
” இந்தியன் பீனல் லாலவ்” (INDIAN PENAL LAW -IPL) திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- கிஷோர், TTF வாசன், அபிராமி, குஷிதா கல்லாப்பு, நரேன்,
திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஊதுகருப்பன்,
ஹரீஷ் பேரடி, சிங்கம்புலி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்: கருணாநிதி.
மியூசிக்: –
அஸ்வின் விநாயகமூர்த்தி.
ஒளிப்பதிவு :-
.எஸ்.பிச்சமணி.
படத்தொகுப்பு :-
பிரகாஷ் மாப்பு.
தயாரிப்பாளர்கள் :- ராதா பிலிம் இன்டர்நேஷனல் – ஜி.ஆர். மதன் கிருஷ்ணன்.
ஒரே ஒரு இருந்தால் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள், ஒருவருக்கு எதிராக இருந்தால், இந்திய
தண்டனைச் சட்டத்தின்படி அவரை குற்றவாளியாகக் கருதி தண்டனை வழங்க முடியும். அந்த
வகையில் எந்தவித குற்றமும் செய்யாத கிஷோர், ஒரு
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக சாட்சியங்கள் மற்றும்
ஆதரங்கள் சமர்க்கப்பட்டு குற்றவாளியாக்கப்
படுகிறார்.
குற்றம் செய்யாத கிஷோரை
குற்றவாளியாக்கி தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயற்சிக்க,
அவரை காப்பாற்ற அவரது தங்கையின் காதலரான
டி.டி.எஃப்.வாசன் முயற்சிக்கிறார். இறுதியில், யாருடைய முயற்சி வெற்றி பெற்றது, கிஷோரை
குற்றவாளியக்க முயற்சிப்பவர்கள் யார், எதற்காக, என்பது தான்
படத்தின் கதைக்களம். சொல்கிறது.ஐ.பி.எல்.
என்ற திரைப்படம்
எப்போதும் கிஷோரின் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு
பெரும் பலம்த்தை சேர்த்திருக்கிறார் நான் செய்யாத தவறையும் ஆதாரம்
இல்லாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில்
அவர் எதிர்கொள்ளும் போலீஸுன் கொடுமைகள்
அடித்தடிகள் பார்வையாளர்களை மனதை கலங்க வைக்கின்றன.
அறிமுக நடிகர் டி.டி.எஃப்.வாசன், கொடுத்த வேலையை சிறப்பாக
குறை இல்லாமல் நடிப்பில் செய்திருக்கிறார்.
வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டும் தனது
தனித்துவத்தை
படத்திலும்
வெளிக்காட்டி
இருந்தாலும், அந்த காட்சி பெரிய அளவில் கவரவில்லை.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஹரிஷ் பெராடி
கொடூரமான முகத்தை வைத்துக்கொண்டு
கச்சிதமாக கையாண்டு மிரட்டி இருக்கிறார்.
மற்றொரு காவல்துறை உயர் அதிகாரியாக
நடித்திருக்கிறார்
திலீபன் நடிப்பில் அளவில் காவல்துறை ஆய்வாளராக
நடித்திருக்கிறார் ஜான் விஜய், வழக்கம் போல் தனது
அதிகப்படியான நடிப்பில் தலைவலியை கொடுத்திருக்கிறார்.
கிஷோரின் மனைவியாக நடித்திருக்கிறார்
அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கிறார் நரேன்,
போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில்
நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பு அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள்
மற்றும் பின்னணி இசை குறை எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு பயணித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு எஸ்.பிச்சமணி காட்சிகளை ,
கலர் ஃபுல்லாக படமாக்கியுள்ளார். இருசக்கர வாகன சேசிங் காட்சியை
படமாக்குவதில் கடினமாக இருப்பினும் உழைத்திருப்பதில்,
பெரிய அளவில் தெரிய வில்லை.
படத்தொகுப்பு பிரகாஷ் மாப்புவின் பணியும் சிறப்பாக இருந்தது
எழுதி இயக்கியிருக்கும் கருணாநிதி, சில உண்மை
சம்பவங்களை மையமாக வைத்துக் கொண்டு
பரபரப்பான கற்பனை கதைக்கு விறுவிறுப்பான
திரைக்கதையை அமைத்து படத்தை சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார்.
சில நேரங்களில் அப்பாவி மக்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை
உண்மைக்கு சம்பவத்தை நெருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிறை
படுகொலைகளின் பின்னணியில் இருக்கும்
உண்மைகளையும் தைரியமாக சொல்லி கைதட்டல் பெறுகிறார்.
படம் பார்த்தத்தில் ’இந்தியன் பீனல் லாவ்’ (ஐ.பி.எல்)