மகாசேனா” திரைப்பட விமர்சனம்…

Share the post

“மகாசேனா” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- வெமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங்,

மஹிமா குப்தா, விஜய் செயோன், ஆல்ஃபிரட் ஜோஸ்,

சிவ கிருஷ்ணா சுபாகி ஜா, இலக்கியா மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – தினேஷ் கலைசெல்வன்.

மியூசிக் : – ஏ. பிரவீன் குமார்.

ஒளிப்பதிவு:-
மனாஸ் பாபு.டி.ஆர்.

படத்தொகுப்பு:-
நாகூரான் ராமச்சந்திரன்.

தயாரிப்பாளர்கள்:-
மருதம் புரொடக்ஷன்ஸ்.

பழங்குடியினரான நாயகன் விமல் சேனா என்ற யானையை

வளர்க்கிறார். அவரது மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன்

சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு

பழங்குடியின மக்களை வைத்து திருட திட்டமிடுகிறார். இதற்கிடையே மதம்

பிடித்த விமலின் யானை அவரது மகளை தாக்கிவிட்டு

காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், கோவில்

சிலை கடத்தல் திட்டத்தை முறியடித்தாரா ? , இல்லையா? காட்டுக்குள் சென்ற யானை என்னவானது ? என்பது தான் படத்தின் கதைக்களம்.

விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு

கதாபாத்திரமாக வந்து போகிறார். பழங்குடியினத்தைச்

சேர்ந்தவராக நடித்திருப்பவர் அதற்காக சிறிதும்

மெனக்கெடாமல் வழக்கம் போல் நடிக்க தெரியாமல் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே, வீர பெண்ணாக கம்பீரமான

கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்
தாலும், வீரத்தை

வெளிக்காட்ட வேண்டிய காட்சிகளில் அடங்கிப் போகிறார்.

யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை

எடுபடவில்லை. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜான் விஜய்,

வழக்கம் போல் கோமாளித்தனமாக நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார்

சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கிறார் சிறுமி இலக்கியா

ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், காட்சிகளை படமாக்கிய விதம்

படத்தின் தரத்தை உயர்த்தியிருப்ப
துடன், படத்திற்காக செய்யப்பட்ட

செலவுகளை திரையில் காட்டியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய

பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மூன்று விதமான கதைகளை கொண்ட திரைக்கதையை பெரும்

தடுமாற்றத்துடன் தொகுத்திருக்கிறார்

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன்,

எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன்,

தான் சொல்ல வந்ததை தெளிவு இல்லாமல் சொல்லியிருப்ப
துடன், காட்சிகளையும், கதாபாத்திரங்களை

யும் சரியான முறையில கையாள தவறியிருக்கிறார்.

தலைப்பு மற்றும் கதைக்களம் கவனம்

ஈர்த்தாலும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வனின்

திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் எந்தவிதத்திலும்

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க வில்லை.

படம்பார்த்தத்தில், ‘மகாசேனா’ சோதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *