
“படையாண்ட மாவீரா” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- வி.கௌதமன், பூஜிதா பொன்னடா, பி.சமுத்திரக்கனி, பிரபாகர், சரண்யா
பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான்.
ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, மதுசூதன் ராவ், தமிழ் கௌதமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :- வி.கௌதமன்.
மியூசிக் : –
ஜி.வி. பிரகாஷ் குமார். சாம் சி.எஸ். பின்னணி
ஒளிப்பதிவு :-கோபி ஜெகதீஷ் வரன்.
படத்தொகுப்பு :-ராஜா முகமது.
தயாரிப்பு: வி.கே. புரொடக்ஷன்ஸ் – நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி
காலச்சென்ற முன்னாள் வன்னியர் சங்க தலைவர், எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு மீது பல வழக்குகளும்,
குண்டர் சட்டமும் தொடர்ந்த நிலையில், அவர் மீதிருந்த
தவறான குற்றங்களை உடைத்து, அவர் மக்கள் நன்மை
மற்றும், மண்ணுக்காக போராடியவர் சாதி பாகுபாடுகளை தவிர்த்து, தமிழர்கள்
என்ற ஒரு குறையின் கீழ் அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த
மாவீரன் என்று சொல்வது தான் “படையாண்ட மாவீரா”
கதைக்களம்.
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இயக்குநர் வி.கெளதமன்,
இவர் விஜயகாந்த் சாயலில் இருப்பதால், சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்து வரிசையிலும் அவரைப் போல் நடித்திருக்கிறார்.
உணர்ச்சிகரமான வசனங்கள் பேசும் காட்சிகளில் நெருப்பாக கொழ்ந்து விட்டு
நடித்திருக்கிறார், அவர் ஏற்றுக் கொண்ட
கதாபாத்திரத்திற்கு நடிகராக நியாயம் சேர்த்துள்ளார்.
நாயகியாக நடித்து ள்ள பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை
இல்லை. சில காட்சிகள் மற்றும்
பாடல் காட்சியில் தலை காட்டியுள்ளார்.
காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்து ள்ள சமுத்திரக்கனி,
குறைவான காட்சிகளில் வந்திருந்து, தனது வழக்கமான
பாணியில் நடித்து படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளார்.
தனது தந்தையை பழிதீர்க்கும் பாத்திரத்தில் தன்
கோபத்தை கண்களில் மற்றும் உடல்மொழியிலும் சிறப்பாக
வெளிப்படுத்தியுள்ளார். காடுவெட்டி குருவின் இளம்பருவ
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
தமிழ் கெளதமனின் திரை இருப்பு சிறப்பு.
ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி,
மதுசூதனன் ராவ் என மற்றும் வேடங்களில் நடித்திருப்பவர்கள்
அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்துவின் பாடல்வரிகளில்
கமர்ஷியலாக இருப்பதால், பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.
சாம்.சி.எஸ்-யின் பின்னணி இசையில் சில இடங்களில் கவனதை ஈர்த்தது,
பெரும்பாலான இடங்களில் பழைய படங்களை நினைவுப்படுத்து
கின்றன.
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் கலர்வண்ணமாய்
மிண்ணுகின்றன.
காட்சிப்படுத்தியிருப்பதால், சண்டைக்காட்சி
களில் கடுமையாக உழைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராஜா முகமது பணியிலும் குறையில்லை.
காடுவெட்டி குருவின் வாழ்க்கையின் சம்பவங்களை, சில கற்பனை கலந்த
சம்பவங்களை காட்சிப்படுத்தி மையமாக வைத்து
எழுதிய
இயக்கியுள்ள. வி.கெளதமன், ரவுடியாக மற்றும், சாதி வெறியராக
பார்க்கும் இடத்தில் மறைந்த காடுவெட்டி குருவை,பார்க்கும் போது இந்த
மக்களுக்காக, மண்ணுக்காக போராடிய நேர்மையான
மனிதராக காட்டும் போது அவரது வாழ்ந்த வாழ்க்கையை
வாழ்வியலை ஒரு படைப்பாக கொடுத்து சிறப்பித்து
தந்திருக்கிறார்.
அவரை பாராட்ட வேண்டும்.
ரூ.நூறு கோடி பணத்தை காட்டி தனது பக்கம் இழுக்க முயற்சித்த பெரும் அரசியல் கட்சிகளின்
அழைப்பை நிராகரித்த, தனக்கு துரோகம்
இழைப்பதாலும், உயிர் உள்ளவரை பா.ம.க-யுடன் மட்டுமே பயணிப்பேன்.
என்பதை உறுதியாக இருந்தவர், மக்களுக்காக,
மண்ணிக்காக போராடிய போது, விலை பேசிய
முதலாளிகளை நிராகரித்தவர்,
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும்
மக்களுக்காக மட்டுமே யோசித்தவர், என்று அவரைப் பற்றி
தெரிந்த விஷயங்களை சொல்லி,
வீரமிக்க மனிதனாக மட்டும் நேர்மையாக வாழ்ந்தார்.என காடுவெட்டி குரு
என்பதை இயக்குநர் வி.கெளதம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
காடுவெட்டி குரு மீது இருந்த தவறான செயலை உடைக்கும் விதத்தில்
திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைப்புடன்
கொடுத்த இயக்குநர் வி.கெளதமன், காடுவெட்டி குருவின்
ஆதரவாளர்கள் ஒரு கதையாசிரியர்கள் கவர்ந்தாலும், கதை
சொல்லும் மட்டும் ஒரு விஷயத்தை காட்சி மொழியில் சொல்வதில் எந்தவித
புதுமையான நிகழ்வு களை, கொடுத்து ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக
கொடுத்து சினிமா ரசிகர்களை வியக்க செய்திருக்கிறார்.
இயக்குனர்
மொத்தத்தில், ‘படையாண்ட மாவீரா’ காடுவெட்டி குருவின் வரலாற்றை
உண்மை, கற்பனை, கலந்த சம்பவத்தை திரைப்படமாக
கொடுத்திருக்கிறார்.
இந்த படம் அவரை நாடி வந்த தொண்டர்களுக்கு மக்களுக்கும்
நன்றி காணிக்கையாக இருக்கின்ற படைப்பாகும். இந்த
படத்தை அனைவரும் பார்த்து மகிழ்ச்சி யாக கொண்டாடலாம்.