“மையல்”திரைப்பட விமர்சனம்…

Share the post

“மையல்”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-சேது, சம்ரித்தி தாரா, பி.எல். தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா, சி.எம். பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- ஏபிஜி. ஏழுமலை.

கதை, திரைக்கதை, வசனம் :- ஜெயமோகன்,

மியூசிக் : -அமர்கீத்.

எஸ், ஒளிப்பதிவு :– பாலா பழனியப்பன்,

படத்தொகுப்பு :- வெற்றி சண்முகம்,

தயாரிப்பாளர்கள்:-
ஜகான்- சினி கிரியேஷன்ஸ்
எல் எல்பி சார்பில் அனுபமா விக்ரமன் சிங் மற்றும் வேணுகோபால் .ஆர்.

ஊர்களிலும் போய் திருட்டு தொழிலை செய்து வரும் சேது ஒரு கிராமத்தில் அன்று

இரவு நேரத்தில் போய் ஆடு திருட செல்கிறார்.

எதிர்பாராத விதமாக கிராமத்து மக்களிடம் மாட்டிக் கொள்ளும்

சேது, அங்கிருந்து தப்பிக்க கிணற்றுக்குள்

குதித்து பதுங்கிக் கொள்கிறார். அந்த இரவு

கிணற்றின் அருகே ஊரே ஒதுக்கி வைத்திருக்கும்.

மந்திரக்கிழவியின் வீடு இருப்பதால் கிராம மக்கள் பயந்து திரும்பி சென்று விடுகின்றனர்.

அதே நாள் இரவில் அந்த கிராமத்து ஜமீன்தார்

பி.எல்.தேனப்பன் வாரிசுகள் இல்லாத தனது சித்தப்பா, சித்தியை

சொத்துக்கு ஆசைப்பட்டு அடியாட்களை வைத்து கொலை
செய்து விடுகிறார்.

ஆடு திருட்டு சம்பவத்தையும், கொலை சம்பவத்தையும் இன்ஸ்பெக்டர்

ஆர்.பி.பாலா விசாரணையை மேற்க்கொண்டிருக்
கிறார்.

இந்நிலையில் கிணற்றில் விழுந்த சேதுவை மந்திரக்கிழவியின் பேத்தி சம்ரித்தி தாரா .

காப்பாற்றி முதலுதவி செய்து அடைக்கலம் கொடுக்கிறார்.

போலீஸ் கெடுபிடி, கிராமத்துமக்கள் நடமாட்டம் இருப்பதால் சேது

அந்த குடிசையிலேயே தங்க வைத்தியம் செய்து கொள்கிறார்.

சம்ரித்தி சேதுவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்க முதலில் திருடன் என்று சொல்லி

மறுக்கும் சேது பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார். நான்க

குணமானவுடன் சொந்த ஊருக்கு சென்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக

கூறி மந்திரக் கிழவி உதவியுடன் இரவில் பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்கிறார்.

இந்நிலையில் கொலை சம்பவத்திற்கு

காரணம் ஜமீன்தார் தேனப்பன் தான் என்று கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர்,

அவரை கைது செய்ய முடிவு செய்கிறார். இதனை அறிந்து கொள்ளும் ஜமீன்தார்

இன்ஸ்பெக்டர் பாலாவிற்கு லட்சக்கணக்கில்

பணம் கொடுத்து, சமதானம் படுத்தி தனது‌ அடியாட்கள் இருவரை குற்றவாளியாக

கைது செய்து அதுல ஒருவரை என்கவுண்டர் செய்யச் சொல்கிறார்.

அந்த இரு அடியாட்களை கைது செய்ய செல்லும்

இன்ஸ்பெக்டரால் ஒருவரை மட்டும் சுட்டுககொள்ள முடிந்தது,

மற்றொரு நபர் தப்பித்து மலைப்பகுதியில் போய் மறைந்து விடுகிறார்.

அவனை தேடி போலீஸ் படை செல்கிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் ஊருக்கு

செல்லும் சேது திருட்டு தொழிலுக்கு முழுக்கு போட்டு

விட்டு புது வாழ்க்கை வாழ வீட்டை விற்று நகை, புடவை வாங்கிக் கொண்டு

திருமணம் செய்து கொள்ள காதலியின் ஊருக்கு வருகிறார்.

அந்த நேரத்தில்
என்கவுண்டர் ஆளை தேடிக் கொண்டிருக்கும் போலீஸ் கண்ணில்

பட, தப்பிக்க நினைக்கும் சேதுவை கைது செய்து அவன் திருடன்

என்பதையறிந்து கொலைப்பழியை சேது மேல் போட திட்டமிடுகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் பாலா. போலீஸ் நிலையத்தில்

துன்புறத்தப்படும் சேது பொய்யான கொலை பழியை

ஏற்றுக்கொண்டாரா?
இல்லையா?
அங்கிருந்து தப்பித்து காதல் திருமணம்

செய்து கொண்டாரா? இல்லையா? என்ன நடந்தது என்ன? என்பதே படத்தின் கதைக்களத்தின்
முடிவு.தெரியும்

சேது மைனா, படத்தில். இப்பொழுது பிறகு

இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கும் சேது இந்த படத்தில் ஆட்டுத் திருடும்த் திருடனாக

இரவில் பதுங்கி சென்று திருட முயற்சி கும் போது, காதலில் விழுவது, புது வாழ்க்கை

கிடைக்கப்போவதை நினைத்து சந்தோஷப்படுவது, போலீசிடம் சிக்கி சித்தரவதை

அனுபவிப்பதும், பிறகு வெகுண்டெழுந்து

விரோதிகளை துவம்சம் செய்யும் காட்சிகள்,

காதலியின் முடிவை நினைத்து பதறி துடிப்பது என்று அழுத்தமான நடிப்பால் கவர்ந்து ஈர்கிறார்.

காதலியாக சம்ரித்தி தாரா அல்லி கதாபாத்திரத்தில்

துடுக்கான பேச்சு, கேலி, கிண்டல், காதல், பரிதவிப்பு,

தப்பிக்க எடுக்கும் சோக முடிவு என்று யதார்த்தமாக நடித்துள்ளார்.

வில்லன்களாக பி.எல்.தேனப்பன், இன்ஸ்பெக்டராக ஃசி.எம்.பாலா, சூனியக் கிழவியாக ரத்னகலா, போலீஸ் ஏட்டாக

மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் படத்தில் முக்கிய பங்கு வகித்து நேர்த்தியாக நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பன் கிராமத்து மண் மணம் மாறாமல்

இயற்கை எழிலுடன் காட்சிக் கோணங்களை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அமர்கீத். எஸ் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

எடிட்டர் வெற்றி சண்முகம் கவனம் செலுத்தி ஷார்பாக கொடுத்திருக்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் கிராமத்தில் நடக்கும் திருட்டு, கொலை, அதை விசாரிக்க

வரும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்,

அப்பாவிகள் தண்டிக்கப்படலாம் என்பதை திரைக்கதையமை
த்து திருந்தி வாழ நினைக்கும்

இளைஞனின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அவனின் உரிமைகள் பறிக்கப்பட்டு

நிர்கதியாக நிற்கும் அவலத்தையும், பறி போன காதல், பழி வாங்குதல் என்பதை

மையமாக வைத்து இயக்கியிருக்கும் இயக்குனர் சுவாரஸ்யமா கொடுத்துள்ளார் .

இயக்குனர் ஏபிஜி. ஏழுமலை.
மொத்தத்தில் ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில்

அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர் இணைந்து

தயாரித்திருக்கும் “மையல்” படத்தின் கடைசிகாட்சியில்.
மனதை நெகிழ வைத்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *