
கீனோ
இதுவரை உலக திரைப்படங்களில் சொல்லப்படாத கதை களத்தில் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் கீனோ…

கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க ஆர்கே திவாகர் இயக்கத்தில் மகாதாரா பகவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களான மூவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் கீனோ…

இதுவரை நாவல்களிலோ திரைப்படங்களிலும் சொல்லப்படாத கதை கருவும் கீனோ என்ற கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும் புதுமையானதாகவும் இருக்கும்…
இந்தத் திரைப்படத்தை எழுதி இசையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏ.வி.எம் மெமோரியல் விருது மற்றும் தங்கப் பதக்கமும் பெற்றவர்…

இவர் இயக்குனர் கதிரிடம் காதல் வைரஸ் படத்தில் உதவி இயக்குனராகவும் இயக்குனர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி நந்தலாலா திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர்…
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு துறையில் பயின்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழக அரசின் திரைப்பட விருது பிரிவில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாணவ விருதை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர். இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பேத்தியாவார்… இவர் தமிழ் திரை உலகின் முதல் பெண் படத்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர்…
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப் பதனிடுதல் (Film Processing &DI ) பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர்.
இத்திரைப்படத்தில்
மகாதாரா பகவத்
மாஸ்டர் கந்தர்வா ( அறிமுகம்)
ரேணுகா சதீஷ் ( அறிமுகம்)
கண்ணதாசன் ராஜேஷ்கோபிஷெட்டி
இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்
இத் திரைப்படத்தின்
ஒளிப்பதிவு -ஆலிவர் டென்னி
படத்தொகுப்பு -கிருத்திகா காந்தி
எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர்- சிவம்
மக்கள் தொடர்பு -பெருதுளசி பழனிவேல்
இணை தயாரிப்பு-
மகாதரா பகவத்
ஆர்.கே திவாகர்
தயாரிப்பு – கிருத்திகா காந்தி
எழுத்து இசை & இயக்கம்
ஆர். கே. திவாகர்
கீனோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயாரிப்பாளர் திரு முரளி ராமசுவாமி அவர்களும்
இயக்குனர் திரு இதயம் கதிர் அவர்களும்
இயக்குனர் திரு வெங்கட் பிரபு அவர்களும் வெளியிட்டார்கள்..
இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கிறது