
எம்புரான் திரைப்பட விமர்சனம் . (தமிழ் மொழி தழுவல்)
நடித்தவர்கள் :-
மோகன் லால், டொவினோ தாமஸ்,
பிருத்விராஜ், மஞ்சு வாரியர்,
இந்திரஜித் சுகுமாறன், அபிமன்யு, விவேக் ஒபுராய், மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர்:- பிருத்விராஜ்
மியூசிக் :- தீபக்தேவ்
ஒளிப்பதிவு :- சுஜித்வாசுதேவ்.
படத்தொகுப்பு:-
அகிலேஷ்தேவ்.
முதலில் லூசிப்பர் என்ன கதை, எப்படி? இரண்டாம் பாகத்துடன்
இந்த எம்புரான் படத்தில் இணைகிறது என்பதை இங்கே பார்ப்போம்.
கேரளாவில்
முதல்வர்பி.கே.ராமதாஸ் இறந்த பிறகு ஆட்சியை யார்
கைப்பற்றி மிகப்பெரிய போதை கும்பலை கொண்டு வர விவேக் ஓபுராய் முயற்சிக்கிறார்.
இதை அறிந்து களத்தில் இறங்கி ஸ்டிபன் நெடும்பள்ளி இதற்கு முற்றுபுள்ளி வைத்து
ஆட்சியை இறந்த முதல்வர் மகனான டொவினோ தாமாஸிடம் ஒப்படைக்கிறார் மோகன் லால், இதோடு லூசிபர் முடிகிறது.
இப்போதும் எம்புரான், சரி டொவினோ மோகன்லால் விரும்பிய
நல்லாட்சியை தந்தாரா இல்லை என்றால், அங்கு தான்
டுவிஸ்ட் ஊழலில் மூழ்கி உள்ளது இந்த கட்சி.
அதோடு தான் செய்யும் தவறுகளை மறைக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி,
தனியாக கட்சி நடத்த அதோடு சர்வதேச
போதை கும்பல் வருகை என அனைத்தும் ஒன்று கூடுகிறது.
இதை அறிந்த மோகன்லால் பிறகு என்ன மீண்டும் ஸ்டிபன் நெடும்பள்ளி என்டரி
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை எப்படி அடக்குகிறார் என்பதே மீதிக் கதைக்களம்.
இந்த படத்தை பற்றிய கொஞ்சம் அலசல் படைப்பு என்ன என்பதை
பார்ப்போம்…
மோகன்லால் அவரின் பில்டப் மாஸ் காட்சிகளை நம்பியே படம்த்
தொடங்கியிருக்கிறார்
கள்.ஆனால், கதைக்களம் எப்படி இருக்கும்.
வேற எந்த இடத்தில் எங்கயோ ஆரம்பித்து.கதை அரை மணி நேரம் கழித்து தான் தெரிகிறது.
மோகன்லால் பில்டப் குளோசப் காட்சிகள் வருகிறது. அது ஒரு
மோகன்லால் ரசிகர்களின் பொறுமையாக பார்க்க தூண்டுகிறது…
பிறகு முதல் இருபது நிமிட காட்சிகளில் பிரித்விராஜ் எடுத்த
மற்றும் காட்சிகள் பிரமாண்டமான அதிர்ச்சியை எற்படுத்த
வைக்கிறது, அந்த சம்பவங்களின் மூலம் பிரிதிவி ராஜ் யார் என்பதை
கிளைமேக்ஸ் காட்சி யில் சொன்ன விதம் சூப்பரா இருந்தது
நடிகர்களின் பங்களிப்பு குறித்து பார்த்தால்
மோகன்லால் பெரிதும் நடிக்கும் பாத்திரத்தில்
மிரள வைத்த உள்ளார்
மிடுக்காக வருகிறார், சண்டை காட்சிகளில் அடித்து துவம்சம் செய்கிறார். அவ்வளவும்
பொறுமையாக அல்ட்டாமல். சண்டை செய்திருக்கிறார்.
மஞ்சு வாரியருக்கு இதில் சிறப்பான பாத்திரம், அதிலும்
இரண்டாம் பாதியில் ப்ளான் போட்டு கைதாகி
மக்கள் மனதை வெல்லும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
லூசிபர் லோக்கல் பாலிட்டிக்ஸ் அரசியல் கதை என்பதால்
எல்லோருக்கும் ஏற்றது போல் இருக்கிறது,
இண்டர்நேஷனல், கபூகா கார்டல், மாபியா என கதைக்களம் செல்கிறது
திரைக்கதையில் படம் பல இடங்களில் மே
மெதுவா செல்கிறது.
இப்படி பல சோதனைகள் இருந்தாலும்
மோகன்லால் இரண்டாம் பாதியில் மஞ்சு வாரியரை காப்பாற்றும் இடம், 3ம் பாகத்திற்கான தொடர்பு
லீட் என ஒரு சில விஷயங்களே ரசிக்க வைக்கின்றது.
டெக்னிக்கலான படம் மிக வலுவாகவே உள்ளது,
அதுல ஒளிப்பதிவு காட்சியமைப்பு டாப், வேற லெவல்
ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து, வட இந்தியா, கேரளா போன்ற இடங்களில் காட்சியமைத்துள்ளார்.
இசையும்,பிஜிஎம், இரண்டும் கலக்கியுள்ளார்கள்…
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள். மாஸான காட்சிகள்.திரைக்கதை.
நிறைய லாஜிக் ,இருக்கு மலையாள பாடம் தானா இது என்று கேட்கும்படி இருக்கிறது.
முழுமையாக எம்புரான் இந்த படத்தின் பயணக்கதை லுசிபர்
என்ற கதையின் சாயலில் பயணிக்கிறது…