“ஸ்கூல்”
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :-யோகிபாபு, பூமிகா, சாவ்லா, கே.எஸ்.ரவிக்குமார், பகவதிபெருமாள்,
சாம்ஸ், நிழல்கள் ரவி, ஆர்.கே.வித்யாதரன்.மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- ஆர்.கே.வித்யாதரன்
மியூசிக் : – இளையராஜா.
ஒளிப்பதிவு:-ஆதித்யா கோவிந்தராஜ்.
படத்தொகுப்பு:-ராகவ் அர்ஸ்
தயாரிப்பாளர்கள் :- குயின்ட்யூம் பிலிம் ஃபேக்டரி – ஆர்.கே. வித்யாதரன்.
இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. இந்த பள்ளி. முதன்மைக்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர்
பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்தி
“மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்” என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால்,
இந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்களுக்கு, எதிர்மறை
சிந்தனைக்கு அடிமை யாகவும் ஆளவதோடு, சாதி,
மத பிரிவினையோடு வெற்றி மட்டுமே வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனால் அந்த புத்தகத்தை மர்மமான முறையில்
எரிக்கப்படுவதுடன் பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலரும்
உயிரிழக்கவும் செய்கிறார்கள்.
இதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத உருவம் என்று பள்ளி
ஊழியர்கள் சொல்வதை காவல்துறைஅதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் அதை ஏற்க மறுத்து, அதன்
பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை மேற்க் கொள்கிறார்.
ஆனால், அங்கு நடக்கும் மர்மமூடிச்சிகளின்.
சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில், பள்ளியில் இருக்கும் அமானுஷய தீயசக்திகள்
குறித்து சாமியார் ஆர்.கே.வித்யாதரன் கண்டுபிடிப்பது, மூலம் அந்த தீய
அமானுஷ்யம் தீயசக்தி யை வரவைத்து எதற்கு இப்படி செய்கிறார்கள்,
என்று கேட்க முயற்சிக்கிறார்.
இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் பள்ளியின் முன்னாள்
ஆசிரியர்களான யோகி பாபு மற்றும் பூமிகா சாவ்லா, அந்த பள்ளிக்கு மீண்டும்
வரவைத்து, அவர்களை பார்த்ததும் அந்த
அமானுஷ்ய தீய சக்திகள் அமைதியாகின்றன.

அவர்கள் யார்? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள்?
என்பதை, வெற்றி, தோல்வியை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்ற
அறிவுரைகள் மாணவர் மாணவிகளுக்கு
கூறும் விதமாக சொல்வதே “ஸ்கூல்” இந்த திரைப்பட கதைக்களம்…
ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, காமெடியை அளவாக எடுத்திருக்கிறார்.
இதுல குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்த்துள்ளார்.
பூமிகா சாவ்லாவுக்கு இதுல நிறைய வேலைகள் இல்லை,
வெற்றி மற்றும் தோல்வியை மட்டும் குறிக்கோளாகும்
வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும்,
என்ற அறிவுரையை அழுத்தமாக பதிவு
செய்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை
ஆசிரியராக நடித்துள்ளார். பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக
நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில்
நடித்துள்ளார் நிழல்கள் ரவி,
உலகநாதசுவாமியாக
நடித்திருக்கும் இயக்குநர்
ஆர்.கே.வித்யாதரன், ஆசிரியைகள் வேடத்தில் நடித்துள்ளார்
இரண்டு நடிகைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வேடத்தில்
நடித்திருப்பவர்கள் என அனைவரும் கொடுத்த பங்கை சிறப்பாக நடிப்பில்
வேலையை குறையில்லாமல் செய்துள்ளார்கள்.
இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் வரிகளில் அனைத்தும் திரும்ப
திரும்ப கேட்கும் அளவுக்கு ரகமாக இருக்கிறது.
பின்னணி இசை அளவு.
ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ், பள்ளி வளாகத்திலேயே
முழுமையாக படத்தையும் காட்சிப்படுத்தி, வகுப்பறை காட்சிகளை படமாக்கியுள்ளார்.
படத்தொகுப்பாளர் ராகவ் அர்ஸ், காட்சிகளின் நீளமான படத்தில் குறைவு செய்து இருக்கலாம்.
எழுதி இயக்கியுள்ள ஆர்.கே வித்யாதரன், அறிவு போதிக்கும் பள்ளியில்
அமானுஷ்யம் தீயசக்தியை என்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் கதையை சொல்லியிருக்கும்
பின்னணியில் மாணவ மாணவியர் களுக்கும் சிறப்பான அறிவுரை வழங்கியிருக்கிறார்.
எப்போதும் வெற்றி, தோல்வியை மட்டும் என்ற குறிக்கோளாக
பயணிக்காமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொண்டு பயணித்தால்,
படிக்கவில்லை என்றால் சாதிக்க முடியும், என்ற
நம்பிக்கையை மாணவர்களிடம் மிக அருமையாக விதைத்துள்ளார்.
கருத்து மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான
அனைத்தும் புதிய அரப்பணிப்புடன் வசனங்கள் பாராட்டும்படி இருக்கிறது.
படம் பார்த்ததில் “ஸ்கூல்” திரைப்படம் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சக்சஸ் தரும் அறிவுரைகள். இது ஒரு தரும் படைப்பு…