போட் திரை விமர்சனம் !!

Share the post

போட் திரைப்பட விமர்சனம் …

பிரபா பிரேம்குமார் கலைவாணி தயாரித்து யோகிபாபு , கெளரிகிஷன், மதுமிதா, எம்.எஸ் பாஸ்கர் , சின்னி ஜெயந்த், சாம்ஸ் ,
லீலா பாட்டி இவர்கள் நடித்து சிம்பு தேவன்.இயக்கிவெளிவந்திருக்கும் படம் போட்

மியூசிக் :- ஜிப்ரான்

ஒளிப்பதிவாளர் :- மாதேஷ் மாணிக்கம் ,

இயக்குனர் சிம்பு தேவன் இந்தப் படத்தில் ஒரு மீனவனின் கதையை நான்கு திசைகளிலும் கடல் வழிப் பாதைப் பயணமாகக் கடல் வழியாகக் கதையை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

‘நகைச்சுவை நடிகர்களை வைத்து அவர்களை கதாப்பாத்திர கதாநாயகர்களாக கதையை பயணிக்கும் போது நமக்கும் ரசிகளுக்கும் அளுப்பு தட்டாமல் காட்சிக்குகாட்சி விறுவிறுப்பாக நகர்த்து செல்கிறார் . அவர் எடுத்த எல்லா படத்திலும் எதாவது வித்தியாசத்தை காட்டக்கூடியவர்

எப்போதுமே .
வடிவேலு, பிறகு தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபுவை

கதாநாயகனாக்கி ஒரு புதிய வடிவத்தில்
நமக்கு கொடுத்திருக்கிறார்.

சென்னையில வாழ்ந்த மீன்வனாக கதாப்பாத்திரத்தை கையில் கொண்டு இயல்பான ஏதார்த்த

நடிகராகவும் நமக்கு இயற்கையான நடிப்பில் பாணியில் நடிக்கும்

நடிகராக மனதில் நிற்கிறார். இந்த போட், கதை கடல் தண்ணிரில் தாங்கி நிற்கிறது.

சிம்பு தேவன் எடுத்துக் கொள்ளும் காலக் கட்டம் இரண்டாம் உலகப்போர் நடந்து 40 ஆண்டு களில் தென்னிந்தியாவில் நடந்த

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் வெறுப்புக்கு ஆளாகி அதன் விளைவு

பிரிட்டிஷ் பிடியிலிருக்கும் இந்தியாவின் மீதான

ஜப்பானிய தாக்குதலாக வெடித்த நிலையில்

சென்னையில் நடக்கும் கதை இது.
மீனவரான யோகி பாபு

ஆங்கிலேயரிடம் கைதாகி இருக்கும் போது தன் தம்பியை மீட்க சென்னைக்

கடற்கரைக்குப் பாட்டியுடன் வருகிறார்.
அப்போது .வானில் விமானங்கள் பறந்து

வர, ஜப்பான் குண்டு வீசப் போகிறது. தெரிந்து எல்லோரும் தப்பிக்க கடலுக்குள்

சென்று விட்டால் விமான தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். என்று

தெரிந்துக் கொண்டு யோகி பாபு தன் பாட்டி மற்றும் தம்பியுடன்

படகை நோக்கிப் புறப்படும். போது, தம்பியை கைதி செய்து விடுகிறார்கள்.

என்ன செய்வது தெரியாமல் போட்டில் சென்று தப்பித்து செல்லுகிறார்கள்.

தஞ்சம் கேட்டு வட இந்தியரான சாம்ஸ்,சேட் மகள் கௌரி கிஷனுடன் சின்னி ஜெயந்த், ஷாரா,

தன் மகனுடன் மதுமிதா, எம் எஸ் பாஸ்கர் ஆகியோரை உதவி கேட்க தன் படகில் ஏற்றிக் கொண்டு

போகிறார். வழியில் படகில் ஆங்கிலேய போலீஸ் சூப்பரரின்டெண்ட்டை படகில் ஏறிக் கொள்ளகிறார்.

கடலுக்குள் அவர்கள் பயணப்படும் 48 மணி நேரம் தான் கதை.

பெருங்கடல் நீந்தி’ கரை சேர்ந்தார்களா என்பது கதை

ஒரு பக்கம் ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியர்கள்

அடிமைப்படுத்தப்படும் சூழ்ச்சி, அந்த சூழ்ச்சியில் இந்து – இஸ்லாம்

மதத்தினரிடையே ஏற்படக்கூடிய பிரிவினையை சொல்லி

இருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்.

படகில் உள்ளவரையும் கரிசனத்துடன் பார்க்கும் பிராமணப் பெண்ணான கௌரி கிஷனின் காதலுக்கு அவர் பாடும் பாடல் காதுக்கு இனிமைத் தருகிறது .

எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் , சாம்ஸ் மூவரின் நடிப்பு அவர்களது பாத்திரங்கள் சிறந்த ரசனை.

படகிலிருந்து மூவர் கடலில் இறங்கினால்தான் மூழ்காமல் தப்பிக்கும்

முடியும். என்ற நிலையில் தன் உயிரையும் , குழந்தை உயிரையும் துறக்க மதுமிதாவை நினைக்கும் போது படத்திற்கு பலம் .

இர்வினாக நடித்த வெள்ளைக்காரர் ஜெஸ்ஸி யின் நடிப்பும் சிறப்பு .

பெருங்கடலைத் என்னால் நீந்த முடியும் என்று சொல்லும் மீனவ

பாட்டி லீலாவை மனதாரப் பாராட்டலாம்.

எலியையும் கூட நடிக்க வைத்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

2- மணி நேரம் திரையில் போகக் கூடிய படத்தை நாள் முழுவதும் படகின் கடல் பயணத்தை எப்படித்தான் இயக்கினரோ சிம்புதேவன்.

கடலில் நடக்கும் உண்மை சம்பவ மாதிரி கதாப்பாத்திரத்தை

கற்பனைக் கலந்துக் கதையை வைத்து என்னால் எடுக்க முடியும் என்ற அளவிற்கு

நிரூப்பித்துக்
காட்டியிருக்கிறார்.

சிம்பு தேவனை அவரைப் பாராட்டியாக வேண்டும். முதல் வேகம் எடுக்கும்

திரைக்கதை படம் முடியும் வரை படகைச் வேகத்திலேயே ஓட்டிச் சென்று இருக்கிறார்.

கடலுக்குள் படமான எல்லாக் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்

ஒளிப்பதிவாளர் . மாதேஷ் மாணிக்கத்தின் திறமையை , ஒரு பிரேமுக்குள்ளேயே பயணப்படும் .படத்தின் பல்வேறு
உணர்வுகளை இயற்கை வண்ணத்தில் தெறிக்கும் வகையில் ஒளிப்பதிவு.

இசையமைத்திருக்கும் ஜிப்ரானின் திறமையையும் பாராட்ட

வேண்டும் .அந்த கர்நாடக பாடல் தனிப் பாராட்டுகள் ..!

இந்த சின்னப் படகுப் பயணம் இந்திய சுதந்திரம் எப்படிப்பட்ட

போராட்டப் பெருங்கடலை எதிர் கொண்டு கடந்து கரை

சேர்ந்தது என்பது தான் சிறப்பு .

போட் , நம்மை எல்லோரையும் கரையை சேர்த்த பிறகும் மீண்டும் அதே கடல் நீரில் தான் மிதக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *