கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

Share the post

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது. இது மே 17 முதல் மே 21, 2025 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டர்ன்கே மியூசிக் மற்றும் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அதுல் சுரமணி மற்றும் சரிகம இந்தியா லிமிடெட் முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய் வாத்வா, ஏபி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் ஜெ, தென்னிந்திய இசைக் கம்பெனிகள் சங்கத்தின் (SIMCA) செயலாளர் சுவாமிநாதன், தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பியானோ கலைஞர் மற்றும் தொழில்முனைவோர் அனில் ஸ்ரீனிவாசன், இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டியின் (IPRS) சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரும்பா பானர்ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி (TFAPA) தனஞ்செயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய இசையமைப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ பொருளாளர் விபின் மிஸ்ரா. திங்க் மியூசிக் துணைத் தலைவர் சந்தோஷ் குமார், ஃபீவர் எப்.எம், ரேடியோ ஒன் நெட்வொர்கின் ஸ்டேஷன் மற்றும் விற்பனைத் தலைவர் பாலசுப்ரமணியன் பரசுராமன், விருது பெற்ற பின்னணிப் பாடகரும், இந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் உரிமைகள் சங்கத்தின் முன்னாள் இயக்குநருமான ஹரிசரன், இந்திய பின்னணிப் பாடகர் சுமேஷ் நாராயணன், விருது பெற்ற பன்முக தாள வாத்தியக் கலைஞர் ஆகியோரும் உள்ளனர்.

குழு உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தில் சுயாதீன கலைஞர்கள், லேபிள்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உரிமைகள், இசை அமைப்புகள் மற்றும் சமூகங்களின் பங்கு, திரைப்படம் மற்றும் வணிக இசையில் AI இன் செல்வாக்கு மற்றும் சமநிலை உரிமங்களின் சிக்கல்கள் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

தேசிய விருது பெற்ற பியானோ கலைஞர் அனில் சீனிவாசன் மற்றும் விருது பெற்ற பல தாள வாத்தியக் கலைஞர் சுமேஷ் நாராயணன் ஆகியோர் தங்கள் பிரம்மாண்ட இசையால் நிகழ்வை அலங்கரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *