“அண்ணா மேம்பாலம் 50” சென்னை அண்ணா மேம்பாலத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் புதிய தலைமுறை மற்றும் புதுயுகம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளன. தமிழகத்தின் முதல் மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், மாபெரும் நிகழ்ச்சியை புதியதலைமுறை தொலைக்காட்சி ஏற்பாடு செய்யதிருந்தது. . ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் அண்ணா மேம்பாலத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி புதியதலைமுறை மற்றும் புதுயுகம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையில் நிறுவப்பட்ட அண்ணா மேம்பாலம் தமிழகத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.கடந்த ஐம்பது ஆண்டுகளாக, சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அண்ணா மேம்பாலம், முன்னேற்றம் மற்றும் இணைப்பின் அடையாளமாக உள்ளது. அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள அழகிய செம்மொழி பூங்காவில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன், சென்னை மாநகர ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், தொழிலதிபர்கள் அபிராமி ராமநாதன், நல்லி குப்புசாமி, மற்றும் VKT பாலன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அண்ணா மேம்பாலம் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அண்ணா மேம்பாலத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கதிர் உட்பட புகழ்பெற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேம்பாலத்தை வடிவமைத்த கிழக்கு கடற்கரை கட்டுமானம் மற்றும் தொழில்துறை கழகத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பு நினைவு கூறப்பட்டது. கிழக்கு கடற்கரை கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.டி.எம். அஹமது முஸ்தாப் மற்றும் அண்ணா மேம்பாலம் கட்டுமானத்திற்காக இரண்டு ஆண்டுகளை அர்ப்பணித்த ஓய்வு பெற்ற பொறியாளர் நடராஜன் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர். அண்ணா மேம்பாலத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் பிரத்யேக காட்சிகளை புதியதலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஜூலை 15 சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கும், புதுயுகம் தொலைக்காட்சியில் ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கும் கண்டு மகிழுங்கள்.
Category: Tv News
“நேரம் நல்ல நேரம்”
“நேரம் நல்ல நேரம்” புதுயுகம் தொலக்காட்சியில் வாரத்தில் 7 நாட்களும் 7 ஜோதிடர்கள் பங்கேற்கும் “நேரம் நல்ல நேரம்” வாஸ்து, எண்…
“அறுசுவை நேரம்”
“அறுசுவை நேரம்” ஜெயா தொலைக்காட்சியில் பலவிதமான சமையல் நிகழ்ச்சியில் ஒன்றான “அறுசுவை நேரம்” நிகழ்ச்சி வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 5:00…
கலைஞர் டிவி – விகடன் இணையும் “ரஞ்சிதமே” – புத்தம் புதிய மெகாத்தொடர்
ஜூலை 17 முதல் கலைஞர் டிவி – விகடன் இணையும் “ரஞ்சிதமே” – புத்தம் புதிய மெகாத்தொடர் சின்னத்திரையில் தனக்கென தனி…
“அண்ணா மேம்பாலம் 50”
“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி அண்ணா மேம்பாலம் அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் பொருட்டு புதிய…
Anna Flyover, the 50th anniversary celebration of the rejuvenated television program. An intitative by Puthiyathalimurai , Puthuyugam , The Federal and Fourth Dimension
Anna Flyover, the 50th anniversary celebration of the rejuvenated television program. An intitative by Puthiyathalimurai ,…
“சாய் வித் செலிப்ரிட்டி”
“சாய் வித் செலிப்ரிட்டி” முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும்…
“என்றென்றும் கே.பி “
“என்றென்றும் கே.பி “ இந்திய சினிமாவின் பிதாமகர் என கொண்டாடப்படும் “பத்ம ஸ்ரீ” “தாதாசாஹேப் பால்கே” ஸ்ரீ கே.பாலச்சந்தர் பிறந்த நாளை ஜூலை மாதம் முழுவதும் கொண்டாடும் “என்றென்றும் கே.பி “ சிக்கலான தனிப்பட்ட உறவுகள், தைரியமான சமூக கரு மற்றும் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்காற்றிய கே. பி புதுமையான பல திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்தவர். பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றி வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் அழுத்தமாக காட்சிப்படுத்தியவர்களில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சரிதா, சுஜாதா, மோகன், பிரகாஷ் ராஜ் என இவரால் ஜொலித்த நட்சத்திரங்களின் பட்டியல் நீளமானது. அவருடை பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இயக்குனர் வசந்த், இயக்குனர் சரண்,திருமதி புஷ்பா கந்தசாமி,திருமதி கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரன் சௌந்தர்ராஜன், டெல்லி கணேஷ், இசைக்கவி ரமணன், கவிதாலயா கிருஷ்ணன், நடிகை சுலக்ஷனா, எம்.எஸ் பாஸ்கர்,மற்றும் சிலர் வாரம் தோறும் என்றென்றும் கே.பி சிறப்பு நேரலையில் பங்கேற்கின்றனர். இந்திய சினிமாவின் பிதாமகரை கொண்டாடும் இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 5, 2023 வரை ஒவ்வொரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகிறது.
கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் வா தமிழா வா”
கலைஞர் டிவியில் கரு.பழனியப்பனின் வா தமிழா வா” கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத…
“சுவையான சுற்றுலா “
“சுவையான சுற்றுலா “ நாடுகள் கடந்த நாவின் சுவை,சுவையின் இலக்கணத்தை மாற்றும் ஒரு மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி “சுற்றுலா சமையல்” ஜெயா…