
“ப்ரீடம்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-
எம்.சசிகுமார்,லிஜி மோல்ஜோஸ்,
மு.முத்துசாமி,
சுதேவ்நாயர்,
மாளவிகா அவினாஸ்,
சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மணிகண்டன், மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – சத்ய சிவா.
மியூசிக் : – ஜிப்ரான்.
ஒளிப்பதிவு:-உதய
குமார்.
படத்தொகுப்பு:-
ஸ்ரீ காந்த் என்.பி.
தயாரிப்பாளர்கள் :- பாண்டியன் பரசுராமன்.
இது நடந்தது.1991. ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து.
கள்ளத்தோணி மூலம் தமிழகத்திற்கு வரும், சசிகுமார் மற்றும்,பல தோழர்கள் ஈழத்தமிழர்களுடன்
இராமேஸ்வரம் முகாமில் தங்க வைத்து. அப்போது, பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள்
மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார்.
இதனால், சமீபத்தில் இலங்கையில் இருந்து வந்தவர்களை
விசாரிப்பதற்காக அழைத்துச் செல்கிறது.தமிழக காவல்துறையினர்.
அவர்களை தங்க வேலூர் கோட்டையிலுள்ள சிறை போன்ற
ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதுல அடைத்து வைக்கிறார்கள்.
பிறகு விசாரணை என்ற பெயரில் பல
வருடங்களாக கொடுமைகளை இப்போதும் அனுபவித்து வரும் அந்த
அப்பாவி ஈழத்தமிழர் மக்களை ஒரு சமயம் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்ய,
அவர்கள் தப்பித்துபோனார்
களா? இல்லையா? என்பதை உணர்வுப் பூர்வமா நிகழ்வுகளாக காட்சி அமைப்புகளுடன்
சொல்ல வந்துள்ளது. தான் இந்த “ப்ரீடம்” என்ற திரைப்படக் கதைகளஞ்சியம்.
இலங்கையில் நடக்கும் ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும்
மிகப்பெரிய உலகக் கொடுமைகளில் இதுவும் இருந்து வருகிறது. இதிலிலிருந்து
தப்பிப்பதற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த
ஈழத்தமிழர்கள் பலர் இலங்கையை விட அதீத கொடுமையை
இங்கு அனுபவித்த உண்மை சம்பவத்தை
மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்
இயக்குநர் சத்யசிவா, உணர்வுப்பூர்வமான படைப்பாக மட்டும்
இன்றி விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்துள்ளார்.
ஈழத்தமிழராக நடித்துள்ளார் சசிகுமார், வசன
உச்சரிப்பு மற்றும் உடல் மொழி என அனைத்திலும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
காவல்துறையினர் கொடூரமான இந்த செயல்களினால் துடிக்கும்
ஈழத்தமிழர்களின் வலியை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி காட்டி
பார்வையாளர்களை கலங்க வைத்துள்ளார்கள்.
அனைவருக்கும் நன்றிகள்.
சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளார் லிஜிமோல் ஜோஸை
தவிர இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்த லிஜி இலங்கையில் வாழ்வும் உண்மையான
ஈழத்தமிழர் பெண்
தான் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளார்.
சசிகுமாருடன் சிறையில் இருக்கும் மு.ராமசாமி,
மணிகண்டன் மற்றும் அனைத்து நடிகர்களும் நடிப்பில் மிரட்டி
இருக்கிறார்கள்.
புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார் ரமேஷ் கண்ணா, விசாரணை
அதிகாரியாக நடித்துள்ளார் சுதேவ் நாயர், வழக்கறிஞராக நடித்துள்ளார் மாளவிகா என முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ள கதாபாத்திரங்களில்
சரியான பொருத்தமான தேர்வுகள்.
ஜிப்ரானின் இசையில் இருக்கும் கதையின் கனத்தின்
கருத்துகள் காட்சிகளில் இருக்கும் பயத்தை அதிகமாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் உதயகுமார், சிறையில் நடக்கும்
கொடூரமான காட்சிகள் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்கும்
காட்சிகள், இடங்கள், அனைத்தும் மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார்.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி
மற்றும் கலை இயக்குநர்
சி.உதயகுமார்
ஆகியோர் பணியும் படத்திற்கும் மிக பெரிய பலம் சேர்த்துள்ளார்கள்.
ராஜீவ் காந்தி கொலையின் போது, நடந்தது.அதுல
தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழர்கள் அவர்கள் அனுபவித்த மிகப்பெரிய கொடுமைகளை
திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் சத்யசிவா, மறைக்கப்பட்ட
ஈழத்தமிழர்களின் துயரங்களை வெளிச்சம் போட்டு . கதாபாத்திரங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் மூலம்
பார்வையாளர்களின் மனதை உலுக்கி எடுத்துள்ளார் .
இயக்குநர் சத்யசிவா. விறுவிறுப்பான காட்சி அமைப்பால்
சிறந்த மேக்கிங் மூலமாக மிரட்டியுள்ளார்.
படம் பார்த்தத்தில் “ப்ரீடம்” புதிய சின்ன முன்னோட்டமாக வெளி வந்துள்ளது.