
“இரவின் விழிகள்” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள்:- மகேந்திரன், நீமாரே, நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ்,
கத்தரிக்கோல் மனோகர், சேரன் ராஜ், ஆன்சி சிந்து, அஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்..
டைரக்டர்: சிக்கல் ராஜேஷ்.
மியூசிக் :- ஏ.எம்.
அசார்
தயாரிப்பாளர்கள்:- பி.மகேந்திரன்
ஒளிப்பதிவு:-
பாஸ்கர்.
படத்தொகுப்பு:-
ஆர் .ராமர்.
எல்லா மாநிலங்களிலும் உள்ள யூடியுப்,நடத்தும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்
பிரபலமாக இருப்பவர்களில் சிலர், தங்கள் வருமானத்திற்காக,
தங்களின் தளங்களின் பிரபலத்திற்காக,
சில எல்லை மீறிய செயல்களை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை
பட்டியலிட்டு ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார் ? எதற்காக
இப்படி செய்கிறார் ? என்பதை பரபரப்பாக சொல்வது தான்
“இரவின் விழிகள்”.
திரைப்பட கதைக்களம்.
கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார் மஹேந்திரன், அறிமுக நடிகர் இருப்பதால்
அதற்கான அடையாளங்கள் கொஞ்சம் கூட தெரியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை
குறை இல்லாமல் செய்திருக்கிறார். கவர்ச்சியில்
அதிக வெளிக்காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார்.
கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர்
சிக்கல் ராஜேஷ், தனது நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவை ஞாபகப்படுத்தும், வகையில் திரைக்கதைக்கு
அவரது நடிப்பு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த
நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணப்பட்டிருக்
கிறார்கள்.
இசையமைப்பு ஏ.எம்.அசார்,
இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “கருப்பு…” பாடல்
வீரியம் மிக்கதாக அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும்
விதமாக உள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளை பளிச்சென்று படமாகி
படத்தின் தரத்தை அதிகரிக்க செய்திருக்கிறார்.
இரவு நேர காட்சிகளில் சில யுத்திகளை பயன்படுத்தி
அதையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியுளார்.
படத்தொகுப்பாளர் ஆர்.ராமர்,
காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து
விறுவிறுப்பாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல்
ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா
மோகத்தில் மூழ்கியிருப்பவர்கள்மீறிய செயல்களை கண்டிப்பதோடு,
அவர்களுக்கு அதிரடியான
முறையில் அறிவுரைகளை கூறியிருக்கிறார்.
சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில்
நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது
என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும்,
கிளைமாக்ஸில் அண்ணன் – தங்கை பாசம் மூலம் செண்டிமெண்ட் காட்சிகளால்
இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பார்வையாளர்களை கலங்க வைக்கிறார்.
பொருளாதார ரீதியாக கதை சொல்வது மற்றும் காட்சிப்படுத்திய
முறையில் சில குறைகள் இருப்பின் தற்போதைய
காலக்கட்டத்தில் சொல்லப்பட வேண்டிய கதையாக
உள்ள இப்படம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படம்.
படம் பார்த்தத்தில், ‘இரவின் விழிகள்’ யோசிக்க வைக்கிறது யூடியூபர் செய்யும்
சின்ன சின்ன தவறை குறியீடு சரி வைக்கும்
திரைப்படம். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…