கலைஞர் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் “நாட்படு தேறல்” பாகம் 2 ஆரம்பம்!!

கலைஞர் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் “நாட்படு தேறல்” பாகம் 2 ஆரம்பம்!! தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து சுமார் 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.இவர் தனது…

Annapurna Studios and Qube Cinema announce launch of full-service virtual production stage in Hyderabad

Annapurna Studios and Qube Cinema announce launch of full-service virtual production stage in Hyderabad The state-of-the-art…

Rotary Club of Madras East and Congruent Solutions present “Unsung Heroes”

Rotary Club of Madras East and Congruent Solutions present “Unsung Heroes” ~ An award to recognise…

“Windergy India 2022” 4th Edition of International Conference and Trade Fair, to be held from 27th to 29th April 2022, at Pragati Maidan, New Delhi India’s largest and only wind energy trade fair and conference to focus on quick migration to clean energy

“Windergy India 2022” 4th Edition of International Conference and Trade Fair, to be held from 27th…

GEM Marathon – “A Run for Healthy Gut”

GEM Marathon – “A Run for Healthy Gut”• More than 1500 runners participated in this awareness…

NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai

NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai Chennai, 02 April, 2022…

Colors Tamil launches an enthralling new non-fiction game show Pottikku Potti: R U Ready??

Colors Tamil launches an enthralling new non-fiction game show Pottikku Potti: R U Ready?? ~ The…

கலர்ஸ் தமிழில் உங்களை மகிழ்விக்க “போட்டிக்கு போட்டி:R U Ready?? என்ற புதிய கேம் ஷோ ஆரம்பம்

கலர்ஸ் தமிழில் உங்களை மகிழ்விக்க “போட்டிக்கு போட்டி:R U Ready?? என்ற புதிய கேம் ஷோ ஆரம்பம்: ~ இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக மக்கள் மனம் கவர்ந்த பாவனா பாலகிருஷ்ணன் களமிறங்குகிறார்2022 ஏப்ரல் 3 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு குதூகலமான இப்போட்டியில் மோதுகின்றனர் ~ சென்னை, ஏப்ரல் 1, 2022 :  தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்குச் சேனலான கலர்ஸ் தமிழ், தென்னிந்தியாவில் கேம் ஷோவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் போட்டிக்குப் போட்டி: R U Ready?? என்ற புத்தம் புதிய கேம் ஷோவின் மிகச்சிறப்பான தொடக்க ஒளிபரப்பிற்கு தயாராக இருக்கிறது.  பொழுதுபோக்கும், குதூகலமும் நிறைந்த இந்த கேம் ஷோ, 2022 ஏப்ரல் 3 இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழில் முதன் முறையாக ஒளிபரப்பாகிறது.  அதன்பிறகு, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். தைரியசாலிகளுக்கே அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும் என்ற பொன்மொழியையொட்டி கலர்ஸ் தமிழின் பிரபல நட்சத்திரங்கள், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பல்வேறு சவால்கள் கொண்ட இப்போட்டியில் களமிறங்குகின்றனர்.  இந்நிகழ்ச்சி, ஒரு லீக் வடிவ போட்டியாக நடத்தப்படுகிறது.  தமிழ்நாடெங்கும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளியான பாவனா பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார்.  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மற்றொரு பிரபல நிகழ்ச்சியான டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 -ன் தொகுப்பாளராக பங்கேற்ற பாவனா. கலர்ஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இப்போட்டியில் பிரபல நடன இயக்குனரான பாபா பாஸ்கர், சூப்பர் ஆடியன்ஸ் பொறுப்பில் செயல்படுவார்.  போட்டியில் எந்த குழு வெற்றி பெறுகிறது என்று தீர்மானிக்க பார்வையாளர்களின் வாக்குகளோடு இவரது வாக்கும் சேர்த்து கணக்கிடப்படும்.  இச்சேனலின் பிரபல நிகழ்ச்சிகளில் நடிக்கும் குஷ்பூ சுந்தர், ரேஷ்மா முரளிதரன், மதன், தர்ஷினி, லாஸ்லியா, நவீன், ஹேமா பிந்து போன்ற நடிக, நடிகைகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு டாஸ்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க, போட்டியில் மோதுகின்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.  குழு A – ல் சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், வள்ளி திருமணம் மற்றும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள்  மற்றும் குழு B -ல் இது சொல்ல மறந்த கதை, அம்மன் 3, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீரா ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றனர்.  சுழல்கின்ற ஒரு இயந்திரத்தின் லீவரை குழுக்கள் இப்போட்டியில் இழுக்கவேண்டும் அப்போது ஒரு சுழற்சியில் முடிவில் செய்யப்பட வேண்டிய ஒரு டாஸ்க் தெரியவரும்.  அதன்பிறகு அந்த டாஸ்க் கட்டளையை அக்குழுவின் போட்டியாளர்கள் செயல்படுத்த வேண்டும்.  நடனம், பாடல், புதிர்களுக்கு பதிலளிப்பது அல்லது பிற வேடிக்கையான செயல்பாடுகள் இதில் இடம்பெறுவது சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு குழுவும் அதற்கு வழங்கப்பட்ட டாஸ்குகளின் தொகுப்பை செய்து முடிக்கும்போது கேம் முடிவுக்கு வரும்.  மிக அதிக மதிப்பெண்கள் எடுத்த குழு, இந்நிகழ்ச்சியின் முடிவில் வெற்றியாளராக அறிவிக்கப்படும். இப்போட்டித் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் பாசத்தையும், ஒற்றுமையுணர்வையும் கொண்டாடுவதாக அமையும்.  கிண்டல், கேலியுடன் நகைச்சுவை துணுக்குகளும் இந்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராமன் S, இந்த ரியாலிட்டி கேம் ஷோ தொடக்கம் பற்றி கூறியதாவது:…

Thiru Ma. Subramanian Minister for Health, Medical Education and Family Welfare, Govt. of Tamil Nadu Launches SIMS Hospital’s Hello Doctor – 2001 2001

Thiru Ma. Subramanian Minister for Health, Medical Education and Family Welfare, Govt. of Tamil Nadu Launches…

சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்! தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்!தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார் சென்னை, மார்ச் 29, 2022: சென்னை மாநகரில் சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி. ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில், இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல்நலப் பராமரிப்பு சேவைகளோடு, இல்லங்களிலேயே மருத்துவ சிகிச்சையையும்  வழங்குகின்ற ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ செயல்திட்டமானது, முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய்நிகர் (Virtual Consultation) முறையில் மருத்துவர்களது ஆலோசனையையும், செயல்நடவடிக்கையையும் வழங்கும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்ஸ் மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய அதே அளவிலான உடல்நல பராமரிப்பு சேவையை, நோயாளிகள் அவர்களது வீடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டே பெறமுடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு சேவை வழங்குவதற்காக இச்செயல்திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்ற போதிலும், 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தீவிர நோய்நிலைகளுக்கு வீடு தேடி வருகிற மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய ஒரு குழுவால் முறையாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் உரிய நேரத்திலும் சிகிச்சையளிக்கப்படும். மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு பின் தொடர் சிகிச்சையை வீட்டிலேயே வழங்குவதையும் தனது இலக்காக சிம்ஸ் மருத்துவமனை கொண்டிருக்கிறது. துல்லியமான சிகிச்சையையும், வழிகாட்டலையும் வழங்கும் ஒரு சீரிய முயற்சியாக பல்வேறு நோய்கள் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் மருத்துவர்களிடமிருந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சை ஆலோசனையைப் பெறவும் ஹலோ டாக்டர் சேவையைப் பயன்படுத்துமாறும் சென்னைவாழ் மக்களை சிம்ஸ் மருத்துவமனை ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தினை தொடங்கி வைத்துப் பேசிய  தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் கூறியதாவது: “நோயாளிகளுக்குத் தேவைப்படும் சிகிச்சை பராமரிப்பை உறுதிசெய்ய சமீபத்திய புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதில் சிம்ஸ் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹலோ டாக்டர் – 2001…