அந்தகன் திரைப்பட விமர்சனம்…!!

Share the post

அந்தகன் திரைப்பட விமர்சனம

 ஸ்டார் மூவிஸ் – சாந்தி தியாகராஜன் & ப்ரீத்தி தியாகராஜன் தயாரித்து தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடித்து வெளி வந்திருக்கும் படம் “அந்தகன் !!

திரைப்படத்தில் நடித்தவர்கள் :-

டாப் ஸ்டார்.பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், நவரச நாயகன் கார்த்திக், முத்துராமன்,
சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார்,
மனோபாலா,ஊர்வசி, யோகி பாபு, லீலா சாம்சன்,பூவையார், பெசன்ட் ரவி, மோகன் வைத்தியா,லக்ஷமி
பிரிதீப், ரேகா சுரேஷ், செம்மலர்,கவத் மற்றும் பலர் நடித்துள்ளனர்

இயக்கம் – தியாகராஜன்

தயாரிப்பு : –
சாந்தி தியாகராஜன்

நடன இயக்குனர் – பிரபுதேவா

இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – ரவி யாதவ்

கதை – ஸ்ரீராம் ராகவன்

எடிட்டிங் – சதீஷ் சூரியா

வசனங்கள் –
பட்டுக்கோட்டை பிரபாகர்

சண்டைக்காட்சி –
ராம் குமார்.

கலை இயக்கம் – செந்தில் ராகவன்

ஸ்டில்ஸ் – கண்ணன்

மக்கள் தொடர்பு :-
நிகில் முருகன்

நடனம் – கலா மாஸ்டர் மாஸ்டர், சண்டே மாஸ்டர்

ஒலிப்பதிவு – லக்ஷ்மிநாராயணன்

ஏ.எஸ்
தயாரிப்பு மேலாளர்கள் – ஆனந்த் கே | சக்திவேல்
.



அந்தகன் திரைப்பட விமர்சனம்…

த்ரில்லர்
எமோஷன், ஆக்ஷன், காதல், வஞ்சம்,என எல்லா, தன்

கதாபாத்திரத்தின் மறாமல் மிகைப்படுத்தி நடித்திருக்கிறார்,

உணர்வு கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் பிரஷாந்த்…

பாண்டிச்சேரியில் வசித்து வரும் பார்வையற்ற சவால்

கொண்ட பியானோ கலைஞர் பிரஷாந்த் . லண்டனுக்குச் சென்று

பெரிய இசைக் கலைஞர் ஆக வேண்டும். என்பது அவரது கனவு.

இப்படி இருக்கையில் தான் சின்ன வயதில் கிரிக்கெட்

விளையாட்டில் விபத்தொன்றில், தலை
மண்டையில் அடிப்பட்டு

கண்பார்வை இழந்ததை பிரியா ஆனந்த்திடமும் மற்ற எல்லாரிடமும்.
கூறுகிறார்.

திடீரென சாலை விபத்தில் விழுந்து பிரியா ஆனந்த்திடம் நட்பாகிறார்.

அவர் உணவகத்தில் பியானோ இசைக்கும் பணிக்குச் செல்வதாக. கூறுகிறார்.

இந்நிலையில், அந்த உணவகத்தின் வாடிக்கையாளரும்

தமிழ் சினிமாவின் முன்னாள் நவரச கதாநாயகருமான கார்த்திக்கிற்கு.

பிரசாந்த்தின் இசை திறன் பிடித்துப்போகிறது. அதனால், தன் திருமண

நாளன்று தன் மனைவி சிமிக்கு முன்பு பிரத்யேகமாக இசைக்க

வேண்டும் என்று (பிரசாந்த்) கிருஷ்ணாவிடம் கூறுகிறார்.

கார்த்திக்கின் அழைப்பை ஏற்று, அவரின் வீட்டுக்குச் செல்லும் போது

கிருஷ்ணா, அங்கே ஒரு பெரிய பிரச்னையில் தேவையில்லாமல் (கொலை) நடந்த இடத்தில் மாட்டிக்கொள்கிறார்.

அதிலிருந்து தப்பிக்க கிருஷ்ணா எடுக்கும் முயற்சிகள் என்னென்ன,

கிருஷ்ணாவுக்குள் புதைந்திருக்கும் ‘ரகசியம்’ என்ன

என்பதைப் பேசவைக்கிறது

இயக்குநர் தியாகராஜனின் சிந்தனையில் வெளிவந்த ‘அந்தகன்’.

மாற்றுத்திறனாளிக்
கான உடல்மொழியை

உண்மையான நெருக்கமாக கொண்டுவாழ்ந்திருக்
கிறார்.

பிரஷாந்த். எமோஷன், ஆக்ஷன், காதல், வஞ்சம் என எல்லா தன் கதாபாத்திரத்தின் மிகைப்படுத்தி அச்சு அசல் பிசுரமல் அசல்

மீறாமல் நடித்து, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து.

நியாயமாக செய்திருக்கிறார். வெல்கம் பேக் டாப் ஸ்டார்! பிரசாந்த்

வில்லத்தனத்தில் மட்டுமில்லாமல் எமோஷனலான

தருணங்களையும் சிறப்பாகக் கையாண்டு, இருக்கிறார்.

திரையில்
தனித்துவமாக நிற்கிறார்.சிம்ரன்.

இவர்களுக்கிடையே சமுத்திரக்கனியின் மிரட்டும் பாவனையில் மிகைப்படுத்தி நடித்திருக்கிறார்

சிரிப்பையும் நடிப்பையும் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

ஒரு சில காட்சிகள் வந்தாலும், தன் வசீகரமான நடிப்பால்

மனதில் நிற்கிறார் நவரச நாயகன் கார்த்திக்.

கதாநாயகனின் காதலியாகத் துள்ளிக்குதித்துக்

கொண்டே இருக்கும் பிரியா ஆனந்த்,
பெரிய அழுத்தத்தையும்

தராமல், பாதகமாகவும் இல்லாமல் வந்து போகிறார்.

தன் மிகைப்படுத்தி நடிப்பையும் மீறிச் சில காட்சிகளில்

சிரிக்க வைக்கிறார் ஊர்வசி. அவருக்குத் துணையாக வரும் யோகி பாபு ஒரு சில

இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் தேவையான

பங்களிப்பைத் தர, மறைந்த மனோபாலா இறுக்கமான‌ காட்சி களில் கிலிகிலிப்பு மூட்டுகிறார்.

ஒரு சஸ்பென்ஸ் படத்திற்குத் தேவையான

பங்களிப்பை ‘மட்டுமில்லாமல் ரவி யாதவின் ஒளிப்பதிவு மிக உறுத்துனையாக கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியும் சதீஷ் சூர்யாவின் படத்தின்
படத்தொகுப்பு. பலம் சேர்க்கிறது.

சந்தோஷ் நாராயணனின்

இசையில் ‘என் காதலும்’ பாடலும், ‘கண்ணிலே’

பாடலும் மட்டும் இதம் தருகின்றன. மற்றவை

‘ப்ச்’! ஒரு பியானோ கலைஞரையும்,

பியானோ தொடர்பான முக்கியக் காட்சிகளையும் கொண்ட

திரைப்படத்திற்கு, பிலோ ஆவரேஜான பின்னணி இசையைத் தந்திருக்கிறார்.

ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும்

பியானோவின் பின்னணி இசை அழுத்தம் சேர்த்திருக்கிறது.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில், ஶ்ரீராம்

ராகவன் எழுதி, இயக்கிப் பெரு வெற்றிபெற்ற ‘அந்தாதுன்’ படத்தின்

தமிழ் மறு பிரிதி ஆக்கத்திற்கான முயற்சியில்

கௌரவமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தியாகராஜனின் இயக்கம். இதற்கு

ஶ்ரீராம் ராகவன் – தியாகராஜன் –

பட்டுக்கோட்டை பிரபாகர் கூட்டணியின் எழுத்து

உறுதுணையாக இருந்திருக்கிறது.

கச்சிதமான படத்தொகுப்பில்லாத
தால், போதுமான

நிதானத்தோடு நகராமல் கடகடவென ஓடுகிறது தொடக்கக் கட்டத்

திரைக்கதை. அதனால், ஒவ்வொரு காட்சிகளிலும்,

இயற்கைத்தனம் ஆங்காங்கே

எட்டிப்பார்க்கிறது. பியானோவிற்குச்

பாடல்களும் கேட்கும்படி செய்கின்றன.
விறுவிறுவென நகரும் திரைக்கதையும்,

நடிகர்களின் பங்களிப்பும் பார்வையாளர்களைத்

திரையோடு இணைக்கின்றன. இறுதிக்காட்சி

வரைக்குமான அடுக்கடுக்கான

ட்விஸ்ட்களும், அவற்றை நேர்த்தியாக அவிழ்த்த

விதமும் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான

அனுபவத்தைத் தருகின்றன. இறுதிக்காட்சியில் தத்துவார்த்த ரீதியிலான

உரையாடல்களை
வசனங்களிலும்,சில காட்சிகளிலும் சொல்லி நகர்கிறது திரைக்கதை

நடிகர் கார்த்திக்கின் பாடல்களையும், படங்களையும்

கச்சிதமாகப் பயன்படுத்தியதால், அவர் தொடர்பான காட்சிகள்

‘நாஸ்டால்ஜியா’ அனுபவமாக க்ளிக் ஆகியிருக்கின்றன. அதேநேரம்,

தனித்துவமும் அழுத்தமும் கொண்ட திரைமொழியும்

நிதானமும் மிஸ் ஆவதால், போதுமான இறுக்கமும் உயிர்ப்பும்

நடிகர்களே போராடி வெல்ல முயற்சி செய்கிறார்கள்.

குறைகளைத் தாண்டி, விறுவிறுப்பான திரைக்கதையாலும்,

நடிகர்களின் நடிப்பாலும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகத்

தப்பிக்கிறார்
இந்த `அந்தகன்’.உலக ரசிகர்கள் கொண்ட ஒரே

நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த் மட்டும் தான். தமிழ் சினிமாவின் முன்னணி

இயக்குநர்களின் அதிக படங்களில் நடித்துள்ளார்

இவர் இளம் வயதிலேயே தன்னை

வளர்த்துக் கொண்டு காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து ஜானர்களிலும் நடித்து

முன்னணி நடிகராக வலம் வந்தவர்

இன்று பிரஷாந்த் நடித்து , வெளியே வந்துள்ள திரைப்படம் ‘அந்தகன்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்து ‘அந்தகன்’

படத்தை தொடர்ந்து விஜயின் ‘கோட்’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பிரஷாந்த், மீண்டும் தனது நம்பர் ஒன் இடத்தை நிச்சயம் பிடிப்பார் பிரஷாந்த். நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் ‘அந்தகன்’ படத்தில்

பியானோ இசைக் கலைஞனா நடித்தது மிகவும் சந்தோஷம். எனக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியும் என்பதால்,

என் திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன்.

அது மட்டுமில்லாமல், தமிழுக்கு மையக் கதையைக் கெடுத்திடாத வகையில், தியாகராஜன் சார் சின்னசின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்.

தமிழுக்கு தேவையான சில காட்சிகளை மாத்தியிருக்கிறார்.

கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாவும் கதையை

வேகமாக நகர்த்தும் பாணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டு.

குறிப்பாக சொல்வதானால் எனக்கும் சமுத்திரக்கனி

அண்ணாவுக்கும் ஒரு பைட் கொடுத்தார்கள். இதற்காக ஐந்து நாள்

ஷூட் நடத்தினோம். அது மிக மிரட்டலான காட்சியாக அமைந்துள்ளது.

இதற்காக மாடியில் இருந்து நிஜமாகவே குதித்ததெல்லாம் இந்த

சண்டைக் காட்சி தமிழுக்காக சேர்த்த விஷயம்.

மேலும் வெயிட்டான கதை என்பதாலேயே

கார்த்திக் அண்ணா, சிம்ரன், சமுத்திரக்கனி ஊர்வசி , லீலா சாம்சன், செம்மலர், வனிதா விஜயகுமார்,
யோகிபாபுன்னு நிறை

பேர் நடித்துள்ளார். ஒவ்வொருவரும் நடிப்பில்

பிரமாதமா நடித்துள்ளார் . இது எனக்கு புதிய அனுபவம்.

பிஸியாக இந்திப் படங்கள் பண்ணி

கொண்டிருக்கும்
ரவி யாதவைக் கூட்டிட்டு

வந்து ஒளிப்பதிவு பண்ண வைத்திருக்கிறார்

அப்பா . பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் ஒவ்வொன்றும்
கவனிக்க வைக்கும் .

கலை இயக்குநர் செந்தில் ராகவன் உள்பட எல்ல

டெக்னீஷியன் களும் தங்களின் சிறந்த

உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
முன் காலத்தில்

நவரச நாயகன் இருந்த கார்த்திக் சாருக்கு தனி முக்கியத்துவம்

இருக்கிறது
இந்தப் படத்தில் 1980-ம் வருட கார்த்திக்கை அவர் வரும் ஒவ்வொரு

சீனிலும் பார்க்கலாம்.

அவர் கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும் . கதையை கேட்டு , பார்த்து இன்வால்வாக

ஆகி தன் பாணியில நடித்து அசத்தி இருக்கிறார்.

அப்புறம் தமிழ் சினிமாவில் எந்த ஜோடிகளும்

நிகழ்த்திக்காட்டாத காதல், மோதல், ஆக்ஷன் என பல ஜானர்களில் நடித்து கலக்கியுள்ள

சிம்ரனும் நானும் சேர்ந்து ஆறு படங்கள்ல ஜோடியா நடித்து எல்லோரையும் கவர்ந்து உள்ளோம்.

அந்தக் கெமிஸ்ட்ரி வேற மாதிரி இருக்கும். இந்தப் படத்தில் சஸ்பென்ஸ்

நிறைந்த கேரக்டரில் சிம்ரன் வருகிறார். கிடைச்ச எல்லா ரோலையும் அவர் தன் பெர்ஃபார்மன்ஸால் மிரட்டுவது

வாடிக்கை .அந்த ஸ்டைலில் அந்த கேரக்டருக்குச் சரியான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

நிச்சயமா அவர் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்றே நம்புகிறேன் .

வனிதா விஜய்குமார் கேரக்டரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கைத் தட்டி ரசிக்கப்

போவது நிஜம்.. அது போல நிக தமிழ் பெண்

ஆன பிரியா ஆனந்துக்கு இனி கால்ஷீட் கொடுப்பதில் பிசியாகி விடுவார்..

அந்த அளவுக்கு எல்லாருக்கும் சமமாக, சவாலான வாய்ப்பு வழங்கி இருக்கிறார்

இயக்குநரும் தியாகராஜன் சார்.
இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது. இது வரை ஒவ்வொரு கதைக்கும் என்னைத்

தயார்படுத்திக்கொள்ள அந்த கால அவகாசம் தேவையாக இருந்தது.

இனி அது இருக்காது. தொடர்ந்து நடிக்கப் போகிறேன். இப்ப

தினமும் நிறைய இயக்குநர்கள் வந்து கதை சொல்வதும்,

தயாரிப்பாளர்கள் வந்து போவதும் அதிகரித்து விட்டது.

இந்த அந்தகன்-னுக்கு அடுத்ததாக விஜயுடன் நடித்த கோட் ரிலீஸ் ஆகப் போகிறது.

நெக்ஸ்ட் அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடிக்கும் ‘ஒரு படம் பண்ணுகிறோம்.

அதுவும் பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகளில்

உருவாகிறது. இது தவிர விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இந்தியில் ‘ரீசார்ஜ்’

என்னும் டைட்டிலில் ரீமேக் பண்ணுகிறோம்.

அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்.” என்று உற்சாகமாக கூறினார்


மொத்தத்தில்

இந்த அந்தகன் அனைவர் பார்வையிலும் பார்க்க வேண்டிய படம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *