“அதர்ஸ்” திரைப்பட விமர்சனம் !

Share the post

“அதர்ஸ்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- ஆதித்யா மாதவன், கௌரிகிஷா, அஞ்சு குரியன், நந்து ஜெகன்,

முனிஷ்காந்த், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி‌ மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் ‌: – அபிர் ஹரிஹரன்.

மியூசிக் :- ஜிப்ரான்.

ஒளிப்பதிவு :-
அரவிந்த் சிங்.

தயாரிப்பாளர்கள்: கிராண்ட் பிக்சர்ஸ்.

நெடுந்தூரம் வந்து கொண்டிருந்தது.ஒரு வேன் ஒன்று தீடீரென விபத்துக்குள்ளாகி, வெடித்து சிதறுகிறது.

அந்த விபத்தை விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரியான

நாயகன் ஆதித்ய மாதவனுக்கு வேனில் இருந்த மூன்று

பெண்கள் மற்றும் ஒரு ஆண் பற்றிய சில தகவல்கள் தெரிய வருகிறது.

அந்த தகவல்களை வைத்து தொடர்ந்து மேற்கொள்ளும் விசாரணையில் பல

அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது, அதுல

மருத்துவத்துறையில் மிக பெரிய மோசடி பற்றியும் தெரிய வந்தது.

அதன் என்ன ? , அந்த மோசடியில் முக்கிய பின்னணியில் இருப்பவர்கள் யார் ?

என்பதை நாயகன் எப்படி கண்டுபிடிக்கிறார் ? என்பதை இதுல பரபரப்பாக விறுவிறுப்பாகவும் சொல்வது தான் “அதர்ஸ்”.கதைக்களம்

நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், காவல்துறை

அதிகாரியாக வேடம் அவருக்கு கன கச்சிதமாக பொருத்தமா உள்ளது. காக்கி உடையில் அவரது கம்பீரமாக

இருப்பினும், அவர் முகத்தில் குழந்தை வடிவம் தெரிகிறது.

அவர் காதலை விட கடமை தான் முக்கியம் என்று தனது பணியில்

பரபரப்பாக இருக்கும் ஆதித்யா மாதவன், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு

நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

நாயகியாக நடித்துள்ளார் கெளரி கிஷன், மருத்துவர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகனுக்கு இணையான முக்கியத்துடன்

அவரது கதாபாத்திரம் பயணிக்கிறது.

காதல், டூயட் என கமர்ஷியல் நாயகியாக மட்டும் இல்லாமல் கதைக்கு

முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக ஏற்ப கெளரி கிஷன் கவனம் ஈர்த்துள்ளார்

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அஞ்சு

குரியன், நண்டு ஜெகன், முனீஷ்காந்த், ஆர்.சுந்தரராஜன், மாலா பார்வதி என

மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை மிக‌‌ சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்

கதைக்கு ஏற்ப பயணித்திருக்
கின்றன.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில்

காட்சியின்
வண்ணஙகள்கள் கண்களுக்கு பளிசென்று இருக்கின்றன.

கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் அபின் ஹரிஹரன், மருத்துவத்துறையில்

நடக்கும் குற்ற செயலை மையமாக வைத்துக் கொண்டு

பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

பார்வையாளார்
களை, அவர்கள் ஈர்க்க வைத்து நடக்கும் குற்ற செயல்

ஆகியவை படத்தை எதிர்பார்ப்புடன் பார்க்க வைப்பதுடன், பார்வையற்றவர்
களை வைத்து என்ன செய்கிறார்கள் ?

என்ற கேள்விக்கான பதிலை பல திருப்பங்களுடன்,

படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை பார்வையாளர்கள் மனதில ஈர்க்க

வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் அபின் ஜம் ஹரிஹரன்.

படம் பார்த்தத்தில், ‘அதர்ஸ்’ ரசிகர்களின் மகிழ்ச்சியுடன்

துப்பறியும் பெருகும் ஒவ்வொரு நாட்கள். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *