இருளில் வாழும் குடும்பத்திற்கு அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ₹50,000 நிதியுதவியையும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருள்கள் லெஜெண்ட் சரவணன் அவர்கள் வழங்கினார்!

Share the post

இருளில் வாழும் குடும்பத்திற்கு ஒளிக்கதிரான லெஜெண்ட் சரவணன்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பூதூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது குடும்பத்தை மிகவும் சிரமமான சூழலில் நடத்தி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அந்த இரு குழந்தைகளும் பார்வையற்றவர்கள்.

இந்த குடும்பத்தின் நிலை குறித்து தகவல் அறிந்த லெஜெண்ட் சரவணன் அவர்கள், மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டினார்.

குடும்பத்தின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ₹50,000 நிதியுதவியையும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களையும் வழங்கினார்.

ஒருவரின் உண்மையான பெருமை அவர் சம்பாதிக்கும் செல்வத்தில் இல்லை; தேவைப்படும் நேரத்தில் பிறருக்கு செய்யும் உதவியில்தான் இருக்கிறது.

எந்தவித விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல், உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவாக நிற்கும் லெஜெண்ட் சரவணன் அவர்களின் இந்த மனிதநேய செயல் பலருக்கும் முன்னுதாரணமாக அமைகிறது.

@vasupro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *