

வித் லவ்’ (With Love) திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- அபிஷன் ஜீவிந்த், அனஸ்வர ராஜன், தேனி முருகன்,
“கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சச்சனா, ஆர்ஜே
அனந்தி, டிம்பிள் கண்ணா, சித்தார்த்
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – மதன்.
மியூசிக் :-
ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு :-
ஸ்ரேயாஸ்.
கிருஷ்ணா.
படத்தொகுப்பு:-
சுரேஷ் குமார்.
தயாரிப்பாளர்கள்:- எம்ஆர்பி என்டர்டெயின்
மென்ட், சியோன்
பிலிம்ஸ் – சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியன்.
முதன் முதல் பார்க்கும் போது காதல் சிலருக்கு தோல்வியில் முடிந்தாலும், அதன் நினைவுகள் மட்டும்
ஏதாவது ஒரு தருணத்தில், நம்முடைய
இதயத்தை தொட்டுக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு தருணமாக நமது முதல்
காதலை நினைவுப்படுத்து
கொண்டு இருப்பது. மட்டும் இல்லாமல், அந்த காதலை மீண்டும்
தேடிச் செல்லும் ஒரு இனிமையான காதல் பயணத்தை மேற்கொண்டு
தூண்டுவது தான் இந்தப்படத்தின் கதைக்கரு கதைக்களம்.
திருமணத்திற்காக குடும்பத்தார் பார்த்த
அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களைப் பற்றிய
முழுவதும் தனது விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது
முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அப்போது அனஸ்வரா ராஜானுக்கு தோன்றும் ஒரு
யோசனை மூலம் தான் இருவரும் இணைந்து தங்களது
முதல் காதலை தேடிச் செல்கிறார்கள். அந்த தேடுதல் பயணம்
இவர்களிடத்திலிலிருந்து இவ்விருவது காதலை உண்டாக்கியதா ? இல்லையா ?
என்பதை, மனதின் ஆழத்தில் புதைந்திருக்
கின்றனது
மகிழ்ச்சியான அல்லது வலிமிகுந்த முதல் காதல் இந்த
தருணங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில்
சொல்வதே “வித் லவ்” என்ற திரைப்பட கதைக்களம்…
பள்ளிப் பருவக் காதல் என்பது எதிர்பார்ப்புகள் இல்லாத, தூய்மையானது
மற்றும் முதல் வலி நிறைந்த நினைவாகும். இந்த
இளம் பருவம் காதல், நட்பு மற்றும் சின்ன சிறு உணர்ச்சிப் போராட்டங்களை
உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு காலகட்டம் காதல்கதை என்பதை
இயக்குநர் மதன் அழகுடன் சொல்லி அசத்தியிருக்கிறார்.இயக்குனர்.
பார்த்த உடனே பிடிக்கவில்லை என்றாலும், பார்க்க பார்க்க பிடித்துப்
போவதுடன்,படத்தை பார்க்கும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்
பிடித்து விடுகின்ற அம்சங்கள் நிறைந்த கதாநாயகனாக
வலம் வருகிறார் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம்
மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும்
கனகச்சிதமாக பொறுப்புடன், நடிப்பின்
மூலமாக தன்னை ரசிக்க வைத்திருக்கிறார்
கள்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார் அனஸ்வரா ராஜன், எளிமையான அழகுடன், அசத்தலான
நடிப்புடன் கவனம் ஈர்க்கிறார்.
சொல்லாமல் போன காதலை மீண்டும்
சொல்ல வேண்டும்,
என்ற அவரது முயற்சியும், அதற்கான
பயணத்தில் ஏற்படும் தனது மன மாற்றங்களை அழகுயுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.அனஸ்வரா ராஜனை படம்
முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது அவரது வசன
உச்சரிப்பில் மற்றும் நடிகை ஊர்வசியின்
சகோதரி, நடிகை கல்பனாவை நினைவுப்படுத்து
கிறார். அவர் டப்பிங்
பேசியதற்குப் பதில் ஒருவரை பேச வைத்திருந்தால்,
அவரது உடல் மொழி அசைவுகள் கூடுதல் அழகு மெருகேற்றி கிறது.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காவ்யா அனில்,
சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தும், பார்வையாளர்களின்
முதல் காதல் பயணம் நினைவுகளை புண்ணாகி விடும்
மாயாஜாலத்தை தனது நடிப்பின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார்
கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக
நடித்திருக்கிறார் சரவணன், கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கிறார் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், கதாநாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கிறார். டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கிறார் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரது
கதாபாத்திரங்களின் பள்ளிப்பயணம் சிறியதாக
இருப்பினும், திரைக்கதையில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது
பணி தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை தவிர்த்துவிட்டு, படம் பார்ப்பவர்களும் தங்களது பள்ளி
வாழ்க்கையின் நினைவுகளுடன் பயணிக்க வேண்டும், என்பதில்
அதிகம் கவனம் செலுத்தியிருப்ப
துடன் திரையில் தெரிகின்றன. கதாநாயகன் – கதாநாயகி இருவர் மட்டும் பயணிக்கின்றது
ஒரு கதையை, அவர்கள் மூலமாகவே
ரசிகர்களிடத்தில் ரசிக்கும்படி கொண்டு சேர்க்கும்
வகையில் காட்சிகளை படமாக்கியிருக்
கிறார் ஸ்ரேயாஸ்
கிருஷ்ணாவின், கேமரா கூட சில இடங்களில் காதல் பேசியிருக்கிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கின்றன
சகரகங்களாக இருந்தும், அன்புடன் என்ற வார்த்தைக்கு
அதிகப்படியான பலம் சேர்க்கும் பாடல்களாக இல்லை
என்பதையும் மறுக்க முடியாது. பின்னணி இசையும் காதல் போல் இனிமை
படத்தொகுப்பு சுரேஷ் குமார், இரண்டு கதாபாத்திரங்களின்
பயணத்தை மிக நேர்த்தியாக, சுருக்கமாக அதே
சமயம் சுவாரஸ்யமாக நகரும் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார். மதன், முதல் காதல் அனுபவங்களை அசைபோடும்
நினைவுகளை மையக்கருவாக எடுத்துக்கொண்டு,
தமிழ் சினிமாவில் ஏற்கனவே
வெளியான படங்களின் பாதிப்பை
கையாண்டிருப்
பினும், தற்போதைய காலக்கட்ட
இளைஞர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை வடிவமைத்துடன்
பார்வையாளர்களை மகிழ்விப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
காலங்கள் கடந்தாலும், முதல் காதல் அனுபவம்
மனதில் அழியாத சுவடுகளாக பதிந்து, எப்போது
நினைத்தாலும் அதே உணர்வை கடத்தும் என்பதை நாயகன் மற்றும் நாயகி
கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, மேலும் சில
கதாபாத்திரங்கள் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் மதன், அதை வலிமிகுந்த
அனுபவங்களாக சொல்லாமல், மகிழ்ச்சியோடு
கடந்து செல்லக்கூடிய இனிமையான
தருணங்களாக காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை இரண்டு மணி நேரம்
காதல் மற்றும் மகிழ்ச்சியோடு பயணிக்க வைத்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில், “வித் லவ்” காதலர்கள் தோற்றாலும், காதல்
உணர்வு தோற்பதில்லை, என்பதை தந்த கதையை கவிதையாக சொல்லியிருக்கிறார்
இயக்குநர் . இளம் காதலர்கள் அனைவரும் கவனத்தை ஈர்த்த
திரைப்படம் இதை திரையரங்குகளில் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்…