
“சொட்ட சொட்ட
நனையுது”
திரைப்பட
விமர்சனம்…
நடித்தவர்கள் :- நிஷாந்த் ரூசோ,
பிக்பாஸ் வர்ஷினி, ஷாலினி, ரோபோ சங்கர், புகழ்
இயக்குனர் : – நவீத் எஸ் ஃபரீத்
இசை: ரஞ்சித் உன்னி
ஒளிப்பதிவு:-
ரயீஷ்
படத்தொகுப்பு :-
ராம் சதீஷ்.
தயாரிப்பாளர்கள்:-
அட்லர் என்டர்டெயின்மென்ட்
இது எல்லா ஆண்களுக்கு மட்டும்
இல்லை ஒரு சில பெண்களுக்கு கூட ஏற்படுகின்ற இயல்பான விசயம்
இளம் வயதிலேயே தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையுடன் இருக்கும் நாயகன் நிஷாந்த்
ரூஷோவை பல பெண்கள் இவரை தலை சொட்டை என்று நிராகரித்து விடுகிறார்கள்.
இவர் வசதியான செல்வந்தர் குடும்பத்தைச்
சேர்ந்தவராக இருப்பதால், அவரது வழுக்கைத்
தலையால் திருமண என்ற வாழ்க்கை நடைபெற்றாமல் இருக்கிறார்.
இதனால் அவமானங்கள் வருவதை
தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
இதற்கிடையில் நிஷாந்த் ரூஷோவின் எதிர் வீட்டில்
வசிக்கின்ற ஷாலினி அவரை திருமணம் செய்து கொள்ள
முழு சம்மதித்து விடுகிறார், கல்யாண வேலைகள் தடபுடலாக
நடக்கின்றன. அன்று காலை விடிந்தால் திருமணம் என்ற நிலையில், நிஷாந்த் ரூஷோ
திடீரென்று திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
அவர் திருமணத்தை நிறுத்தியது ஏன் ?, எதற்கு வழுக்கைத் தலையால் பாதிக்கப்பட்ட
திருமண வாழ்க்கை அவருக்கு மீண்டும் அமைந்ததா இல்லையா ? என்பதை
நகைச்சுவையாக சொல்வது தான் “சொட்ட சொட்ட நனையுது”. கதைக்களம்.
மாறுபட்ட விதங்களில் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இளம் நாயகன்
நிஷாந்த் ரூஷோ, இளம் வயதில் தனது தலையில் வழுக்கை தலையுடன்
தந்தையோடு
இருப்பவர்களின் அவரது மன வலியை
பிரதிபலிக்கும் வரை கதாபாத்திரத்தை மிக சிறப்பாக
கையாண்டிருக்கிறார்குறிப்பாக வழுக்கைத் தலை மேக்கப்
அவருக்கு மிக கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.
நாயகிகளாக நடித்திருக்கும் பிக் பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி இருவரும் கொடுத்த
வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் என படம் முழுவதும்
காமெடி நடிகர்கள் நிறைந்து இருப்பதால் சிரிக்கும்படியான
காட்சிகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இசையமைப்பு ரஞ்சித் உன்னி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி
இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.
ஒளிப்பதிவு ரயீஷ் , காட்சிகளை ஒரே
வீட்டுக்குள் வைத்தே படமாக்கியுள்ளார். இந்த கதைக்களம் நாயகனின் வழுக்கை தலை தான் காரணம் என்பதால்,
ஒளிப்பதிவாளர் தலை மீது மட்டும் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.
அதிக நேரம் ஓடும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
படத்தொகுப்பு
ராம்சதீஷ் நிறைய காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்…
கலக்கப்போவது யார் புகழ் ராஜா, இளம் வயதில் தலை முடி உதிர்ந்து வழுக்கைத்
தலையோடு இருப்பவர்கள்
எந்த வகையில் வலியை அனுபவித்து
இருக்கிறார், என்ற உணர்வுப்பூர்வமாக மட்டும் இன்றி
நகைச்சுவையாக சொல்லிருக்
கிறார்கள்.
இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத், வழுக்கைத் தலையால்
பாதிக்கப்படுகின்ற மனிதர்களின் வாழ்க்கையின் வலியை
மிகுதியாக சொல்லாமல், ஜாலியாக சொல்லு கின்ற விதத்தில் காட்சிகளை
அமைத்து, இருப்பதால் நாயகனின் வலி அல்லது அவர் எதிர்பார்த்த
பிரச்சனைகளை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி
யிருக்கிறார்.
இதனால், முதல்பாதி படமும், கடைசி காட்சியை இயக்குநர் சொல்ல
நினைத்ததை ரசிகர்களிடம் கடந்து போகும் விதத்தில் அமையுள்ளார்.
படத்தின் முதல்பாதி போல், இரண்டாம் பாதியிலும் கதை மற்றும்
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்து வழுக்கைத் தலையால் வலியை
எப்படி அனுபவிப்பவர்கள் மட்டும் சினிமா
ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி இருக்க வேண்டும்.
இருந்தாலும், நாயகனின் வழுக்கை தலை
தரமான முறையில் படமாக்கப்பட்ட விதம், நாயகன் நிஷாந்த் ரூஷோவின் நடிப்பு ஆகியவை படத்தின்
குறைகளை நிறைகளாக மாற்றி படத்தை ரசிக்க வைக்கிறது.
படம் பார்த்தத்தில், ‘சொட்ட சொட்ட நனையுது’ ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் ஹார்மோன் என்ற
குறைபாடுகளில் முடி உதிர்தல் இது ஆண்களுக்கு அதிக பட்சமாக வருகிறது மற்றொரு
குடும்பத்தில் வருகிற வாரிசுகளால் வருகிற தொல் பூச்சி வியாதி என்று சொல்லலாம்.ஆண்
களுக்கு இதனால் வரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதை கொண்டு பின்னணிப்
பிணைக்கப்பட்ட கதை இது அனைவரும் இது தொய்வு அடைய வேண்டாம். இதனால் ஆண்களை
கேளிக்கை கிண்டலுக்கு ஆகிறார்கள் இதை துச்சமாக மதிக்க வேண்டும் என்று
இந்த கதையில் சொல்லப் படுகின்ற விசயம் .இப்ப
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அனைவரும் கண்டு களியலாம்…