அஹான் மற்றும் அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவுடன் இணைந்து அவர்கள் எப்படி ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பதை காண நேரத்தைச் செலவிட்டனர்!’ : சையாராவின் ஹம்சஃபர் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை மோஹித் சூரி வெளிப்படுத்துகிறார் !

Share the post

அஹான் மற்றும் அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவுடன் இணைந்து அவர்கள் எப்படி ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பதை காண நேரத்தைச் செலவிட்டனர்!’ : சையாராவின் ஹம்சஃபர் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை மோஹித் சூரி வெளிப்படுத்துகிறார்

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘சையாரா ‘ படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த காதல் ஆல்பமாகும்.மேலும் இந்த இசை ஆல்பத்தின் நான்காவது பாடலான ‘ஹம்சஃபர்’ என்கிற பாடல் இந்த படத்தின் ஜோடிகளான அஹான் பாண்டே & அனீத் பத்தா இடையேயான அழகான காதலை வெளிப்படுத்துகிறது .

இதுவரை, இப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் சையாரா தலைப்புப் பாடல், ஜூபின் நௌடியாலின் பர்பாத் மற்றும் விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ ஆகிய பாடல்கள் மக்களிடையே ஒருமித்த அன்பைப் பெற்றுள்ளது .மேலும் பாடல்கள் தரவரிசையில் உயர்ந்து வருகின்றது.இப்போது தயாரிப்பாளர்கள் இசை இரட்டையர்களான சச்சேத்-பரம்பராவின் இசையில் இந்த ஆல்பத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஹம்சஃபர்’ என்கிற காதல் பாடலை வெளியிட்டுள்ளனர். மோஹித் சூரி, சச்சேத் பரம்பரா இந்த கூட்டணியில் உருவாகியுள்ள முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பாடலின் மீது எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது.

சச்சேத்-பரம்பரா உருவாகியுள்ள இந்த பாடல் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் என்று மோஹித் கூறியுள்ளார் , ஏனெனில் இந்த படத்தின் ஜோடிகளான அஹான் மற்றும் அனீத்துக்கு சச்சேத்-பரம்பராவின் ஒற்றுமை ஒரு எடுத்துகாட்டாக மாறியது. 

மோஹித் சூரி கூறுகையில், ” சச்சேத் – பரம்பரா இருவரும் எவ்வாறு ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பது அஹான் மற்றும் அனீத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது .எனவே, அஹான் ,அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவின் இசை பணிகளை நேர்த்தியாக கவனிக்க நிறைய நேரம் செலவிட்டனர்.”

மோஹித் மேலும் கூறுகையில்,”இரண்டு நடிகர்களுக்கும் இது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது, ஏனென்றால் படைப்பாற்றல் மிக்க மனங்கள் எவ்வாறு ஒத்துழைக்கின்றன, கருத்துக்கள் பறிமாற்றம் மற்றும் ஒன்றாக அழகான இசையை உருவாக்குதல் என்பதைக் கற்றுக்கொண்டு உணர்ந்தனர் .எனவே, படத்தில் அஹான் மற்றும் அனீத் பற்றி நீங்கள் காணும் பல விஷயங்கள் உண்மையில் சச்சேத் மற்றும் பரம்பராவைப் பற்றி அவர்கள் பார்த்தவையாக தான் இருக்கும்.”

“ஹம்சஃபர் எங்கள் ஆல்பத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல், ஏனெனில் அது மிகவும் மாறுபட்ட காதல் பருவத்தைப் பற்றிப் பேசுகிறது, அதில் நீங்கள் சரியான துணையைக் கண்டுபிடிக்கும்போது வாழ்க்கை வாழத் தகுதியானது என்பதை கதாபாத்திரங்கள் உணர்கிறார்கள். ஹம்சஃபர் என்பது உங்கள் வாழ்க்கையின் அன்போடு இருக்கும்போது நீங்கள் பெறும் மிகவும் நிறைவான உணர்வைப் பற்றியது.அங்கு பிரச்சினைகள் மறைந்து ஒருவருக்கொருவர் முழுமையான அன்பை உணர்கிறார்கள்.”

மோஹித் மேலும் கூறுகையில்,”சச்சேத் மற்றும் பரம்பரா இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டின் இரண்டு பிரகாசமான இசைக்கலைஞர்கள், அவர்கள் எங்கள் சையாரா இசை ஆல்பத்தில் இருப்பது அவர்களின் குரல் மற்றும் இசை மூலம் காதலுக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. இந்தப் பாடலை மக்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.மேலும் மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.”

சையாரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அஹான் பாண்டே ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர் ,.மேலும் அனீத் பட்டா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர்) கதாநாயகியாக நடிக்கிறார். சையாரா படத்தை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார்.இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *