
“நாளை நமதே” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- மதுமிதா’, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில்குமார்,
முருகேசன், மாரிகண்ணு, கோவை உமா, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- வெண்பா கதிரேஷ்சன்.
மியூசிக் :-
வி.எச்.ஹரி
கிருஷ்ணன்.
ஒளிப்பதிவு:-
பிரவீன்
தயாரிப்பாளர்கள் :- ஸ்ரீதுர்கா
கிரியேஷன்ஸ் –
வி.ரவிச்சந்திரன்.
சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் உள்ள
கிராமத்தின் ஒன்றியம் பஞ்சாயத்து தொகுதியில் பட்டியல் சாதியினருக்கான
அறிவிக்கப்படு
கின்ற தேர்தல் இதையடுத்து தலைவர் பதவிக்கு பட்டியல் சாதியினர் ஒருவர் போட்டியிட, அதை
ஏற்றுக்கொள்ளாத வேறு சாதியினர் தலைவர் பதவிக்கு
போட்டியிடும் எந்த நபரையும் மற்றும் பலரை கொலை
செய்யபடுகின்றனர்,
ஊரில் பெரிய கலவரத்தை தூண்டி விடுகிறார்கள்.
இதனால் அந்த தொகுதி மீண்டும் பொது தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.
இதனால், தலைவராக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
ஒருவரை மட்டும் பதினைந்து ஆண்டுகளாக
இருந்தால் எந்த வளர்ச்சி இல்லாமல் இருக்கும் அந்த கிராம பஞ்சாயத்து
தொகுதி மீண்டும் பட்டியல்
சாதியினருக்கான ஒரு அறிக்கை அறிவிக்கப்படு
கின்றனர்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு
கசப்பான சம்பவத்தால், தேர்தலில் போட்டியிட
பட்டியல் சாதியினர் தரப்பு விரும்பாத
நிலையில், அந்த சாதியை சேர்ந்த
கதாநாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.
அதுவும் அவர் யாரிடமும் பேசாமல் நியாத்தோடு
அவருக்கு வழக்கும் போல் பலவிதமான மிரட்டல்கள் வர,
அனைத்தையும் கடந்து, தேர்தலில் நிச்சயம்
போட்டியிட்டே தீருவேன், என்பதில் உறுதியாக இருக்கும்
மதுமிதா, எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கிறார்,
அவர் நினைத்தது போல் தேர்தல் நடந்ததா?,
இல்லையா?அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?என்பதை உண்மை
சம்பவங்கள் பின்னணியோடு சொல்வது தான் “நாளை நமதே”
கதையின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மதுமிதா, மண் சார்ந்த தனது உடல் மொழி சார்ந்த முகமாகத்தோடும், நடிப்பில் தீயாகவும் படத்தை தனது
தோளில் சுமந்திருக்கிறார். எத்தனை பிரச்சனை
வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் அவரது பயணமும், எதிர்ப்புகளை கடந்து
போகும் போரட்ட குணமும் மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.
அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அருமையாக கையாண்டு மதுமிதாவின் துடிப்பான நடிப்பில் உயர்ந்து.நிற்கிறார்.
இதுல நடித்துள்ளனர் வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்களாக
நடித்த நடிகர், நடிகைகள் என அனைவரும்
மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் இந்த கதைக்களத்தையும், கதை பெண்களை யும் இயல்பாக காட்சிப்படுத்துள்ளார்
இதனால், படம் பார்க்கும் உணர்வை கடந்து, சென்றுள்ளார்.ஒரு
சம்பவத்தை நேரில் பார்த்த மாதிரி அனுபவத்தை நமக்கு காட்சிகள் கொடுத்துள்ளார்.
இசையமைப்பு வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில்
பாடல்கள், பின்னணி இசையும் கதைக்களத்தில் மிகப்பெரிய வலிமை சேர்க்கும் விதத்தில் பயணித்திருக்
கின்றன.
எழுதி இயக்கியுள்ளார் வெண்பா கதிரேசன். இட ஒதுக்கீடு மூலம்,
சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு
அரசியலில் பங்கேற்கவும், தங்கள் உரிமைகளை
நிலைநாட்டவும் வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து,
தங்களது அதிகார திமிரோடு அவர்கள் மீது திணிக்க
முயற்சிப்பவர்களுக்கு பெரிய சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
சாதி பிரிவினை மற்றும் சாதி ரீதியான
ஒடுக்குமுறையை பற்றி படம் பேசியானலும், அரசு திட்டங்களை சரியாக
பயன்படுத்தாமல், இன்னமும வளர்ச்சி இல்லாமல் இருக்கும்
கிராமங்களை சுட்டிக்காட்டும் விதமாக, தனியொரு நபருக்கு தனது சுயநலத்திற்காக சாதி எப்படி
பயன்படுத்தப்படு
கின்றனர் என்பதை மிக தெளிவாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அரசியல் ரீதியிலாக காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையில் அனைத்தும் கூர்மையாகவும்,
கைதட்டல் பெறும் விதமாக இருக்கின்றது. சாதியை
மையப்படுத்திய படம் என்றால், ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கும் வைத்த சூழநிலையில், அனைத்து
தரப்பினரையும் யோசிக்க வைக்கிறார் ஒரு கேள்வியை இயக்குநர் முன்
வைக்கிறார். அந்த கேள்வியை மையப்படுத்திய இந்த பயணம்,
பாதிக்கப்பட்டவர்
களுக்குப் பற்றி சொல்வதை, இந்த சமூக அரசியலை தெளிவாக பேசி மக்களை
எழுச்சியடைய செய்யும் விதத்தில் பயணிக்கிறார்.
படம் பார்த்தத்தில், “நாளை நமதே”என்ற திரைப்படம் அரசியல் பேசும் பாமர மக்களுக்கு இது ஒரு அழுத்தமான உணர்வு பூர்வமான தேர்தல் களப் படைப்பாகும்…