
ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!
மேலும், தனது ரசிகர்மன்ற (AAFA) உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கினார்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட சுமார் 1000 அல்லு அர்ஜுன் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டார். அன்பும், ஒற்றுமையும் நிறைந்த ஒரு சிறப்பான நிகழ்வாக இது அமைந்தது.


இந்த நிகழ்வை சிறப்பாக்கியது அதன் பிரம்மாண்டமான ஏற்பாடு மட்டுமல்ல. ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் பகிர்ந்த அன்பான தருணங்கள்தான்.
ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு மட்டும் அல்லு அர்ஜுன் போஸ் கொடுக்கவில்லை. ரசிகர்களுடன் சிரித்து, நடனமாடி, மனம் திறந்து உரையாடினார். நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தார். அந்தச் சூழல் நடிகர்- ரசிகர்கள் சந்திப்பு சந்திப்பைப் போல அல்லாமல், நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று கூடிய ஒரு குடும்ப விழாவைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக இருந்த ரசிகர்களுடன் அவர் பகிரும் தனித்துவமான பந்தத்தை இந்த நிகழ்வு மீண்டும் வெளிப்படுத்தியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1000 அல்லு அர்ஜூன் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது ரசிகர்களின் நலனுக்கு அல்லு அர்ஜுன் அளிக்கும் முக்கியத்துவம் நெகிழ்வை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஏழு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் அன்பை மதிக்கும் வகையில் அல்லு அர்ஜுன் தனது முழு நாளையும் அவர்களுக்காக அர்ப்பணித்தார். அது ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வோ, பிராண்ட் நிகழ்ச்சியாகவோ அல்லாமல் தனது ரசிகர்கள் அளித்துவரும் அசைக்க முடியாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் சந்திப்பாக அமைந்தது.
பிரபலங்களுடனான சந்திப்புகள் பெரும்பாலும் சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். ஆனால், அல்லு அர்ஜுன் தனது மிக மதிப்புமிக்க நேரத்தை ரசிகர்களுக்காக ஒதுக்கினார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு ரசிகரும் தனிப்பட்ட நினைவுகளுடனும், மனம் தொட்ட உரையாடல்களுடனும், ஒரு சூப்பர் ஸ்டாரை மட்டுமல்ல, தங்களை உண்மையாக மதிக்கும் ஒருவருடன் அந்த நாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியுடனும் திரும்பிச் சென்றனர்.
அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உறவு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. பரஸ்பர மரியாதை, பாசம் மற்றும் பல ஆண்டுகளாகத் தொடரும் அன்பினால் உருவான இந்த உறவு வருங்காலத்தில் இன்னும் வலுவாகும்.