“கைராசி குடும்பம்”

Share the post

“கைராசி குடும்பம்”

ஜெயா டிவியில் திங்கள் முதல்வெள்ளி வரை இரவு 07:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மங்களகரமான நெடுந்தொடர் “கைராசி குடும்பம்” . இதில் நடிகர் சிவா ,நடிகை சுபத்ரா,ஸ்ரீவித்யாசுரேஸ்வர் மற்றும் பலர் இந்நெடுந்தொடரில் பயணித்துள்ளனர். ஊர் உலகத்தில் கைராசிகுடும்பம் என்ற பெயர் எடுத்த கூட்டு குடும்பம் ஒரு பெண்ணின் வருகையால் கைராசி குடும்பம் என்ற அந்தஸ்தை இழக்கிறது அதை மீட்டு எடுப்பதை கதை கருவாக பல திருப்பங்களும் கருத்துகளையும் கொண்டது .
ஊருக்குள் பெரும் செல்வாக்குடைய நபர் தான் சிவஞானம் (சிவா) கதையின் நாயகன், இவருக்கு மூன்று தம்பி மற்றும் இரண்டு தங்கைகள், ஒரு தங்கைக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமையும் தானே எடுத்து குடும்பத்தை தாங்கும் நபராக இருக்கிறார், இவரின் மனைவி மீனாட்சி (சுபத்ரா), இவரை சிவஞானத்தின் குடும்பமே அவ்வளவு அக்கறையாக பார்த்து கொள்கிறார்கள். அதற்கேற்றாற்போல் போல் மீனாட்சியும் அந்த குடும்பத்தை தாங்குகிறாள்.

நெசவாளர் சங்கத்தின் தலைவருக்கான போட்டி நடக்கிறது, அதன் தலைவராக சிவஞானம் இருக்கிறார் .மீண்டும் சிவஞானமே அந்த பதவிக்கு வர வேண்டும் என்று அச்சங்கத்தினர் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர் இதில் அந்த பதவிக்கு சிவஞானத்தின் பரம்பரை எதிரி போட்டியாளராக வந்து தோல்வியும் அடைகிறார் .இதில் இருந்து அவர் சிவஞானத்தை பழி வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். மறுபுறம் மீனாட்சியின் தாய் , மீனாட்சி சிவஞானத்தை திருமணம் செய்து கொண்டதை பிடிக்காமல், மீனாட்சியின் திருமண நாளில் வந்து அவரிடம் மல்லுக்கட்டி சண்டை போடுகிறர், இதனால் மனம் உடைந்த அக்குடும்பத்தினர். மீனாட்சியின் பக்கம் பேசி அவரை ஆறுதல் செய்கின்றனர்.

இதை தாண்டி சிவஞானத்தை முதல் தம்பிக்கு வரன் வருகிறது , திருமணமும் நடக்கிறது. அந்த வீட்டின் இரண்டாம் மருமகள் பானு (ஸ்ரீவித்யா) இந்த குடும்பத்தை உடைப்பதே இவரின் நோக்கமாக காலப்போக்கில் மாறுகிறது.

மீனாட்சியின் தாய் தன மகளை புரிந்து கொண்டாரா?? சிதைந்த குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா சிவாஞானம் ,மீனாட்சி ?? பானு இந்த குடும்பத்தை உடைக்க போட்ட திட்டம் பலித்ததா?? ஜெயா டிவியில் திங்கள் முதல்வெள்ளி வரை இரவு 07:30 மணிக்கு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *