
“மாயக்கூத்து” திரைப்பட விமர்சனம் …
நடித்தவர்கள் :- நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ்,
மு.ராமசாமி, சாய் தீனா,எஸ்.கே.காயத்ரிரேகாகுமணன்,
முருகன் கோவிந்தசாமி,
பிரகதீஸ்வரன்,
ஐஸ்வர்யா ரகுபதி.
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- ஏ.ஆர். ராகவேந்திரா. மற்றும்
எம்.ஸ்ரீனிவாசன்
மியூசிக் : – அஞ்சனாராஜன்
கோபாலன்.
ஒளிப்பதிவு :- சுந்தர் ராம் கிருஷ்ணன்.
படத்தொகுப்பு:- நாகூரான் ராமச்சந்திரன்
தயாரிப்பாளார்கள் :-ராகுல் மூவி மேக்கர்ஸ், அபிமன்யூ கிரியேஷன்ஸ்- ராகுல் தேவ், பிரசாத் ராமச்சந்திரன்.
பிரபல எழுத்தாளர் வாசன் கதநாயகன் நாகராஜன் கண்ணன்.தான்
எழுதும் கதையில், ஒரு பணக்கார தாதா வீட்டில் வேலை செய்யும் ஏழை பெண், நீட் தேர்வுக்காக
தயாராகும் மாணவி, நடுத்தர குடும்ப பெண் என நான்கு
முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கிறார்.
இந்த கதாபாத்திரங்களின் பின்னணி என்ன மற்றும்
நியாயங்களை இவரது மனம் சொல்லும்
யோசனையின் அடிப்படையில் உருவாக்குகிறார்.
ஆனால், அவரது யோசனைகள் தவறு என்று அவரது நண்பர்கள் எடுத்து
சொல்லுகிறார்கள். வாசன் அதனை ஏற்றுக்கொள்ளு
வதில் அவரது மனதும் எழுத்தாளர்
என்ற முறையிலும் ஈகோ என்ற அடிப்படையில் அதை ஏற்க மறுக்கிறது.
ஒரு நாள் இவர் கதையில் உருவாக்கிய நான்கு
கதாபாத்திரங்கள், அவர்களது குடும்பத்தினர்கள்.
தனது நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அதனால் அவர் எங்கே சென்றாலும் எழுத்தாளரை
நாகராஜனை பின் தொடர்கிறார்கள்.
இது உண்மை தானா இல்லையா ? என்று மனக்குழப்பதோடும்
நாகராஜன், தன் கதை மூலமாக இந்த சிரமத்திற்கு ஒரு
தீர்வு காணவேண்டும் என முயற்சிசெய்ய. அதன் பிறகு என்னென்ன
நடக்கிறது என்பதை இதுல சுவாரஸ்யமான
திரைக்கதைகளோடு சொல்வது தான் “மாயக்கூத்து” என்ற திரைப்பட கதைக்களம்.
கதையின் நாயகனாக எழுத்தாளர் வாசன் என்ற
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகராஜன்
கண்ணன், தலைக்கணம் கொண்ட ஒரு
எழுத்தாளராக நடிப்பில் அசத்தியுள்ளார்.
பதிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ், தனது
அனுபவமான மற்றும் எதார்த்தமான நடிப்பின மூலம் இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளார்.
ரேகா குமனன், காயத்ரி, பேராசிரியர் மு.ராமசாமி, தீனா, முருகன் கோவிந்தசாமி, பிரகதீஸ்வரன், ஐஸ்வர்யா ரகுபதி என மற்ற
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
கதையை, தங்களது கதாபாத்திரத்தில்
தன்மையை முழுமையாக உள்வாங்கி நடித்துள்ளார்கள்.
இந்த படம் மூலம் இசையமைப்பாளர் அறிமுகமான அஞ்சனா ராஜகோபாலன்,
முதல் படத்தில் மிக கவனம் ஈர்க்கும் வகையில் இசையமைத்திருக்
கிறார்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், தனது கேமராவை
கதாபாத்திரங்கள் ஏறபே சிறப்பாக காட்சி படுத்திருக்கிறார்.
கதையின் இயல்பான தனி தன்மையைஇதுல, எதார்த்தமான
நடிப்பை சிறப்பாக காட்சிப்படுத்தி பாராட்டுப் பெற்றுயுள்ளார்.
திரைக்கதைக்கு முக்கிய உணர்வுடன். படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
நாகூரான் ராமச்சந்திரன், தேவையான
காட்சிகள் மட்டும் கதாபாத்திரங்களுக்குள் ஏற்பே
திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளார்.
ஏ.ஆர்.ராகவேந்திரா மற்றும் எம்.ஸ்ரீனிவாசன் ஆகியோரின் வித்தியாசமான கதைக்கரு மற்றும்
சுவாரஸ்யமாக திரைக்கதையில் பார்வையாளர்களை கனவத்தை ஈர்க்க செய்திருக்கிறார்.
ஒரு படைப்பாளி சொன்ன விஷயம் தான், படைப்பாளிக்கு
பொறுப்பு என நாயகன் நாகராஜன் கண்ணன், கவனத்தை பெற்றுயுள்ளார்.
கதையில் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா, படத்துடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்திருக்கிறார்.
முழுக்க மாயக்கூத்து படம் பார்த்தத்தில், “மாயக்கூத்து” சின்ன
பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள
சிறந்த கதையமைப்பு கொண்ட
சமுதாயத்தின் உணர்வு பூர்வமான படைப்பு.