
“மார்கன்”திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள்:- விஜய் ஆண்டனி, அஜய் தீசன், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திரன்,
பிரிகிடா, தீபிஷிகா, அரச்சனா, கனிமொழி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- லியோ ஜான்பால்.
மியூசிக் :- விஜய் ஆண்டனி.
ஒளிப்பதிவு:-
எஸ்.யுவா.
படத்தொகுப்பு :-
லியோ ஜான்பால்
தயாரிப்பாளர்கள் :- விஜய் ஆண்டனி பிலிம் கார்பேர்ஷன் – பாத்திமா விஜய் ஆண்டனி.
ஒரு மனிதன், ரசாயனத்தை தனது உடலில் செலுத்தி
பெண்.ஒருவரை கொலை செய்து விட்டு அவளது உடலை கொண்டு போய் ஒரு குப்பை தொட்டியில்
வீசி விடுகிறார். இந்த கொலையை பற்றி நன்கு அறிந்து மும்பையைச் சேர்ந்த முன்னாள்
காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனியை
அதிர்ச்சியடைச்
செய்கின்றன. தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை
விசாரிக்க சென்னைக்கு அவர் வருகிறார். சென்னைக்கு வந்த
காவல்துறை அவருக்கு சில உதவிகளை செய்துக்
கொடுக்கின்றன.
விசாரணையை தொடங்கும் விஜய் ஆண்டனி, தனக்கு கிடைக்கும்
தடயங்கள் மூலம் அஜய் தீசனை தனது விசாரணையில் வளையத்திற்குள்
கொண்டு முயற்சி செய்து
வருகிறார். ஆனால், அவரது லித்தியமான செயல்கள் பல
சந்தேகங்களை எழுப்ப, மறுபக்கம் அதே பாணியில் மற்றொரு பெண்ணும் கொலை
செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணை வளையத்திற்குள்
சிக்கிய அஜய் தீசன் யார்?, கொலைகளுக்கு பின்னணி என்ன?, உண்மையான
குற்றவாளியை விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடிக்கிறார்?
என்பதை வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர்
பாணியோடு, சித்தர்களின் சித்து விளையாட்டு என்ன என்பதை
புதியகதைக் களத்தோடு சேர்த்து சொல்வது தான் “மார்கன்”கதைக்களம்
விஜய் ஆண்டனி சர்வ சாதாரணமாக கையாளக்கூடிய
விசாரணை அதிகாரி வேடத்தில் அமர்க்களமாக நடித்துள்ளார.
ரசாயனத்தால் உடலில் ஏற்பட்ட பாதிப்போடு, அவர் மேற்கொள்ளும் விசாரணையும்,
அவரது உடல் மொழியும் திரைக்கதையை
சுவாரஸ்யமாக நகர்ந்து செல்லுக்கிறது.
அனைத்து திறமையை நன்கு கற்று தேர்ந்தவர் அறிமுக
நடிகர் அஜய் தீசன், என்பதை நிரூபிப்பதற்கு அவரது கதாபாத்திரம் வடிவம் மாற்றம் செய்யப்பட்டது
போல் இருக்கிறது. அவரும் நடிப்பு, ஆக்ஷன், ரொமான்ஸ்,
திறமை என அனைத்தும் தனக்கு வரும் என்பதை நிரூபித்துள்ளார்.
சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள்
திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சாதாரண காட்சிகளை கூட
ரசிகர்கள் கூர்ந்து கவன ஈரப்பை செய்கிறது.
திரைக்கதையில் ஏற்படும் சில காட்சிகள் கூட பார்வையாளர்கள் மறந்து கதையோடு பயணிக்கிறது
அந்த அளவுக்கு பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்கின்றன.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா கிரைம்
த்ரில்லர் பாணிக்கு ஏற்ப பயணித்துள்ளது. குறிப்பாக சாதாரண
திரைக்கதையின் திருப்பத்துக்கு
முக்கிய பங்கு வகிக்கும் அளவுக்கு காட்சிகளை பதிவிறக்கி செய்தி ருக்கிறார்.
விஷ்ணு மற்றும் லியோ ஜான் பாலின் திரைக்கதை
வழக்கமான கிரைம் த்ரில்லர் பாணியில் இருந்து, அதுல
கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் சித்தர்களின் சித்து விளையாட்டு
அமைந்துள்ளது.
ஆனால், அதை முழுமையாக சொல்லாமல்,
திரைக்கதையை வேறு ஒரு பாதையில் பயணிக்கிறது.
பார்வையாளர்கள்
சற்று ஏமாற்றம் அளிக்கின்றன.
எழுதி இயக்கியுள்ளார் லியோ ஜான் பால் வெற்றிகரமான
படத்தொகுப்பாளர் என்பதால், எந்த விஷயமாகும் இருந்தால் அதை
எப்படி சொல்ல வேண்டும் என்பதை மிக தெளிவாக இருக்கிறார்.
படத்தின் முதல்
பாதியிலே குற்றவாளி யார் இவர் தான், என்று பார்வையாளர்கள் முடிவு செய்துகொள்ளும்
அளவுக்கு காட்சிகளை அமைத்திருக்கிறார், அவர் தான் குற்றவாளி என்பதை
விஜய் ஆண்டனி எப்படி அதை நிரூபிக்கப் போகிறார்? என்பதை விடையை மிக
விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார்.
ஆனால், இரண்டாம் பாதியில் பார்வையாளர்கள்
எதிர்பார்க்காத திரைக்கதையில் திருப்பங்களை ஏற்படுத்தியது
“மார்கன்’ படம் பார்த்தத்தில் வழக்கமான மார்க்கத்தை கொண்டு போய்
கதையின் விளிம்பில் கதையை முடித்து இருக்கிறார் இயக்குனர். இது ஓரு பொழுது போக்கு
திரைப்படம் அனைவரும் பார்த்து கண் களிக்கலாம்.