர் எம்.தினகரன், கொலை சம்பவம் அறிவியல் இவை களுடன் இணைத்து
காட்சிகளை எடுத்த வடிவில் கூடுதல் சிறப்பு.
தொடர் கொலைகள், புலனாய்வு என்று
கிரைம் திரில்லர் தொடராக இருப்பினும் , அதிக இரத்தம் கரையை போன்றவைகளை தவிர்த்து, அனைத்து தரப்பினர்கள்
சேர்ந்து பார்க்கும் விததில் ஒரு தொடராக கொடுத்திருக்கிறார்
இயக்குநர் எம்.தினகரன், பல சம்பவங்களை சேர்த்து ஒரு தொடராக கொடுத்து
பார்வையாளர்களை கவரும் வகையில் பெரிய வெற்றியை தந்திருக்கிறார்.
இணையத்தொடரை பார்த்தத்தில், ‘‘ரேகை’’
அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்த உண்மை சம்பவம் திரில்லர், கிரைம் , தொடர் கொலை புலனாய்வு ஜி- 5, தொலைக்காட்சியில் விரைவில் காணுங்கள்.