
கிளாஸ்மேட்ஸ் திரை விமர்சனம்
முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து ,குட்டிப்புலி ஷரவண சக்தி,
இயக்கி வெளிவந்து இருக்கும் படம் கிளாஸ்மேட்ஸ்
இசை: பிரிதிவி
அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரம், அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ்
கால் டாக்ஸி டிரைவரான நாயகன் அக்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் குடிக்கு அடிமையானவர்கள். கார் ஒட்டி சம்பாதிக்கும் பணத்தை கட்டிங்…கட்டிங்காக செலவு செய்கிறார்
நாயகன் அங்கையற்கண்ணன். அவருக்கு துணையாக இருக்கும் அவரது மாம ஷரவணசக்தி, மனைவி வேலை செய்து கொடுக்கும் பணத்தில் குடித்து குஷியாக வாழ்கிறார். குடிக்கு அடிமையான இவர்களால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இன்றி, அடுத்தவங்க குடும்பத்துக்கும் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது.
அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் மது போதையில் இருக்கும் இவர்கள் அந்த போதையினாலேயே மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து மீண்டு வந்தார்களா?, மனம் திருந்தி மது பழக்கத்தை கைவிட்டார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்தின் இப் கதை.
நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் அறிமுக நாயகனாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது.
நாயகனின் மாமவாக நடித்திருக்கும் ஷரவணசக்தி, வழக்கம் போல் தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் நம்மை சிரிக்க வைக்கிறார்.
அதே சமயம், சில இடங்களில் அளவுக்கு அதிகமான பேச்சு மற்றும் நடிப்பு என்று ஒவர் டோஸ் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம்
ஷரவணசக்தி தான் இயக்குநர் என்பதால் அவருக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால், மனுஷன் இஷ்ட்டத்துக்கு நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரனா, கணவன் என்னதான் குடிக்கு அடிமையாக இருந்தாலும், அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை காட்டி உருகுவது ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.
ஷரவணசக்திக்கு மனைவியாக நடித்திருக்கும் நடிகை, குடிகாரர்களை குணப்படுத்த வந்துவிட்டு அவர்களை விட பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
பிரித்வி இசையில், சீர்காழி சிற்பி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது.
அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி.
மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களை சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள்,
என்று கிளாஸ் எடுத்திருக்கும் இயக்குநர் ஷரவணசக்தி, அதை நகைச்சுவையாகவும், ரகளையாகவும் சொல்லி ரசிக்க வைத்தாலும், படம் முழுவதும் குடி…குடி…என்று காட்டுவது சற்று சலிப்படைய செய்கிறது.