Colors Tamil spruces its prime-time line-up with an intriguing new tale of resilience; Launches new fiction…
Category: General News
“தகதிமிதகஜனு”
“தகதிமிதகஜனு“ ஜெயாடிவியில்புதியசுற்றுகளுடன்பரதநாட்டியகலைஞர்களுக்காகஒளிபரப்பாகும்பிரத்யேகநிகழ்ச்சி “தகதிமிதகஜனு” ஒவ்வொருஞாயிற்றுக்கிழமையும்காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது . சமீபத்தில்புதுப்பொலிவுடன்புதுசுற்றுகளுடன்ஒளிபரப்பான 14 எபிசோடுகளில்தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வெற்றியாளர்கள்மற்றும்வைல்ட்கார்டுமூலம்தேர்வான 4 போட்டியாளர்கள்என 18 பேர்களம்இறங்குகிறார்கள். கால்அரைசுற்று ,அரைஇறுதிசுற்று ,இறுதிசுற்றுஎனகூடுதல்சுவாரஸ்யங்களோடுஒளிபரப்பாகவிருக்கும்இனிவரும்எபிசோடுகளில்உலகஅளவில்புகழ்பெற்றபத்மபூஷன்திரு.தனஞ்செயன்மற்றும்திருமதி.சாந்தாதனஞ்செயன்நடுவர்களாகஇருந்துவெற்றியாளர்களைதேர்வுசெய்யஇருக்கிறார்கள்…
இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு 75 வயது மூதாட்டி, 74 வயது முதியவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை
இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு 75 வயது மூதாட்டி, 74 வயது முதியவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை சென்னை, பிப்.14- இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கும், 74 வயது முதியவருக்கும் டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றி காதலர் தினமான இன்று அவர்களின் துணையோடு சேர்த்து வைத்து அவர்களின் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வரும் வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை. இந்த வெற்றிகரமான சிகிச்சையை இம்மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணரும் டாக்டருமான கே. தாமோதரன் மற்றும் டாக்டர் கதிரேசன் தலைமையில் நிபுணத்துவமிக்க டாக்டர்கள் குழு செய்தது. இந்த இரு நோயாளிகளுக்கும் பல்வேறு நோய்கள் இருந்ததோடு அவர்களின் இதயத்தின் முக்கியமான பெருநாடி வால்வு பகுதியில் சுருக்கமும் இருந்தது. அந்த சுருக்கத்திற்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை இம்மருத்துவமனை குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர். வயதான இந்த நோயாளிகளுக்கு பிரசாந்த் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் குழு, சேதமடைந்த பெருநாடியை ஒரு புதிய வால்வுடன் இணைத்து அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் என்பது பெருநாடி வால்வு திறப்பின் குறுகலாகும், இது இடது வென்ட்ரிக்கிளிலிருந்து பெருநாடிக்கு ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. வயதானவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 75 வயதான திருமதி சங்கரவடிவு கீழே விழுந்து வலது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வகை 2 நீரிழிவு நோய் உள்ளது. இந்த நிலையில் இம்மருத்துவமனையின் எலும்பியல் குழு ஆலோசனையின்படி, நோயாளிக்கு அதிக ஆபத்துள்ள தொடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்காக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை காரணமாக தமனியில் கடுமையான பெருநாடி வால்வு குறுகல் இருப்பது கண்டறியப்பட்டது, இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவரது இதயம் செயலிழக்க வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து இதய நோயியல் நிபுணர் டாக்டர் தாமோதரன் வழிகாட்டுதலின்படி டாக்டர்கள் குழு அவருக்கு டிரான்ஸ்கேட்டர் TAVR (பெருநாடி வால்வு பொருத்தும்) சிகிச்சையை அளித்தனர். இதேபோல் 74 வயதான திரு நாதர்கனி தலைச்சுற்றல் மற்றும் கடுமையான நெஞ்சு வலி அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த சிகிச்சை அவருக்கும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை குறித்து இம்மருத்துவமனை டாக்டர் தாமோதரன் கூறுகையில், காதலர் தினத்தன்று திருமதி சங்கரவடிவு மற்றும் திரு நாதர்கனி ஆகியோரின் உயிரைக் காப்பாற்றி அவர்களை மீண்டும் அவர்களது துணையுடன் இணைக்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நாங்கள் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இவர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையானது மிகவும் சிக்கலாக இருந்ததோடு சவாலாகவும் இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, அத்துடன் நாங்கள் மிக வேகமாக செயல்பட வேண்டியதிருந்தது. எலும்பு முறிவு காரணமாக 75 வயதான திருமதி சங்கரவடிவு எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு வழக்கமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய இதய பரிசோதனையின்போது இதயத்தில் பிரச்சினை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் காரணமாக நீரிழிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்டோம். இந்த நிலையில் அவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு பொருத்தும் சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்து அந்த சிகிச்சையை அளித்தோம். எங்கள் மருத்துவமனையில் உயர்தர இதய சிகிச்சைக்கான பல்வேறு வசதிகள் உள்ளன என்று தெரிவித்தார். டாக்டர் கே. தாமோதரன் மற்றும் டாக்டர் கதிரேசன் தலைமையிலான டாக்டர் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின் இந்த இரு நோயாளிகளும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அன்றைய தினம் மாலையே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நன்றாக குணமடைந்த அவர்கள் மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், இந்த வயதான நோயாளிகளுக்கு அளித்த சிறப்பான சிகிச்சை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சேவைக்காக டாக்டர் தாமோதரன் மற்றும் அவரது நிபுணர் குழுவுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சரியான நேர தலையீடு இன்று நோயாளிகளுக்கு ஒரு புதிய புத்துணர்வையும் வாழ்வையும் அளித்துள்ளது. எங்கள் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு இந்த இரட்டை டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு பொருத்தும் சிகிச்சை ஒரு சிறந்த சான்றாகும். நோயாளிகள் இருவரும் நன்றாக குணமடைந்து வருவதோடு, காதலர் தினத்தில் அவர்களின் துணையோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்கு அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
தற்போது நேரலையில்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022
🔴 தற்போது நேரலையில்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் பரப்புரை10.02.2022 பிற்பகல் 3 மணிக்கு நீலகிரி மற்றும்…
ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது.
ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: ‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர்…
Actor Shirish extends help to Silambam champions for an International Tournament
Actor Shirish extends help to Silambam champions for an International Tournament “Metro” fame actor Shirish is…
நடிகர் ஷிரிஷ், சிலம்ப விளையாட்டு வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்குகொள்ள உதவி செய்துள்ளார் !
நடிகர் ஷிரிஷ், சிலம்ப விளையாட்டு வீரர்கள், சர்வதேச போட்டியில் பங்குகொள்ள உதவி செய்துள்ளார் ! “மெட்ரோ” படப்புகழ் நடிகர் ஷிரிஷ்…
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று நேரடியாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தினை இந்த ஞாயிறன்று நேரடியாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் ~ ஒரு நபரின் வாழ்க்கைப் பயணத்தையும் மற்றும் அவரது செல்ல வளர்ப்பு நாயுடனான உறவையும் நகைச்சுவையாக இது சித்தரிக்கிறது ~ சென்னை, 2 பிப்ரவரி 2022: பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பை தமிழ் ரசிகர்களுக்காக வழங்குவதில் தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது. 2022 பிப்ரவரி 6 – ம் தேதி, வரும் ஞாயிறு இரவு 7.00 மணிக்கு இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. திரு. ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத்தின் உருவாகியிருக்கும் இந்த தனித்துவமான ரொமான்டிக் திரைப்படத்தில் கில்லி’ (அமிகோ என்ற நாய்) ஒரு மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறது. துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, மயில்சாமி, பூ ராமு, இளவரசன் மற்றும் புதுமுக நடிகரன மைத்ரேயா ராஜேஷ்சேகர் என பல சிறப்பான நடிகர்கள் இதில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும் கில்லி (அமிகோ என்ற நாயின் நடிப்பில்) திரைப்படத்தில் அவருக்கே உரித்தான தனித்துவமான நகைச்சுவை உணர்வுடன் நடிகரும், பிரபல காமெடியனுமான சூரி குரல் கொடுத்திருக்கிறார். பிப்ரவரி 6 – ம் தேதி, இந்த ஞாயிறன்று, இரவு 7.00 மணிக்கு விலங்குகள் நிகழ்நேரத்தில் பேசுகின்ற முதல் இந்திய திரைப்படத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள். இயற்கை அழகு கொஞ்சும் கொடைக்கானல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் கதைக்களம், சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்து வரும் ராமு (மைத்ரேயா ராஜேஷ்சேகரின் நடிப்பில்) மற்றும் கில்லி…