“போகி” திரைப்படவிமர்சனம்!

Share the post

“போகி” திரைப்படவிமர்சனம்!

நடித்தவர்கள் : –
நபிநந்தி, ஷரத், ‘லப்பர் பாண்டு’ ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல

ராமமூர்த்தி, மொட்ட ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர்.
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – விஜயசேகரன்.எஸ்

மியூசிக் : – மரியா மனோகர்

ஒளிப்பதிவு :-
ராஜா.சி.சேகர்

படத்தொகுப்பு:-
சுரேஷ் அர்ஸ்

தயாரிப்பாளர்கள் :- வி. சினிமா குளேப்பல் நெட் வொர்க்ஸ் & லைக் ப்ரொடக்ஷன்ஸ் –

ரகசிய கேமாராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம்

பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய கும்பலை தகுந்த ஆதாரங்களுடன்

பிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது.

மறுபக்கம் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடிப்பிடித்து

நாயகன் நபி நந்தியும், சரத்தும் கொலை செய்கிறார்கள்.

இதற்கிடையே, சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப்

பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் அவர் மீதான தனது

காதலை வெளிப்படுத்த முடியாமல், தனது கொலை வெறிப் பயணத்தை தொடர்கிறார்.

நாயகன் நபி நந்திக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ? என்பதை நாட்டில் அதிகரித்து வரும் பாலியல்

வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான

முக்கிய காரணத்தை, உண்மை சம்பவங்களின்

அடிப்படையில், கமர்ஷியலாக கலர்புல்லாகவும் சொல்வது தான் “போகி”
நாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி, அறிமுக நடிகர் என்பதால் முதல் படம் போல் தெரியாத

அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.

தங்கை மீது அதிக பாசம் வைத்த அண்ணனாக அளவாக

நடித்திருப்பவர், தனது தங்கைக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பழி

தீர்க்கும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருக்கிறார்.

நாயகனின் தங்கையாக, கதையின்

மையப்புள்ளியாக நடித்துள்ள “லப்பர் பந்து” புகழ் சுவாசிகா,

இளமையாக இருக்கிறார். பல போராட்டங்களை கடந்து படித்து

முன்னேறும் பழங்குடி இன பெண்களை, பெண்களுக்கு எதிராக நடக்கும்

குற்றங்களில் பாதிக்கப்பட்டு சிதைக்கப்படும் பெண்களின் உடல் ரீதியான மற்றும் மன

போராட்டங்களை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கலங்க வைத்திருக்கிறார்.

நாயகனின் பழி தீர்க்கும் பயணத்தில் அவருடன்

பயணிக்கும் சரத், ஒரு பாடலுக்கு நடனமாடி

பார்வையாளர்களை மகிழ்விக்கும் பூனம் காவுர், காவல்துறை அதிகாரியாக
நடித்திருக்கிறார்.

வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்துள்ளார் .நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில்

வந்தாலும் தனது சில்மிஷ நடிப்பால் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர்,

மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி அனைத்து நடிகர்களும்

திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் வெவ்வேறு

காலக்கட்டத்தில் நடக்கும் கதையை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார், மலை கிராம மக்களின் வேதனைகளையும், பெண்களுக்கு எதிராக நடக்கும்

குற்றங்களினால் பாதிக்கப்படும் அப்பாவி பெண்களின்

வலிகளை பார்வையாளர்கள் கடத்தும் வகையில் காட்சிகளை படமாக்கியிருப்பது. பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி படத்தை கமர்ஷியலாக முன்னிலையில்
கொண்டு போகிறார்.

இசையமைப்பாளர் மரியா மனோகர். இசையில், சினேகனின் வரியில் பாடல்கள்

அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்.

பின்னணி இசையிலும் குறையில்லை.

படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் மற்றும் சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவ் ஆகியோரது .

பணி படத்திற்கு பெரிய பலம்

சேர்த்திருக்கிறார். எஸ்.டி.சுரேஷ்
குமாரின் வசனம் கூர்மை.

எழுதி இயக்கியுள்ளார் விஜயசேகரன்.எஸ்- சமூக பிரச்சனையையும்,

பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், நாட்டில் நடந்த சில
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு திரைக்கதை

அமைத்திருப்பதால் அதை வெறும் சோகமாக மட்டும் சொல்லாமல்,

நகைச்சுவையாக காதல், ஆக்‌ஷன்,

பாடல் என்று கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.

பாலியல் ரீதியிலான குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இறந்த பிறகும் பாலியல்

ஆளாகிறார்கள் என்ற உண்மையையும், சமூக ஊடக மோகம், ஸ்மார்ட்போன்களின்

பயன்பாடு ஆகியவற்றால் அவர்களுக்கே தெரியாமல், அவர்களது அந்தரங்க வீடியோக்களை

வைத்து வியாபாரம் செய்யும் கும்பல், என்று பல முக்கிய பிரச்சனைகளை பேசியிருக்கிறார்.

இயக்குநர் விஜயசேகரன்.எஸ், அதை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்

வகையில் சொல்லாமல், கதையை வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்துள்ளார். பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிக்க வைத்து விடுகிறது.

குறைகள் இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்க

கூடிய பிரச்சனைகள் மற்றும் அதை பிரச்சாரம் போல் அல்லாமல்,

ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருப்பது படத்தை பார்க்க வைக்கிறது.

படம் பார்த்தத்தில், “போகி” என்றால்‌ கேட்டது போய் நல்லது வருவது தான் போகி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *