
“லாக்டவுன்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட்,
லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா
மாறன், விநாயக ராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- ஏ.ஆர்.ஜீவா.
மியூசிக் :- என்.ஆர்.ரகுநந்தன் & சித்தார்த் விபின்.
ஒளிப்பதிவு:-
கே.ஏ.சக்திவேல்.
படத்தொகுப்பு:-
வி.ஜெ.சாபு ஜோசப்.
தயாரிப்பாளர்கள்:- லைகா- புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – சுபாஸ்கரன்…
கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன், ஐடி துறையில் பணியாற்ற
விரும்புகிறார். அதற்கான வேலை யில் ஈடுபடுகிறார்.
அவருக்கு கிடைத்தது.ஆனால்இரவு நேரத்தில் பணிபுரியவேண்டிய வாய்ப்புகள்
கிடைப்பதால் குடும்பத்தில் அந்த வேலைக்கு
போகவேண்டாம் என்று தடை விதித்திருகிறார்கள்.
எப்படியாவது எந்த வேலைக்கு போக வேண்டும், அது பகல்
நேர வேலை இருக்க வேண்டும், என்பதில் முயற்சியில்
ஈடுபடவேண்டும் என்று அக்கறை காட்டி வரும்
அனுபமா பரமேஸ்வரன், வேலை விஷயமாக தனது தோழியுடன்
ஒருவரை சந்திக்க போகிறார். அங்கு மது
விருந்தில், ஆட்டம், பாடல் என்று அங்கு வேறு ஒரு உலகத்தை பார்க்கும் அனுபமா
பரமேஸ்வரனுக்கு, அந்த உலகத்தில் வாழ வேண்டும்
என்ற ஆசை வருகிறது. அதற்காக தனது பெற்றோர்களிடம் பொய்
சொல்லி, அங்கு ஆட்டம், பாடல் என்று மகிழ்ச்சியில், போதையில் மயங்கி
விடுகிறார்.
அடுத்த மறுநாள் காலை வீட்டுக்கு
சென்று வழக்கம் போல் தனது வாழ்க்கையை
தொடர்கிறார் அனுபமா பரமேஸ்வரன், சில வாரங்கள் கழித்து
அவர் எதிர்பார்க்காத பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
அதற்கு காரணம், அந்த மது விருந்து தான் என்று தெரிந்தாலும், அதுல
இருந்தவர்களில் யார் ? என்று தெரியாத பெரும்
குழப்பம் ஒரு பக்கம் இருக்கிறது, குடும்பத்திற்கு
தெரியாமல் அந்த பிரச்சனையில் இருந்து மீள்ள எப்படி ? என்ற
போராட்டத்தை எதிர்கொள்கிறார். அவரது பிரச்சனை
என்ன ?, ஆனது அதுல இருந்து அவர் எப்படி மீண்டாரா ?, இல்லையா?என்பதை
உணர்வுப்பூர்வமாக பெண்களுக்கான எச்சரிக்கையாக
சொல்வது தான் ‘லாக்டவுன்’.என்ற திரைப்பட கதைக்களம்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களாக இருந்தாலும், தங்களது
பிரச்சனையை குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும்,
இல்லை என்றால் பெரும் பாதிப்புகள் அவர்களுக்கு
வரக்கூடும், என்பதை இது ஒரு விழிப்புணர்வு
எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஒரு படைப்பாகும் கொடுத்துள்ளார் இயக்குநர்
ஏ.ஆர்.ஜீவா, இதை ஊரடங்கு உத்தரவை என்ற உண்மையை உணர்த்தும் வகையில்
சில சம்பவத்துடன் சேர்த்து மிகவும் சுவாரஸ்யமான
திரைப்படமாக நமக்காக இயக்கியிருக்கிறார்.
தென்இந்திய மொழிகளில் பல முன்னணி
கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அனுபமா
பரமேஸ்வரன்,
இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவரை மிகவும் பாராட்ட வேண்டும்.
அழுத்தமான அதே சமயம் சர்ச்சைக்கு ஒரு
கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பதுடன்,
தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு
உயிரூட்டி, பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இதுல கட்டுப்பாடுகள் மிக்க குடும்பத்தை சேர்ந்தவராகவும்
இருப்பினும், புதிய உலகத்தை பார்த்ததில் பரவசமடைவது,
அதில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது, அனைத்தையும் மறந்துவிட்டு
உற்சாகமாக நடனம் ஆடுவது, பிறகு பிரச்சனையை எதிர்கொண்டு,
அதுல இருந்து மீள்ள போராடுவதில், என்பது அனைத்து ஏரியாவில் அடித்து
விளையாடிய இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரனுக்கு
அவருக்கு நிச்சயம் விருது உறுதி, என்பதை அடித்து
சொல்லும் அளவிற்கு.நடித்திரக்
கிறார்.
கதாநாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கிறார் சார்லி மற்றும்
நிரோஷா ஆகியோர் எதார்த்தமான நடிப்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த
உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன
பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி,
ராஜ்குமார், லொள்ளு சபா மாறன்,
விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா
ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல், தேர்வு செய்த
லொக்கேஷன்கள் மற்றும் பயன்படுத்திய
விளக்குகள்,கலர் வண்ணங்கள் அனைத்தும், ஒரு
திரைப்படத்தை தாண்டிய எதார்த்தமான ஒரு
பெண்ணின் வாழ்க்கையை பார்க்கும்போது
வகையில் உணர்வை கொடுக்கிறார்கள்.
குறிப்பாக வீட்டுக்குள்
படமாக்கப்பட்டிரு
க்கும் காட்சிகள் அனைத்தும்
இயல்பாக சித்தரிக்கப்பட்டிருப்பதுடன், உணர்வுப்பூர்வ
மாகவும் படமாக்கப்பட்டிருக்கிறார்.
இசையமைப்பு. என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த்
விபின் இருவரது இசையில் பாடல்கள் பட்டையை
கிளப்பியிருப்பதுடன்கதாபாத்திரத்தின் உணர்வுகளை பிரபலிக்கவும்
செய்திருக்கிறார். பின்னணி இசையும் காட்சிகளில் இருக்கும்
பதற்றத்தை பார்வையாளர்
களிடமும் செய்கிறது.
எதிர்பாராத ஒரு சிக்கல், அதுவும் பெரும் சிக்கல்,
அதுல இருந்து மீள்வாரா ? இல்லையா ?, என்பதை பரபரப்பாக சொல்லாமல், அதன்
மூலம் ஒரு பெண் எப்படி பாதிக்கப்படுகிறார், அதுல இருந்து மீள்வதற்கு எப்படி
எல்லாம் போராடுகிறார், என்பதை தனது படத்தொகுப்பு மூலம்
பார்வையாளர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார் வி.ஜெ.சாபு ஜோசப்
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கு உத்தரவு
காலக்கட்டத்தில் கதையின் முக்கிய அம்சமாக பயன்படுத்தியிருந்தாலும், ஒரு பெண்
எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதுடன்,
அதற்கான திரைக்கதையில் மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
நாயகிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் யாராக இருப்பார் ? என்ற
கேள்வியை எழுப்பி பார்வையாளர்களை கதைக்குள்
இழுத்துவிடும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, நாயகி
தனது பிரச்சனையில் இருந்து மீள்வாரா ? என்ற மற்றொரு கேள்வியின் மூலம்,
படம் முழுவதையும் எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்கிறார்.
ஒற்றை பதிலுக்காக பார்வையாளர்களை எதிர்பார்ப்புடன் படம்
முழுவதும் பயணிக்க வைத்து, அந்த பதிலை சொல்லாமல், அதே சமயம்,
பார்வையாளர்கள் மனதில் எழுந்த கேள்விகளை மறக்கும் விதத்தில், எதிர்பார்க்காத
திருப்பத்தின் மூலம் பெரும் அதிர்ச்சியளிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா,
இறுதியில் தான் சொல்ல முயற்சித்த கருத்தை மிக அழுத்தமாக பதிவு
செய்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
படம் பார்த்தத்தில், ‘லாக்டவுன்’ இறுக்கம்.